உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ppghxzgq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன.2024ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன. திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே மோசடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கப்படுவதையும், தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய முடியும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியிருப்பதானது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஒரு பதவிக்கு ரூ.25 முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு ஆதாரங்களை அனுப்பியுள்ளது. தமிழக போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறயுள்ளார்.

ஊழல் வேட்கையில்…!

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ரூ.888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த 2024ம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு.இரு மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தனது சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது. காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக பாஜ சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Venugopal S
அக் 30, 2025 07:41

அமலாக்கத்துறை, அண்ணாமலை, அன்புமணி, பாஜக இவற்றின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை போய் பல வருடங்கள் ஆகி விட்டது!


panneer selvam
அக் 30, 2025 17:40

It is true , thanks to apathy of ruling government and snail speed judiciary process . The conviction of any corruption case will takes years to get final judgement . So whom , you want to blame ?


Venugopal S
அக் 30, 2025 06:55

பொழுது விடிஞ்சு பொழுது போனால் தினமும் ஏதாவது உளறிக் கொண்டே இல்லாமல் உருப்படியாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபித்து மத்திய பாஜக அரசின் மூலம் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே!


panneer selvam
அக் 30, 2025 17:38

First understand ED can not investigate any case on their own and they do not have right to investigate any corruption cases also . ED could investigate only illegal money laundering based on any complaints with local police . Here K.N. Nehru brother company True Home got cash remittance in huge amount in short time for no work involved .A local police complaint is lodged against that company . By clinching that complaint , ED investigated and trail is leading to K.N.Nehru . Again ED can not file a case against K.N. Nehru on corruption hence ED make a request Tamilnadu DIG to investigate the case through their anti corruption wing . Hence before you write , just understand what is issue and how ED functions


