உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை தீபாவளி; சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

நாளை தீபாவளி; சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

சென்னை; சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர்.தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ee2fehzm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் புறநகர் பஸ் நிலையங்களில் இருந்து ஏராளமான பஸ்களில் அவர்கள் சென்று வருகின்றனர். அதன்படி கடந்த 3 நாட்களில் மட்டும் 6,15,922 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கின்றனர்.அக்.16ம் தேதி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2853 பஸ்களில் 1,28,275 பேரும், மறுநாளான அக்.17ம் தேதி இயக்கப்பட்ட 4926 பஸ்களில் 2,56,152 பயணிகளும் சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களை விட நேற்று மட்டும் மொத்தம் 4926 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் 2,56,152 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்து இருக்கின்றனர்.ஒட்டு மொத்தமாக 3 நாட்களில் மட்டுமே 6,15,922 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். நாளைய தினம் (அக்.20) தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
அக் 19, 2025 13:24

தாம்பரம் செங்கல்பட்டு அல்லது அரக்கோணம் தாண்டி ஒரு சாடலைட் நகரம் உருவானால், தமிழகம் முன்னேறி விடும், சென்னை சிங்காரமாகி விடும். விரும்பினால் புதுவையை இணைத்து கொள்ளலாம். யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கு 2026 தேர்தல் வெற்றி நிச்சயம்


பிரேம்ஜி
அக் 19, 2025 13:02

எந்த சிக்கலும் இல்லாமல் அரசு தீபாவளி போக்குவரத்து ஏற்பாடு செய்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்!


ஆரூர் ரங்
அக் 19, 2025 13:35

பல பேர் ஆம்னி பஸ் டிக்கெட் விலையைக் கேட்டு ஊருக்குப் போற ஆசையையும் விட்டு விட்டதால்தானே?


Sri@datamail.in
அக் 19, 2025 12:24

clean சென்னை


திகழ்ஓவியன்
அக் 19, 2025 12:04

இந்த வருடம் எந்த வித சிரமம் இன்றி அரசு ரொம்ப நேர்த்தி யாக ஏற்பாடு செய்து இருந்தது என்று மக்கள் பேட்டி கொடுத்ததை பார்க்கும்போது சந்தோஷம் தான் ஆனால் என்ன ஏதாவது கஷ்டம் என்று வரும் கேள்வி கேட்கலாம் என்று எண்ணி இருந்த எதிர்கட்சி ஓவா வுக்கு எல்லாம் கவலை


Sudha
அக் 19, 2025 14:16

இந்த வருஷம் என்ன ஸ்பெஷல் னா, 2026 எலெக்ஷன்ஸ் வருது. 200 ரூபாயை கொடுக்க வேண்டிய நேரம் வந்துட்டுது. கைல இருக்கிற மொத்த பணம், 2 கோடி பேருக்கு போதுமான்னு கணக்கு போடணும், மீதி அடாவடியிலே mudichidalaam.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை