வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நிலமை சரியாகும் வரை நமது அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்கி, விலையை சீராக வைக்க உதவனும்.
அய்யா பெரியவர்களே நான் என்னவோ இதுநாள் வரை அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன் . ஆனால் திருவாளர் டிரம்ப் சர்வாதிகாரி மாதிரி இப்படி தன மனம் போன போக்கில் வரிகளை ஏற்றுவதும் இறக்குவதும் .... அமெரிக்காவில் ஜனநாயகம் இருக்கிறதா ??? டிரம்ப் ஜனநாயக வழிகள் பற்றி அறியாதவரா அல்லது என்னை ஒருத்தரும் ஒன்னும் - புடுங்க முடியாது என்கிற உயர்ந்த எண்ணம் போல இருக்கிறது . யாருப்பா அமெரிக்கா நிதி மந்திரி ?? மந்திரி சபை மாதிரி ஏதும் அங்கு இல்லை போல.... அமெரிக்கா மக்களை கஷ்டப்படற வேலையை செய்வதில் இருந்து அரசியல்வாதிகள் மடை மாற்றி விட்டனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இப்போ போய் ஜவுளி துறையில் வேலை செய் , மூளையை கசக்கி வேலையை செய் என்றால் என்ன ஆகும் .? சரி அது டிரம்ப்போட தலை வலி. ஏனய்யா கொஞ்சம் வருஷம் முன்னாடி எல்லா நாடுகளையம் கையெழுத்து போட வெச்ச W T A உலக வியாபார ஒப்பந்தம் என்ன காலாவதி ஆயிடுச்சா ??? ஐ நா சபை மாதிரி வெட்டி சமாச்சாரம் தானா ???
அமெரிக்காவை ஒதுக்கி, வேறு இந்தியாவுடன் நட்பு பாராட்டும் நாடுகளை அணுகி வியாபாரம் செய்வது நல்லது. பிறகு பாருங்கள் இந்த டிரம்ப் தானாகவே நம்மிடம் வருவான், வரிகளை குறைத்துக்கொண்டு.
டிரம்ப் அமெரிகாவில் பணவீக்கம் அதிகரிக்க தன்னாலியன்ற எல்லாவற்றையும் செய்கிறார். மற்ற நாடுகளுக்கு விதிப்பதை விட இந்தியத் தயாரிப்புகளுக்கு ஐந்து முதல் எட்டு சதவீதம் மட்டுமே அதிக வரி. இதை புத்திசாலித்தனமான PRODUCT MIX,POSITIONING மார்கெட்டிங் மூலமே சமாளித்து விடலாம். இழப்பு எப்படியும் வரி செலுத்தும் அமெரிக்க சாதாரண மக்களுக்கே. மேலும் நமது முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான செல்போன் மின்னணு சாதனங்கள், மருந்துகளுக்கு வரியில்லை என்பதனால் பாதிப்பு குறைவு. மாநில அரசின் கூடுதல் சலுகைகளை எதிர்பார்ப்பது வீண். தேர்தல் ஆண்டில் உதவவே மாட்டார்கள்.
அமெரிக்காவில் கனெக்டிகட் போன்ற மாநிலங்களில் துணிமில்கள் 1970 கள் முதல் மூடிக் கிடக்கின்றன. இற்றனைக்கும் துணிமணிகளுக்கு அங்கே வரி கிடையாது. டாரிஃப் உயர்ந்தால் உள்ளூர் உற்பத்தி துவங்க வாய்ப்பு உள்ளது. ட்ரம்ப் இல்ல, வேறு யார் வந்தாலும் இது மாதிரி நடக்கும். இனி வரும் அமரிக்க அதிபர்கள் ட்ரம்பை விட கடுமையாக நடந்து கொள்வார்கள்.
திருப்பூர் காட்டன் ஆடைகள் தரத்தில் உயர்ந்தவை, ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் பிற்காலங்களில் தரத்திற்காக விலை உயர்ந்தாலும் அதன் மவுசு குறையப்போவதில்லை. அமெரிக்கர்கள் சுமாராக 35 கோடி மக்கள் தான் உள்ளனர், அதனால் வேறு நாடுகளிடம் புதிதாக வர்த்தக தொடர்வுகளை ஏற்படுத்த அரசு உதவ வேண்டும், அமெரிக்க அரசுக்கு வரி விதிப்பால் நிதி கிடைக்கலாம் அதே நேரம் நுகர்வோர் தலையில் அதிக சுமையும் ஏற்றுவது. இறக்குமதியை மட்டும் நம்பி இருக்கும் நாடு ஒத்த காலில் அதிக நேரம் நிற்க முடியாது. இந்தியாவிற்கு இந்த வரி விதிப்பு கடக்கும் கரு மேகங்களுக்கு ஒப்பானது...