Palanisamy Sekar
அக் 30, 2025 01:48

என்போன்றோருக்கு இந்த செய்தியை படிக்கும்போது எந்த ஓர் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையவில்லை . இதுதான் திமுகவின் கொள்கையே. அரசு பதவி வேண்டுமா உள்ளூர் எம் எல் ஏ விடம் அதாவது திமுக எம் எல் ஏ இடம் சென்று கோரிக்கை வைத்தால் போதும்., அவர் கேட்கும்போதே சொல்லிடுவார். மேலிடத்துக்கு இவ்வளவு நாங்கள் கொடுக்கணும், அமைசர்க்கு இந்த அளவுக்கு கொடுக்கணும், அப்புறமா அந்த அதிகாரிக்கு கொடுக்கல் பீஸ் என்று கூச்சமே இல்லாமல் நேர்மையாக கேட்பார்கள். அதிலும் அவர்கள் சலுகைகள் கூடகொடுப்பார்கள் அவ்வளவு நலலவர்கள் திமுகவில் இருப்பவர்கள். தவணை முறையில் அதாவது அட்வான்ஸ் கொடுத்துடனும், ஐந்து லட்சம். உங்க பேப்பரை பாலோ செய்யணும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்வு எண்ணை வைத்து அதிகாரியிடம் சொல்லிவிடுவார்கள். சென்னைக்கு போகணும் என்று சொல்லி மேலும் ஒரு இரண்டு லட்சத்தை உள்ளூர் அல்லக்கைக்கு கொடுக்கணும், இந்த விஷயம் சம்பந்தப்பட்ட எம் எல் ஏகு தெரியக்கூடாது என்கிற கண்டிஷனும் போட்டுவிடுவார்கள். பிறகு அதிகாரிகளோடு பேசிவிட்டு வந்து உங்க தேர்வு பேப்பரை கண்டுபிடிச்சாச்சு, அதில் என்னென்ன செய்யணுமோ அதனை அதிகாரிகள செய்துகொடுள்ளார்கள். அநேகமா அடுத்த மாதத்துக்குள் உங்களுக்கு போஸ்டிங் போட்டுடுவாங்க, நீங்க மீதி பணத்தை அரேஞ் பண்ணிடுங்க அமைச்சரை பார்க்க நம்ம எம் எல் ஏ அநேகமா அடுத்த வாரம் போகப்போறாரு, எப்படியாவது பணத்துக்கு அரேன்ஞ் பண்ணிடுங்க, என்று ரன்னிங் கமெண்ட்ரி மாதிரி உங்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் எம் எல் ஏவின் அல்லக்கைகள். எம் எல் ஏ மந்திரியை பார்த்துவிட்டு வந்த பிறகு பணம் கொடுத்தவருக்கு வேலை கணபார்ம் ஆகிடும். அதேமாதிரி உள்ளூரில் வேலைவாய்ப்பு என்றால் அதற்கு கூடுதலாக ஐந்து லட்சம் கேட்பார்கள். கொடுத்தால் அத்தனையும் சரியாக செய்திடுவார்கள். அதனால்தான் அரசு வேலைக்காகவே பலரும் திமுகவை ஆதரிப்பார்கள். பணம் கொடுத்தால் எண்ணவேண்டிடுமானாலும் திமுக செய்துகொடுக்கும் என்பதுதான் பொதுஜனங்களிடம் உள்ள நம்பிக்கை. ஆனால் அதே அதிமுகவினரிடம் இப்படிப்பட்ட கனகச்சிதானமான பணியாணையை பெறவே முடியாது. கட்சியில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் கைகொடுக்க மாட்டார்கள். அவர்களே நேரிடையாக செய்துகொடுப்பார்கள். அதாவது நூறு போஸ்டிங் காலியாக இருப்பது என்றால் அதிமுகவினர் ஒரு ஐந்து பேருக்காவது கல்லா கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் திமுகவினர் அப்படியல்ல. நூறு காலியிடங்கள் என்றால் நூற்றுப்பத்து பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கிக்கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள். கருணாநிதி காலத்திலிருந்து இதைத்தானே பார்க்கின்றோம். அதிலும் பணியிட மாற்றம் வேண்டும் என்றால் அதே போன்று எம் எல் ஏக்கு உள்ள அல்லக்கைகளை அணுகினால் போதும் நிச்சயம் செய்துகொடுப்பார்கள். குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வரை செலவு ஆகும். ஆனாலும் உறுதியாக செய்துகொடுக்கும் நலலவர்கள் திமுகவினர் என்பதில் சந்தேகமே கிடையாது. மக்கள் அதனை ஊழலாகவே ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இந்த காலத்தில் யார் பணம் வாங்காமல் செய்வார்கள் என்று முட்டுக்கொடுத்துதான் பேசுவார்கள். இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வாகவே இருக்கின்றது. திராவிட கட்சிகளின் நிலைமை இதுதான். இப்படி சம்பாதிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் திமுகவுக்கு அதனால்தான் நிறைய சப்போர்ட் கிடைக்கின்றது. யாருமே கட்சிக்காக உழைப்ப்பதே கிடையாது. நான் ஐம்பதாண்டுகள் திமுகவுக்காக உழைக்கின்றேன் என்று ஒருவன் சொன்னால் நிச்சயம் அந்த நபரால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும் எண்பத்துத்தான் நிச்சயமான சத்தியம். திமுக ஆட்சிக்கு வந்தால்த்தான் பணப்புழக்கம் இருக்கும் என்பது இதுபோன்ற ஊழல்களால்தான் . அதேபோலத்தான் உள்ளூர் போலீஸ் சம்பந்தப்பட்ட வாழைக்குலை சமரசம் செய்ய உள்ளூர் வட்டம் மாவட்டங்களை அணுகினால் போதும் அவர்கள் நேரே போலீசுக்கு சென்று முடித்துகொடுவிடுவார்கள். அது வெறும் பத்தயிரம் முதல் வழக்கின் தன்மையை பொறுத்து ஐம்பதாயிரம் வரை கையூட்டு கொடுதிவிடனும் என்பதும் நடந்துகொண்டுள்ள நிகழ்வுகள். இதே அதிமுகவினரிடம் சென்று பார்த்தல் அப்படியா நீஙக போங்க நான் எஸ் ஐ இடம் போனில் பேசுகின்றேன் என்று சொல்லி அதிமுகவை சேர்ந்தாருக்குகே கூட செய்து தரமாட்டார்கள். ஒருசிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் திமுகவை சேர்ந்தவர் என்றால் உள்ளூர் எம் எல் ஏவின் கைதடியில் உறுதிபட செய்துகொடுப்பார்கள். இதற்காகவே பல குடும்பங்கள் இல்லீகலாக செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்கெல்லாம் திமுகதான் பாதுகாப்பு கொடுக்கும் என்று நம்புகின்றார்கள் அதற்காகவே ஒட்டு கேன்வாஸ் செய்வார்கள் ஜெயிக்க வைப்பார்கள் திமுகவை. இதில் பாதிக்கப்பட்ட நபர் அடுத்தமுறை திமுகவை ஆதரிக்க அவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடுவார் . அதனால் இந்த முறை மட்டுமல்ல திமுக கடந்த நான்கு ஆண்டுகளாக இதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் குறட்டைவிட்டுக்கொண்டு அமலாக்கத்துறை புதிதாக கண்டுபிடித்த மாதிரி இப்போது விழித்துக்கொள்வது போல செய்வது நகைப்புக்கு உரியதாகவே தெரிகின்றது. ஆனானப்பட்ட பொன்முடி வழக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். என்ன ஆச்சு? சிறப்பு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனையை கொடுக்கும்படி நீதிபதியை வேண்டிய செய்திகளையெல்லாம் படித்தோம். அதற்கு கூட டெல்லியில் ஆள்வைத்து வெளியே கொண்டுவர திமுகவினரால் மட்டுமே முடியும். பணமிருந்தால் போதும் இந்த ஒட்டுமொத்த இந்தியாவில் அவர்களால் என்னவேண்டுமானாலும் செய்துகொடுக்க முடியும் என்பதுதான் நிஜம். ஆளுநரையே கண்டிக்க வைத்த செய்திகளை படிக்கும்போது இதைத்தான் நானும் கருத்தாக பதிவு செய்திருந்தேன். அடுத்தடுத்து யாருமே திமுகவில் தண்டனையே பெற மாட்டார்கள். அது இதுபோன்ற 888 கோடி அல்ல ஒருலட்சத்து நாற்பதாயிரம் கோடி ஊழலே என்றாலும் அவர்களால் அந்த மாதிரியான வழக்கையே ஒன்றுமில்லாமல்ல் செய்து முடிக்க முடியும் என்பதை பார்த்தோம் தானே? ஒரே ஒரு திமுக நபர் ஊழலுக்காக தண்டனை அறிவிக்கப்பட்டாலும் கூட தண்டனையை அனுபவித்தாரகள் என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவர்களால் தைரியமாக உள்ளே நுழைந்து சாதிக்க முடியும் பணத்தால் என்பதை உலகையே அறியும். இது நமக்குவேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். திமுகவினரிடம் கேட்டுப்பாருங்கள். இந்த கேஸ் இல்லாமல் செய்திடுவாங்க நம்ம தலைவர்கள் என்றுதான் தைரியம் சொல்வார்கள். பணம் கொடுத்தவர்கள் ஒருபோதும் பயந்துக்கவே மாட்டார்கள். திமுக இருக்கும்போது நமக்கென பயம் என்பார்கள். அண்ணாமலை அவர்களுக்கு திமுகவின் அரசியல் பற்றி இந்த விஷயத்தில் இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்போன்றோரின் கருத்து. அதனால் பணம் கொடுத்து வேலைவாங்கியர்வர்களுக்கு நானே சொல்வேன். பயப்படடதீங்க.. கொடுத்த பணத்துக்கு கனகச்சிதமாக திமுக உண்மையாக நடந்துகொள்வார்கள் என்று உறுதி கூறுவேன். இதெல்லாம் ஜுஜ்ஜூபி மேட்டருங்க.


