உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குளித்தலை அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.5.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மாநில அரசு என அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bbpnops4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம், 3 ஷிப்ட்களுக்கு கண்காணிப்பில் ஈடுபட 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்ய பறக்கும் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனை

கரூர், குளித்தலை அருகே மாவட்ட எல்லையான மருதூர் சோதனைச் சாவடியில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரின் காரை சோதனை இட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 4,80,000 பணம் கொண்டுவரப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து, திருச்சி மணப்பாறையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் காரை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி 1,03,500 பணத்தினையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் உரிய ஆவணங்களின்றி இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5, 83,500 பணத்தினை குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி வசம் ஒப்படைத்தனர்.குளித்தலை - கரூர் மெயின்ரோட்டில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டதில் திருச்சியைச் திரு.விஜயகுமார் ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தொகை பாதுகாப்புக்காக குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதுகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, உரிய ஆவணம் இன்றி பணத்தை லாரியில் எடுத்து சென்ற ரூ 2.51 லட்சம் பணத்தை வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பறிமுதல் செய்தனர். மேட்டுப்பாளையத்தில் வாகன சோதனையின் போது, உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.6.22 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

D.Ambujavalli
மார் 18, 2024 04:17

இந்த நாடகங்கள் எல்லாம் ' நாங்கள் ரொம்ப சின்ஸியராக்கும்' என்று தேர்தல் கமிஷன் மக்களுக்கு காட்டும் கண்துடைப்பு பணமெல்லாம் எப்போதோ பட்டுவாடாவுக்காக பத்திரமாக வைத்திருப்பார்கள் இது ஆணையத்துக்கு தெரியும் மக்களும் முட்டாள்கள் இல்லை


M Ramachandran
மார் 18, 2024 00:01

இதெல்லாம் ஜுஜுபி 6 மாதத்திற்கு முன்பேயே அந்த அந்த தொகுதிகளில் பணத்தைய்ய பக்குவமா பதுக்கிடிச்சி இதில் புத்திசாலி தீ மு க்கா.


Godfather_Senior
மார் 17, 2024 17:52

அதுக்கெல்லாம் நம்ம கழக கண்மணிகள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் ஆளுக்கு நாற்பத்தியொன்பதாயிரம் மட்டுமே நூறு கழக தொண்டர்கள் வரிசையாக எடுத்துச்சென்று வீடு வீடாக பட்டுவாடா செய்வார்கள் விக்ஞான ரீதியில் குற்றங்களை செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே


Selvakumar Krishna
மார் 17, 2024 16:44

அந்த கூத்தெல்லாம் மாத்திரம் வைத்துக்கொள்ளவும்


duruvasar
மார் 17, 2024 15:32

நேற்றிலிருந்தே உபிகள் உசாராக இருப்பார்கள். ஓட்டு பதிவு முடிந்த ஏப்பிரல் 19 ந்தேதியிலிருந்து முடிவு வரும் ஜுன் 4 ந்தேதி வரை கன்டையினரை துரத்தி பிடிக்கும் வேலை.


N SASIKUMAR YADHAV
மார் 17, 2024 14:44

இதற்கெல்லாம் மூலகாரணம் அஞ்சாநெஞ்சனின் திருமங்கலம் ஃபார்முலாதான் . இனிமேல் நிம்மதியாக எங்கும் வண்டி ஓட்டிக்கிட்டு போகமுடியாது . ஆக அனைத்து விஞ்ஞானரீதியான ஊழல்களை கொண்டுவந்தது திராவிட மாடல் களவானிங்கதான்


முருகன்
மார் 17, 2024 13:02

அப்பாவிகளின் பணத்தை பிடிப்பதில் இனி வேட்டை வேகமாக நடக்கும் பிடிக்க வேண்டிய பணம் என்றுமே பிடிபடாது


PV, முத்தூர்
மார் 17, 2024 12:58

அடேங்கப்பா, எவ்வளவு பெரிய தொகை. சாமானியனை பிடித்து சாம்பராணி காட்ரகதை. தமிழ்நாட்டுல எப்படியெல்லாம் பணம்பட்டுவாட நடக்குதுங்கறது, பெறந்தகுழந்தைக்குகூட தெரியும். சரி, இதுவரை எத்தனை அரசியல் கட்சியை தடைசெய்தீர்கள்??


suresh
மார் 17, 2024 12:46

கைப்பற்றிய பணத்தை பத்திரமாக பாது காக்கவும். இல்லையேல்கழக கண்மணிகள் அடித்து கொண்டு சென்று விடுவார்


bal
மார் 17, 2024 12:32

சும்மா போகிறவர்களை நோண்டி நொங்கெடுப்பார்கள் இவர்கள். உண்மையா போக வேண்டியது பிடிக்க வக்கில்லை..பின்னே எப்படி மக்கள் குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டுக்கு திமுகவை ஜெயிக்க வைத்தனர்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