வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எடுபுடி ஓரூ காமடி பீசு
திருப்பத்துார்: ''மதுரை மாநகராட்சி ஊழல் அம்பலமானதற்கு அ.தி.மு.க.,வே காரணம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தின்போது, திருப்பத்துாரில் அவர் பேசியதாவது: மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. துவக்கத்தில் முறைகேடு எதுவுமே நடக்கவில்லை என அடம் பிடித்தவர்கள், அ.தி.மு.க., முரண்டு பிடித்ததை தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் முறைகேடு கண்டறியப்பட்டு, அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., மண்டலக்குழு தலைவர் ஐந்து பேர், நிலைக்குழு உறுப்பினர் இருவர் ராஜினாமா செய்துஉள்ளனர். மதுரை தி.மு.க., மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரே ஊழல் செய்ததாக ஒப்புக் கொண்டு, தி.மு.க., அரசே அவர் களை கைது செய்துள்ளது. திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பங்கு பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, தி.மு.க., மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் கழிப்பறை சுத்தம் செய்ய நாளொன்றுக்கு 800 ரூபாய் என, 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துஉள்ளனர். டாய்லெட் கழுவுவதிலும் கூட, தி.மு.க., அரசு ஊழல் செய்து, ஊழல் நாற்றம் தமிழகம் முழுதும் வீசுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எடுபுடி ஓரூ காமடி பீசு