திகழ்ஓவியன்
அக் 29, 2025 18:53

52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. காலை உணவுத் திட்டம். விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல நெருக்கடிகளை தாண்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இலவச பயணம் விடியல் பயணத்தில் தினசரி சராசரியாக 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 3,700 புதிய பேருந்து வாங்கப்பட்டுள்ளன. 2,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 45,000 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.7,658 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 4,500 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. 76 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டபுள் டிஜிட் வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு. தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.


Palanisamy Sekar
அக் 30, 2025 01:52

பாவமா இருக்கு தம்பி ரொம்ப பயந்துபோய்ட்டார் போல. ஒருவேளை இவரும் இதில் சம்பந்தப்பட்டு யாருக்கேனும் வேலை வாங்கிகொடுத்திருப்பார் போல. தம்பி பயந்துக்காதீங்க. திமுக ஒரு ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தால் அது தங்களுக்கு சாதகமாக முடியும் வரை உழைப்பார்கள். ஊழலில் தண்டனை அறிவிப்போடு போய்விடும். தண்டனை பெற்றவர்கள் என்று யாருமே கிடையாது. நீதிபதியையே நிதிபதியாக மாற்றும் ஆற்றல் மிக்கவர்கள் என்பதால் நீங்கள் பயந்துபோய் ஏதேதோ எழுதாதீங்க. ஏற்கனவே ஓவரா முட்டுக்கொடுப்பபதையே படிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இப்போ சம்பந்தமே இல்லாமல் வேறு எழுதுகிண்றீர்கள்.. படிக்கவே பாவமா இருக்குது. தைரியமா இருங்க. ஒன்னும் ஆகாது.


Varadarajan Nagarajan
அக் 29, 2025 18:36

இந்த அரசு பணிக்கான தேர்வை நடத்தியது அண்ணா பல்கலைக்கழகம். எனவே மக்களுக்கு அதன் தேர்வுமுறையில் நம்பிக்கை வரும். ஆனால் விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநர் இருக்கும் வரையில் இடைஞ்சல் எனநினைத்து ஆளுநருக்கு பதிலாக முதல்வரே முழு அதிகாரமிக்கவர் என மாற்ற சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தது. என்ன ஒரு மெகா திட்டம்.ஆனால் வாக்காளர்களோ ஊழலை கண்டுபிடிப்பது எதிர்க்கட்சியின் வேலையெனவும் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தருவது விசாரணை அமைப்புகளின் வேலையெனவும் நினைத்து எதிர்வரும் தேர்தலில் எந்த கட்சி வாக்குக்கு அதிக பணம்கொடுகின்றதோ அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தால் தமிழகத்தை மட்டுமல்ல மக்களையும் ஆண்டவனால்கூட காப்பாற்றமுடியாது.


chinnamanibalan
அக் 29, 2025 17:21

அரசுத் துறைகள் அனைத்தும் ஊழலில் ஊறித் திளைக்கிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய வாக்காள பெரு மக்களோ, வருகின்ற தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு ₹2000/- கிடைக்குமா அல்லது ₹5000/- கிடைக்குமா என்ற சிந்தனையில் மூழ்கி உள்ளனர்.


Sundar R
அக் 29, 2025 16:43

Now all our people of Tamil Nadu will accept Annamalais "DMK Files" which is a minimised version of continuous events of true corruption of the DMK. Thanks to AnnamalaiJi and his team who took enormous pains and risks of all kinds to make the sequel of corruption that has d awareness to not only Tamilians but also the citizens of our entire Bharat. By aligning with Anti-Hindu parties and appeasing the Anti-Hindu groups, to grab power these DMK people will go to any extent and start doing corruption. Now Karma has returned to the DMK.


Kasimani Baskaran
அக் 29, 2025 16:29

உடன்பிறப்புகள் இருக்கும் வரை எஜமான் பிரகாசிப்பார்...


Kasimani Baskaran
அக் 29, 2025 16:19

888 என்பது சீனர்களுக்கு லக்கியான நம்பர். உண்மையில் நம்பர் சொல்லும் கதை சோகமானது...


திகழ்ஓவியன்
அக் 29, 2025 18:54

888 888 இப்படி மூன்று எட்டு என்று சொல்லி புரளி கிளப்பும் போதே இது டுபாக்கூர் என்று தெரியலையா இப்படி தான் டாஸ்மாக் 100000 கோடி ஊழல் அப்புறம் சுருங்கி 1000 கோடி இப்ப அதுவும் நட்டுக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நாறி கொண்டு இறுக்கு


vivek
அக் 30, 2025 05:37

எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத .....


Venugopal S
அக் 29, 2025 15:53

வெறும் குற்றச்சாட்டுக்களை மட்டுமே சுமத்திக் கொண்டு இருந்தால் இருக்கும் கொஞ்சநஞ்ச நல்ல பெயரும் போய் விடும். ஆதாரங்கள் வேண்டும் என்பது கூடத் தெரியாமல் இவர் எல்லாம் என்ன போலீஸ் அதிகாரியாக இருந்தாரோ?


kjpkh
அக் 29, 2025 17:37

ஆதாரத்தோடு வழக்கு போட்டு அமைச்சர்கள் எல்லாம் ஏற்கனவே எல்லாம் அதிமுகவில் இருந்தவர்கள். அவர்களிள் சில பேர் அமைச்சர் பதவியேவேண்டாம் ஜாமீன் போதும் என்று வெளியில் இருக்கிறார்கள். சில அமைச்சர்கள் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலம் வரும் ஆதாரங்கள் வரும். முக்கிய உதாரணம் செபா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை