8 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு
சென்னை : தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா - மதுரை உட்பட எட்டு சிறப்பு ரயில்களின் சேவை, மே முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காச்சிகுடா - மதுரை இடையே திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்ரல் 7 முதல் மே 5 வரை நீட்டித்து இயக்கப்படும். மதுரை - காச்சிகுடா இடையே புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 9 முதல் மே 7 வரை நீட்டித்து இயக்கப்படும்மஹாராஷ்டிரா மாநிலம், நான்தேட் - ஈரோடுக்கு வெள்ளி கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் ஏப்., 4 முதல் மே 2 வரையிலும், ஈரோடு - நான்தேட்டுக்கு ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 6 முதல் மே 4 வரை நீட்டிக்கப்படும்காச்சிகுடா - நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்லும் சிறப்பு ரயில், ஏப்., 4 முதல் மே 2 வரையிலும், நாகர்கோவில் - காச்சிகுடாவுக்கு ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 6 முதல் மே 4 வரையிலும் நீட்டிக்கப்படும்தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் அருகில் உள்ள செர்லபல்லி - விழுப்புரம் இடையே வியாழன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், ஏப்., 3 முதல் மே 1 வரையிலும், விழுப்புரம் - செர்லபல்லிக்கு வெள்ளி கிழமைகளில் செல்லும் ரயில், ஏப்., 4 முதல் மே 2 வரையிலும் நீட்டித்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.