உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்

ஈரோடு: இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டை சிதறாமல் பெற, தி.மு.க.,வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் நேரடி சந்திப்பில் இறங்கிய நிலையில், அ.தி.மு.க., வலுவிழக்காமல் தடுக்க பழனிசாமி வழிகாட்ட வேண்டும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உட்பட பல கட்சிகள் புறக்கணித்ததுடன், தங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என வழிகாட்ட தவறியுள்ளனர்.தேர்தலில், 46 பேர் போட்டியிட்டாலும், தி.மு.க., - நா.த.க., கட்சிகள் மட்டுமே வாக்காளர்களை ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க.,வுக்கு இணையான ஓட்டு வைத்துள்ள அ.தி.மு.க., ஓட்டை சிந்தாமல் பெற, தி.மு.க., அத்தனை பணிகளையும் செய்கிறது.இதுபற்றி அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாக, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தது முதல், தி.மு.க., கூட்டணியினர், தங்கள் கூட்டணி ஓட்டுடன், அ.தி.மு.க., ஓட்டை பெற தனி கவனம் செலுத்துகின்றனர்.பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அ.தி.மு.க.,வின் பெயர், முகம் தெரிந்த நிர்வாகிகள் முதல், பகுதி செயலர்கள், மாவட்ட நிலை நிர்வாகிகள், முன்னாள் - இந்நாள் கவுன்சிலர்கள் என பட்டியல் பெற்று அவர்களது வீட்டுக்கே சென்று ஓட்டு சேகரிக்கின்றனர்.'தி.மு.க.,வின் பணபலம், ஆட்சி - அதிகாரத்தை கடந்த இடைத்தேர்தலில் காண்பித்ததால், புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம்' என்று பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தி.மு.க.,வுக்கு இணையாக உள்ள, அ.தி.மு.க.,வினர் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், என நேரிடையாக வழிகாட்டவில்லை. நோட்டோவுக்கு ஓட்டு போடுங்கள் என கூறுவது சரியான வழிகாட்டுதல் இல்லை என கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், அ.தி.மு.க.,வின் 95 சதவீத ஓட்டுகள் இம்முறை தி.மு.க.,வுக்கு செல்ல வாய்ப்புள்ளது.இதனால், தேர்தலின் கடைசி கட்டத்திலாவது, யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை பழனிசாமி சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
பிப் 02, 2025 14:45

நானறிந்தவரை நாம் தமிழர் கட்சி இதுவரை அதிமுகவை காரசாரமாகத் தாக்கிப் பேசவில்லை.. ஆகவே அதிமுகவினர் நாம் தமிழருக்கு வாக்களிப்பதே நியாயம் ......


sankar
பிப் 02, 2025 14:02

கழகம் நரித்தனத்தில் கில்லாடி


V வைகுண்டேஸ்வரன்
பிப் 02, 2025 12:00

என்ன வளம் எவ்வளவு இருக்கு??


Sundar R
பிப் 02, 2025 11:59

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு வரை அதிமுகவின் தலைவர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி. வி. சண்முகம், கே.பி. முனுசாமி ஆகியோர் திமுகவின் மீது பவுன்சராக போட்டார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எடப்பாடியார் அவர்கள் தமிழகத்தின் அன்னிய கட்சியான திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் தமிழகம் சீரற்ற, சீர்கெட்ட, சீரழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தினமும் திமுகவை எதிர்த்து கடும் விமர்சனங்களை எடுத்துரைத்தார். மொத்தத்தில் அதிமுக தலைவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தகனம் செய்யப் போகிறார்களா? அல்லது புதைக்கப் போகிறார்களா? என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்காளர்களும் திமுகவை ஒழிவாக்கி விட்டு, நாம் தமிழர் கட்சிக்குத் தான் தங்களுடைய ஓட்டுக்களை ரேகைப்படுத்துவார்கள் என்பதைச் சொல்லித் தெரியத் தேவையில்லை.


ஆரூர் ரங்
பிப் 02, 2025 11:24

21 ம் பக்க சீடர் பங்காளிகள் மூன்றாவதாக இன்னொரு கட்சி வளர்வதை ஏற்கமாட்டார்கள். கள்ளக்கூட்டு சேர்ந்து அழிப்பார்கள். மாறிமாறி கூட்டணி வைத்தே காங்கிரசைத் தேய வைத்தவர்கள்.


Laddoo
பிப் 02, 2025 10:51

த்ரவிஷா கொரோனா கிருமி பத்துத் தோல்விக்கு மட்டும் ஒட்டு போட்றாதீங்க


கல்யாணராமன்
பிப் 02, 2025 10:09

பாஜக, அதிமுக, தேமுதிக, அ ம மு க போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளதால் தொண்டர்களும் அனுதாபிகளும் ஓட்டு போடாமல் புறக்கணிக்க வேண்டும். இதை கட்சிகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


Kumar Kumzi
பிப் 02, 2025 09:34

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கூட்டமாச்சே இதிலென்ன குழப்பம் இருக்கு


Karuthu kirukkan
பிப் 02, 2025 08:18

புரட்சி தலைவர் வெளியிலே போயி கட்சி துவங்க காரணமே இந்த கட்டுமரம் தான். வாக்குகளே திருடர்களுக்கு போட்ட அந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆத்ம உங்கள மன்னிக்காது. எதிர்கால சந்ததிகளை நினைத்து வாக்கு செலுத்துங்கப்ப்பா, இல்லியின நாடும் நாமளும் நாசமா போயிருவோம்


Svs Yaadum oore
பிப் 02, 2025 07:44

..கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ..கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ... திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை