உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர் 3 பேர் மயக்கம்

உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர் 3 பேர் மயக்கம்

சென்னை:பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் , 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், மூன்று ஊழியர்கள் மயங்கிய நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போராட்டம் குறித்து, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரி, மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். அரசு தரப்பில் அதிகாரிகளும், அமைச்சரும் பேச்சுக்கு கூட அழைக்காதது, தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றியதாக, தி.மு.க.,வினர் வீண் விளம்பரம் செய்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதியில் பெரும்பான்மையை முதல்வர் மறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூலை 26, 2025 07:10

நேர்மையாக கடமைகளை செய்யாமல் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என்பவர்களெல்லாம் வெட்கம் மானம் இன்றி அரசு ஊழியர்கள் நாங்கள் என கூறிக் கொண்டுள்ளனர்.இவர்கள் பணியில் இருக்கும் பொது லஞ்சம் பெற்று சேர்த்து வைக்கும் சொத்துக்கள் பல தலைமுறைகளுக்கு ஆகும் என்ற நிலை உள்ள பொது இவர்களுக்கு ஏன் ஓய்வூதியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை