உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 68,000 ஓட்டு சாவடியிலும் மனதின் குரல் நிகழ்ச்சி

68,000 ஓட்டு சாவடியிலும் மனதின் குரல் நிகழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் உரையாற்றுகிறார்.அதில் அவர், விளையாட்டு, சுயதொழில் போன்றவற்றில் சாதித்தவர்களை பாராட்டுகிறார். குறிப்பாக, சாதித்த ஏதேனும் ஒரு தமிழரை பற்றி தொடர்ந்து பேசுகிறார். வரும், 25ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசுகிறார். இது, லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பேச்சாக இருப்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கேட்கும் வகையில், மனதின் குரல் நிகழ்ச்சியை, 68,000 ஓட்டு சாவடிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுமாறு, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுக்கு, தமிழக பா.ஜ., உத்தரவிட்டுள்ளது.மேலும், அதில் பொது மக்கள் பங்கேற்ற பின், அவர்களுடன் புகைப்படத்தை எடுத்து, கட்சி தலைமைக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
பிப் 17, 2024 18:39

சிலபல ஆதரவாளர்கள் தவிர இங்கு தமிழ்நாட்டில் வேறு யாரும் இவருடைய மன்கிபாத் பேச்சைக் கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது என்பது வேறு விஷயம்!


A1Suresh
பிப் 17, 2024 12:45

உங்களுக்கு தெரியுமா? "மன் கீ பாத்" நிகழ்ச்சியினால் பல்வேறு துறைகளில் சேவைகள், சாதனை புரிந்த ஏழ்மைநிலை கைவினைஞர்கள், உழைப்பாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது கிட்டியுள்ளது.


A1Suresh
பிப் 17, 2024 12:42

ஹிந்தி புரியாத டம்ளர்கள் "மன் கீ பாத்" என்றால் என்னவென்றே தெரிவதில்லை. நாட்டின் பல்வேறு சாதனைகளை பேசுவது. பாமர மக்கள் தமது மனுக்களை பிரதமரிடம் எழுத கோருவது. தாம் செய்த தீர்வுகளை உதாரணங்களால் விளக்குவது. பாமரமக்கள் செய்யும் சாதனைகளை பிறரறிய செய்வது.


A1Suresh
பிப் 17, 2024 12:39

"ஏஐ" என்னும் செயற்கை நுண்ணறிவு கொண்டு பிரதமர் பேசும் "மன் கீ பாத்" நிகழ்ச்சியினை தமிழ், மலையாளம் என்று பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பினால் அனைத்து மாநில மக்களும் தம்தம் மனுக்களை பிரதமருக்கு அனுப்பி பலனடைவார்கள்.


A1Suresh
பிப் 17, 2024 12:37

"மன் கீ பாத்" கேட்ட டெல்லியில் வாழும் எட்டு ஏழை இஸ்லாமிய சிறுமி தனக்கு இதயநோய் இருப்பதையும் தனது பெற்றோர் அறுவை சிகிச்சையோ, மருத்துவ உதவி செய்யவோ திண்டாடுவதை பிரதமருக்கு எழுதினாள். கருணைகூர்ந்து பிரதமர் சிகிச்சையளித்தார். ஜெய் மோடி சர்க்கார்.


A1Suresh
பிப் 17, 2024 12:35

"மன் கீ பாத்" கேட்ட ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் சாதாரண ஏழை காஷ்மீர் சிறுமி, பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாள். தனது பள்ளிக்கூடம் எப்படி கேட்பாரற்று இழிநிலையில் இருக்கிறது என்று வீடியோவும் எடுத்து அனுப்பினாள். உடனே அப்பள்ளிகூடத்தினை ஆய்வு செய்து நவீன கட்டிடங்களை கட்டிக்கொடுத்தார் கருணையுள்ள பிரதமர்ஜி.


A1Suresh
பிப் 17, 2024 12:33

"மன் கீ பாத்" மூலமாக மாண்புமிகு பாரதபிரதமர் நாட்டின் மூலைமுடுக்குகளில் நடக்கும் பாமரர்களின் சாதனைகளை பேசுகிறார். கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்கிறார். வீட்டிற்கு நேரில் வரவழைத்து பாராட்டுகிறார். கடிதங்களில் வரும் மனுக்களை பரிசீலித்து தீர்த்துவைக்கிறார். இவ்வாறாக, "நான் என்னவெல்லாம் மனுக்களை தீர்த்துவைத்தேன்" என்று "மனதின் குரல்" நிகழ்ச்சியில் பேசுகிறார். அவர் கடந்தாண்டுகளில் பேசிய உரையாடல்களையும், மூன்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர்.


hari
பிப் 17, 2024 12:24

.. special reward. 100rupees extra


Lion Drsekar
பிப் 17, 2024 11:39

மனிதன் குரல் ஒருபுறம் ரேடியோவில் ஒலிக்கிறது . இங்கு நம் மா..லில் மூன்று குரல்கள் அவர்கள் புகைப்படத்துடன் ஆடியோ ஒலி பரப்பிக்கொண்டு வருகிறார்கள் அந்த மூவரின் குரலில் யார் வேண்டுமானாலும் எதுவும் பேசலாம் என்றும், அந்த அளவுக்கு இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது என்று புறப்பட்டு வருகிறது . எந்த ஒரு முகாந்திரமும் இன்றி இந்த மூவரின் குரல் மற்றும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெகு வேகமாக புறப்பட்டு வருவதன் காரணம் புரியாமல் இருக்கும் நிலையில் , சட்டெனெ நினைவிக்கு வந்தது அண்ணாமலை ஆடியோ ரீலீஸ் ??? ஆகா அவர் வெளியிட்ட அணைத்து குரலும் இதே போன்றுதான் ஜோடனை செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க தொழில் துறையில் இவ்வளவாறு வளர்ச்சி என்று செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது . அன்றும் விஞ்ஞானம் , இன்று அதை தொழில் நுட்பம் என்கிறார்கள், வாழ்க அரசியல் வளர்ச்சி வளர்க ஜனநாயகம், வந்தே மாதரம்


Apposthalan samlin
பிப் 17, 2024 10:19

என்ன தான் கெஜகர்ணம் அடித்தாலும் தமிழ் நாட்டில் பூஜ்யம் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை