UPDATED : டிச 08, 2024 06:05 PM | ADDED : டிச 08, 2024 04:33 PM
மதுரை: 200 தொகுதிகள் வெல்வோம் என்று தி.மு.க., கூறுவது இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை என்று அ.தி.மு.க,, மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=599vfbzd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாள வில்லை. எப்போதும் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறது. 200 தொகுதிகளையும் வெல்வோம் என்று தி.மு.க., சொல்வது இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை. பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்துவிட்டது.கூட்டணிக் கட்சிகள் நெருக்கடியால் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று நடிகர் விஜய் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.அவருக்கு யாரும் நெருக்கடி தரமுடியாது என்றாலும், மற்றவர்கள் கூறுகிறார்களே என்பதற்காக விலகி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.