உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்

2 ஆண்டுகளில் 25 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நான் முதல்வன் திட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார். சென்னை நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தின் எட்டாவது தளத்தில், 8.78 கோடி ரூபாயில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை, அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். நான் முதல்வன் திட்டம் வாயிலாக, திறன் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவர்கள் 700 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 'ஸ்கவுட் திட்டம்' தொடர்பாக, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும், டெக் மகேந்திரா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது: தமிழக மாணவர்களின் திறனை மேம்படுத்த, திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திறன் பயன்பாடு என்று, நான் முதல்வர் திட்டம் இன்று பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறது.சர்வதேச திறன் போட்டியில் உலக அளவில் பங்கேற்று, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் பதக்கம் வென்று, மாநிலத்திற்கு பெரிய பெருமை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு, நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த வாய்ப்பை, இந்தாண்டும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், 25 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். நம் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ், அரசின் துாதர்கள் நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

duruvasar
பிப் 17, 2024 15:21

50 லட்சம்ம்னு அடச்சிவிட்டாலும் யாரரிடம் கண்ணகிக்கு இருக்கிறது. நான் எதார்த்தத்தை சொன்னேன் . இலாகா இல்லாத அமைச்சர் அய்யாவு ஐயா கோபித்துக்கொள்ளப்போகிறார்.


Mohan das GANDHI
பிப் 17, 2024 15:01

வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குதுன்னு இந்த லூசு சொல்லுது கேனை சில திமுக 200 ருபிஸ்,பட்ட சாராயம், இலவச பிளாஸ்டிக் சாமான்கள் பெற்ற முட்டாள்கள் ஆதரவாளர்கள் கேக்குது ? தமிழ்நாடு வளராத காரணம் DMK திருடர்கள் ஆட்சியில் தமிழகம் எப்படி வளரும் ? இந்தியாவிலேயே பணம் பெற்று ஒட்டு (விற்கும்)போடும் சில படிப்பறிவற்ற மக்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் கேவலம் இவர்களே ? ? ?


Mohan das GANDHI
பிப் 17, 2024 14:34

RED GIANT MOVIES MAFIA UDHAYANIDHI STALIN IS A BIG LIAR. HE IS RUNNING BACK OF SOME KERALA MALAYALAM ACTRESSES AND SPENDING MONEY TAMILNADU GOVERNMENT GAJANA AS LOOTING TAASMAAK SARAYAM 43000 CRORES RUPEES THAT HIS PARTY MINISTER STRAIGHT FORWARD ONLY ONE PERSON IN DMK EDUCATED MR.PTR TOLD TO THE JOURNALISTS AND TV TOO. UDHAYANIDHI DOES N'T KNOW ANYTHING ABOUT POLITICS UNALPHABET HE MAKE CONFUSION AND ALSO TENSION INBETWEEN HIS DMK MINISTERS AND MLA'S IS REALITY. THIS 2024 MP ELECTION THE NUMBER ONE LIAR WIG STALIN DMK WILL NOT GET EVEN DEPOSIT MONEY IS CONFORMED BY PEOPLE OF TAMILNADU. DMK IS LIARS PARTY. NO ONE BELEIVE THESE டம்ளக் CORRUPTED MINISTERS PAROLES. JAI HIND.


kulandai kannan
பிப் 17, 2024 14:24

நான் முதல்வன் திட்டமே டுபாக்கூர்தான். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் பெற்ற பணி ஆணைகளை, இவர்கள் வழக்கம்போல் போஸ்டர் ஒட்டிக் கொள்கிறார்கள்.


sankar
பிப் 17, 2024 12:39

அவுங்க எல்லாம் துபாய்ல, சார்ஜாவில் , அபுதாபிலே, சந்திர மண்டலத்துல இருக்காங்க போல


Balasubramanyan
பிப் 17, 2024 12:18

I cannot understand about this NANMUTHALVAM. FOR WHAT IT IS STARTED,HOWMANY PERSONS ACTUALLY BENEFITEDWILL HE GIVE IN NUMBERS. WHY HE LIMITED TO 25 LAKHS.HE CANSAY 25CRORES.WEHAVE TO BELIEVE.. ALL ROADS ARE IN VERYBAD CONDITION. NODRAINAGE CHANNEL IS PROPER. YESTERDAY I saw an fountain at Royapettah It was due to Udhayanithi Stalin great efforts. Iwanted to see the fountainworking. But nothing. That area is completely choked with debris.That is the real face.


T.sthivinayagam
பிப் 17, 2024 10:27

ஆண்டுக்கு ஆண்டு ஹரிதுவாரில் சன்னியாசிகள் அதிகமாவதாக உத்ரகாண்ட் ஆரிய மாடல் அரசு கறிவுள்ளது


Anand
பிப் 17, 2024 10:23

உங்களால் பயன் அடைந்தவர்கள் பலகோடி பேர் இருக்க வெறும் இருபத்தைந்து லட்சம் என மிகவும் குறைத்து கூறுவது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது, எவ்வளவு ஒரு தன்னடக்கம், இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு அறிவா....


vijai
பிப் 17, 2024 11:27

நீங்கள் சிறு வயது என்று சொன்னீர்கள்


Krishna Gurumoorthy
பிப் 17, 2024 10:01

திறன் மேம்பாட்டு பயிற்சி செலவுகள் எல்லாம் மத்திய அரசின் பணம் ஸ்டிக்கர் மட்டுமே இவர்கள் செலவு


நரேந்திர பாரதி
பிப் 17, 2024 09:48

''நான் முதல்வன் திட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்''... கரெக்ட்...பயனாளர்கள் எல்லோரும் யாருன்னு பாத்தா.... கட்ட பஞ்சாயத்து கும்பல் (கவுன்சிலர்), வட்டம், சதுரம், முக்கோணம்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை