உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்றென்றும் ஜெயலலிதா பெயர் சொல்லும் இலவச லேப்டாப் திட்டம்!

என்றென்றும் ஜெயலலிதா பெயர் சொல்லும் இலவச லேப்டாப் திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்பதவிக்காலம் முடிந்து, தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 'என்ன தான் திட்டத்தின் பெயரை மாற்றினாலும், முதல்வரும், அமைச்சரும் முன்னின்று வழங்கினாலும், இந்த திட்டம் ஜெயலலிதாவின் பெயரைத்தான் சொல்லும்' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

பேருதவி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது; 2011 செப்.,15ம் தேதி, ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 52.35 லட்சம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட்டன. பயனுள்ள மென்பொருட்களுடன் வழங்கப்பட்ட இந்த லேப்டாப்கள் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள், அவர்களது பெற்றோர் மத்தியில் இந்த லேப்டாப் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

2021ல் நிறுத்தம்

தமிழகம் இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருப்பதற்கு, இந்த திட்டத்தையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும். இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது, இந்தியாவிலேயே அது தான் முதல் முறை என்பதால், பல்வேறு மாநிலங்களும் இந்த திட்டத்தை கூர்ந்து கவனித்தன. தமிழகத்தை பின் தொடர்ந்து, உ.பி., கோவா, டில்லி, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களும், இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கின. இப்படி பிற மாநிலங்களிலும் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை, 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்தி வைத்து விட்டது. இது பற்றி அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பியும் திமுக அசரவில்லை.

கிடப்பில்...!

தற்போது சட்டசபை தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, மாணவர், பெற்றோரின் ஓட்டுகளை கவரும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முன் வந்துள்ளது. அதன்படி 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. 'நல்ல திட்டம் என்று ஆளும் கட்சி கருதும் பட்சத்தில் நான்காண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது ஏன்' என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், திட்டத்தை கொண்டு வந்த ஜெயலலிதாவை பாராட்டி வருகின்றனர்.

ஜெ.,வின் சிந்தனை

'ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நற்பெயர் கிடைக்கும் என்ற காரணத்தால் தான் இந்த திட்டத்தை திமுக முடக்கி வைத்திருந்தது என்றும் இணையத்தில் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், 'மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெ.,வின் சிந்தனையில் உதித்தது. நான்காண்டுகளாக இதை செயல்படுத்தாத முதல்வர் ஸ்டாலின், இப்போது தோல்வி பயத்தால், தந்திரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,' என்று தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம்

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டபோது திட்டத்தின் பெயர், 'அம்மா மடிக்கணினி திட்டம்' என்று பெயர் இருந்தது. இப்போது திட்டத்தின் பெயரை, 'உலகம் உங்கள் கையில்' என்று தமிழக அரசு மாற்றியுள்ளது. 'திமுக ஆட்சியில் கொடுத்தாலும், முதல்வரும், அமைச்சர்களும் முன்னின்று மாணவர்களிடம் கொடுத்தாலும், பெயரை மாற்றி வைத்தாலும், இந்த திட்டம் என்றென்றும் ஜெயலலிதாவின் பெயரைத்தான் சொல்லும்' என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ganesh
ஜன 08, 2026 07:06

பதவியில் இருந்தபோதே ஊழல் வழக்கில் சிறை சென்ற ஒரே முதல்வர் என்ற பெயரும் இவருக்கு நிலைக்கும்


குருநாதன்.J. மதுரை
ஜன 07, 2026 17:48

நல்ல திட்டம் பெயரை எதற்கு மாற்ற வேண்டும்


டி.சங்கரநாராயணன் ஈரோடு
ஜன 07, 2026 17:45

என்றென்றும் ஜெயலலிதா பெயர் சொல்லும் திட்டம் சத்தியமான வார்த்தைகளை சொல்லி இருக்கிறீர்கள் ஐயா


புண்ணியகோடி
ஜன 07, 2026 17:42

இன்று தான் தினமலர் ஜெயலலிதா திட்டத்தை பாராட்டி எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி


அப்பாவி
ஜன 07, 2026 16:59

வேலை தர துப்பில்லாத கூத்தாடிகள் லேப்டாப், சைக்கிள், கிரைண்டர், ஃபேன் நு குடுத்து கொள்ளையடித்தார்கள்.


SRIRAMA ANU
ஜன 07, 2026 16:49

ஒன்றிய அரசு தரவேண்டிய நிதி ஒழுங்காக கொடுத்து வந்து கொண்டிருந்தால் எல்லாம் நன்மைகளும் இந்த தமிழகத்துக்கு கிடைக்கும் என்பது நிதர்சன உண்மை. தமிழக தன்னைத் தானே செம்மைப்படுத்தி முன்னேறி தம் மக்களையும் வளமை படுத்த போராடிக் கொண்டிருக்கிறது. உண்மையாகவும் உறுதியாகவும் தற்பொழுது நடைபெறும் அரசு மிகச் சிறந்த அரசு.. குறைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை மத்தியில் உள்ளவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இங்கு மீண்டும் குலக்கல்வி குரு கல்வி என்று ஏழை மாணவர்களை படிக்க விடாமல் தான் செய்வார்கள். அவர்கள் தரவே சொல்கிறது தமிழ்நாடு எவ்வளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது முன்னே சென்று கொண்டிருக்கிறது என்பதை.. பிறகு எதற்கு இந்தக் கூப்பாடு.. தயவுசெய்து அவர்களை விடுங்கள் அவர்களும் இந்த தமிழகத்தை வெளிப்படுத்துவார்கள் யாரும் உங்க கூட செய்யாமல் இல்லை இப்பொழுது நடைபெற மத்திய ஆட்சி இறங்கினால் அவர்கள் செய்யும் ஊழல் மிகப்பெரிய அளவில் வெளிவரும்


sankar
ஜன 08, 2026 10:57

நிதி தாராளமாகவே கொடுத்து இருக்காங்க - சும்மா முட்டு கொடுக்க வேண்டாம்


தத்வமசி
ஜன 07, 2026 16:13

ஆயிரம் தான் சொன்னாலும், காமராஜர், எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவை நலத்திட்டங்களில் அடித்துக் கொள்ள முடியாது. காமராஜர் மாணவர்களை பள்ளிகளை நோக்கி பயணிக்கச் செய்தார். எம்ஜியார் மாணவர்களுக்கு மீண்டும் மத்திய உணவுத் திட்டத்தை அளித்து மாணவர்களின் கல்விக்கு உறுதி அளித்தார். ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் நிலத்தடி நீர் சேமிப்பு, ஆடு-மாடுகள் வழங்குதல், லேப் டாப், அம்மா உணவகம் இவைகளை கட்சி சாராத நபர்களும் கட்டாயம் வரவேற்பார்கள்.


Madras Madra
ஜன 07, 2026 15:08

காமராஜர் மத்திய உணவு திட்டம் MGR சத்துணவு திட்டம் ஆனால் அம்மா தாலிக்கு தங்கம் , இலவச சைக்கிள் , மடி கணினி திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் என்று மிக பெரும் சமூக புரட்சி செய்தவர் திமுக வை ஓட ஓட விரட்டி அடித்தவர் ராமனுக்கு கோயில் அயோத்தியில் கட்டாமல் அமிஞ்சிக்கரையிலயா கட்ட முடியும் என்று விட்டு கொடுக்காமல் பேசிய தலைவர் அம்மாவை தமிழகம் என்றும் மறக்காது


Sun
ஜன 07, 2026 15:06

நாலே முக்கால் வருடங்களாக உலகம் வேறொருவர் கையில் ! இப்பத்தான் உலகம் உங்கள் கையில்! எப்படியெல்லாம் பேர் வக்கிராங்க! ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ?


Senthoora
ஜன 07, 2026 14:56

இதுவரை அம்மா ஜெயலலிதா ஞாபகம், அவங்க கொள்கைகள் அண்ணாதிமுகாவுக்கு வரவில்லை, இப்போ லாப் டாப் திட்டம் வரும்போதுதான் ஞாபகம் வருது இவர்களுக்கு.


vivek
ஜன 07, 2026 15:43

ஆமாம் செந்தூரா...திமுக அதை காபி அடித்தவுடன் தோணுதா


SRIRAMA ANU
ஜன 07, 2026 16:51

தம்பி நாளை முக்கால் வருடம் போராடி தான் இந்த நன்மை எல்லோருக்கும் கிடைக்க செய்யப்பட்டிருக்கிறது.. உடனே துள்ளி குதித்து வந்து விடாதே


Senthoora
ஜன 07, 2026 17:03

காபி இல்லை, செய்ததை மாணவர்களுக்கு தொடருகிறது, அடுத்த ஆட்சி மாறினாலும் இதை செய்யணும் மாணவர்களுக்காக. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வாங்க, அதே ஆட்சிப்பிடிக்கவும் அதே, தம்பி விவேக், நான் அரசியல் சார்பாக இலாதவான், ஒட்டு உரிமை இந்தியாவில் இல்லை. சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ சொன்னது, ஒருவர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவரின் எதிர் கேள்விதான் என் பலம், தவறியதை சரி செய்து சாதனையாளராக இருக்கிறேன் என்று சொன்னார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை