உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் நடவடிக்கையில் தலையிட ஓய்வு நீதிபதிகளுக்கு எதிர்ப்பு; ஐகோர்ட்டில் முறையீடு

கோர்ட் நடவடிக்கையில் தலையிட ஓய்வு நீதிபதிகளுக்கு எதிர்ப்பு; ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாதிய ரீதியில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கூறி, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், புகார் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கும் வரை, வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடக்கோரி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் . இந்த கடிதம், சமூக வ லைதளங்களில் பரவிய நிலையில், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், பத்திரிகையாளர் வாராகி சார்பாக, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி முறையீடு செய்தார். நீதிபதிகள், 'நிர்வாக ரீதியாக இந்த விவகாரம், உயர் நீதிமன்றத்தால் கையாளப்படும்' என்று தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கையை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கைவிடக்கோரி, ஜனநாயக மற்றும் சமூக நலனுக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில், சென்னை ஐகோர்ட் நுழைவு வாயில் முன், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mahendran Puru
ஜூலை 30, 2025 15:41

நல்ல கூட்டமா இருக்கே பாஜகவில் இத்தனை வக்கீல்கள் இருக்காங்களா


Venkatesh
ஜூலை 30, 2025 00:58

ஜாதி மதம் சார்ந்த தீர்ப்பு தப்பில்லையாம் . அதை எதிர்ப்பது தப்பாம் . இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் உருப்படாது ..


Joseph Sebastian
ஜூலை 29, 2025 17:31

Every Judge should be guided by the code of law, constitution and his/her conscience. When personal interest and biased mind enter into the judgement, judiciary fails. That is evident in this case.


Mohan Gurumurthy
ஜூலை 29, 2025 13:05

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்.." நீதிபதி சுவாமிநாதன் ௮வர்களது செயல் ௮வரது நேர்மை மற்றும் கடமை உணர்வை பிரதிபலிக்கிறது.


M Ramachandran
ஜூலை 29, 2025 11:40

நீதி துறையிலும் கருப்பு சிவப்பு இருக்கு. நீதித்துறையாய் கெடுத்து குட்டிச்சுவராக்கிய இந்திரா பெரோஸ் மற்றும் அவர் தோற்று வைத்த குடும்ப அடிமைய்யகள் காங்கரஸ் செய்த தில்லு முல்லு ஜிங்ஜா தீய மு கா வும் காரண கர்த்தா.


MUTHU
ஜூலை 29, 2025 10:02

இன்போசிஸ் ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு ஆதரவாய் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி இப்படித்தான் வாதாடினார் மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தார்.


திகழ்ஓவியன்
ஜூலை 29, 2025 11:16

அய்யா ஷா வுக்கு எதிரா ஒரு நீதிபதி சொன்னார் என்ன ஆனார் ஆதரவை ஒரு நீதிபதி என்ன ஆனார் கவர்னர் ஆனார்


SP
ஜூலை 29, 2025 09:57

நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டு கட்டாக பிடித்த அந்த நீதிபதிக்கு எதிராக போராட்டமோ எதுவும் இவர்கள் செய்யவில்லை.


Kanns
ஜூலை 29, 2025 09:09

All these Advocates are Not fighting for Peoples Cause/Sufferings But for their Own Selfish/Vested Purposes


Rajagopalan R
ஜூலை 29, 2025 08:41

எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி “வேலையற்ற ...


Narayanan Muthu
ஜூலை 29, 2025 07:47

ஓய்வு நீதிபதிகளின் நேர்மையான செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது இவர்களுக்கு கலக்கமாக உள்ளது போலும். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கதானே செய்யும்


சமீபத்திய செய்தி