உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேருக்கு தண்டனை: மாஜி எம்.எல்.ஏ., சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேருக்கு தண்டனை: மாஜி எம்.எல்.ஏ., சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு

ஆம்பூர் : ஆம்பூர் கலவர வழக்கில், 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,வின் சொத்தை ஜப்தி செய்து, இழப்பை சரிசெய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா, 25. பள்ளிகொண்டாவில், தோல் பதனிடும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 2015- மே 24-ல் மாயமானார். அவரை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனி மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக, ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது, 26, என்பவரிடம், 2015 ஜூன் 15ல் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட ஆறு போலீசார் விசாரித்தனர். பின், அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y46r6iqm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஷமீல் அகமதுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை, 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, ஷமீல் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், எஸ்.எஸ்.ஐ., சபாரத்தினம், காவலர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய, அப்போதைய மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டிருந்தார். விசாரணையில், போலீசாரின் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2015- ஜூன் 27-ம் தேதி இரவு, 7:00 மணியளவில், ஆம்பூரில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு, ஷமில் அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்து, 'சஸ்பெண்ட்' செய்யக்கோரி கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியிலிருந்த வேலுார் எஸ்.பி., செந்தில்குமாரி மீது கற்கள் வீசியதில் அவர் காயமடைந்தார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில், 15 பெண் போலீசார் உட்பட, 91 போலீசார் படுகாயமடைந்தனர். கலவரத்தில், 11 அரசு பஸ்கள், 7 போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட, 30 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், 4 பைக்குகள் தீயிட்டும் கொளுத்தப்பட்டன. அன்றிரவு, 8:00 மணிக்கு தொடங்கிய கலவரம் நள்ளிரவு, 1:00 மணி வரை நீடித்தது. பின்னர், ஏழு கட்டமாக, கலவரத்தில் தொடர்புடைய, 185 பேர் மீது, 12 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.இந்த வழக்கில், திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி இன்று( ஆக.,28) தீர்ப்பளித்தார். இதில், விசாரணை நடந்த காலத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., அஸ்லாம் பாஷா உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வழக்கில் இருந்து 161 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 22 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. பைரோஷ் அகமது, இர்ஷாத் அகமது ஆகியோருக்கு, 14 ஆண்டு, ஆறு பேருக்கு, 7 ஆண்டு சிறை, மற்ற, 14 பேருக்கு ஓராண்டு முதல், 4 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட தலைமை காவலர் விஜயகுமார், பெண் காவலர் ராஜலட்சுமி ஆகியோருக்கு தலா, 10 லட்சம் ரூபாய், அரசு சாட்சிகளுக்கு தலா 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. கலவரத்திற்கு தலைமை தாங்கி, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக மனித நேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பாரதன்
ஆக 29, 2025 12:25

அமைதிக் கும்பலை விசாரிக்க யாருக்கும் உரிமை இல்லை. அமைதிக் கும்பல் சொல்வதும் செய்வதும் மட்டுமே செல்லுபடி ஆகும்.


பேசும் தமிழன்
ஆக 29, 2025 08:17

கலவரம் செய்த ஆட்களில்.. குறைந்தது 10 பேரையாவது சுட்டு கொன்று இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்த முறை கலவரம் செய்ய யோசிப்பார்கள். மாறாக கூலி உயர்வு கேட்டு போராட்டம் செய்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.


shakti
ஆக 28, 2025 23:06

பிறந்தநாளுக்கு அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்


ஆரூர் ரங்
ஆக 28, 2025 22:03

சிறைக்குள்ளேயே அயலக அணி துவக்கப்படும். சிறையிலுள்ள கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ ( வழக்கம் போல) ஜவாஹி நிதி திரட்டுவார்.


MUTHU
ஆக 28, 2025 18:59

இனிமேல் தான் பிரச்சினையே. சிறைக்குள் கும்பலாய் கொட்டம் அடிப்பார்கள்.


Siva Balan
ஆக 28, 2025 18:58

ஒரு சாதாரண தீர்ப்புக்கு 2000 போலிசார் பாதுகாப்பா...... இது தமிழ்நாடா அல்லது காட்டுமிராண்டிகள் வாழும் மாநிலமா....சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 28, 2025 18:40

அதெல்லாம் சரி. கடந்த 2015, மே, 24ல் மாயமான ஆம்பூர், வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பழனி மனைவி பவித்ரா, 25, கண்டுபிடிக்கப்பட்டாரா? அவரின் இன்றைய நிலைமை என்ன?


Amar Akbar Antony
ஆக 28, 2025 22:39

வலைத்தளத்தில் தெரிந்துகொள்க.


V Venkatachalam
ஆக 28, 2025 18:18

இது போல் ஒரு ஒற்றுமை இந்துக்களிடையே எப்போ வரும்? இந்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அவசியம் இந்த ஒற்றுமை வேண்டும்.


manu david
ஆக 28, 2025 18:10

பிரியாணி கலவர காரர் வியாபாரம் செய்வதை தவிர்க்கவும்.. மற்றவர்களின் குடும்பத்தைக் கெடுத்து, மற்ற மதப் பெண்களை மதம் மாற்றுவதும், அதே மதத்தில் குண்டுவெடிப்பு குற்றவாளியை ஆதரிப்பதும் அவர்களின் பழக்கம்..அவர்கள் உங்கள் அனைவருடனும் நல்லவர்களாக இருப்பார்கள், பின்னர் உங்கள் இடத்தில் வாழ பிரச்சனைகளை உருவாக்குவார்கள். முஸ்லிம் மதத்தினருடன் வாங்குவதை/வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்.. உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட விரும்பவில்லை என்றால், கிறிஸ்தவ / இந்து மத ணிகர்கள்டமிருந்து வாங்கவும் / வணிகம் செய்யவும்.


Natarajan Mahalingam
ஆக 28, 2025 18:00

நடந்த கலவரத்தை மேலோட்டமாக செய்தி போட்டு இருக்கீங்க. வருடங்கள் ஓடி விட்டது. உண்மையில் நடந்த விசயங்கள் ரொம்பவும் கொடுமையானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை