உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்காக புதிய ரேஷன் கார்டுக்கு குவியும் விண்ணப்பம்

மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்காக புதிய ரேஷன் கார்டுக்கு குவியும் விண்ணப்பம்

சென்னை: மகளிர் உரிமை தொகை வழங்குவதில், விடுபட்டோருக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தற்போது பலரும், பெற்றோர் கார்டில் உள்ள தங்களின் பெயரை நீக்கம் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர்.தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2024 செப்டம்பரில் துவக்கியது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய, அந்தாண்டு ஜூலையில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கியது. அதில் உரிமை தொகை கேட்டு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், 1.15 கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, விடுபட்டோருக்கும் மாதம், 1000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மீண்டும் விண்ணப்பம் வழங்கி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக, துணைமுதல்வர் உதய நிதி, 'மகளிர் உரிமை தொகை பெற, கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் இம்மாதம் 8ம் தேதி அறிவித்தார்.

ஒப்புதல்

இதனால் மாதம், 1000 ரூபாய் பெற, தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, பெற்றோர் கார்டில் உள்ள பெயரை நீக்க, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மகளிர் உரிமை தொகைக்கு ரேஷன் கார்டு அவசியம். தற்போது, பெற்றோர் கார்டில் இருந்து தங்களின் பெயரை நீக்கக்கோரி, அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். அதன் வாயிலாக, புதிய ரேஷன் கார்டு பெற விரும்புகின்றனர்.தனி முகவரியில், தனி சமையல் காஸ் இணைப்புடன் வசிப்பது உள்ளிட்ட தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். மின் ஆளுமை முகமை வாயிலாக, ஒரு முறைக்கு பல முறை விண்ணப்பம் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின், பெயர் நீக்கம், புதிய கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

prasath
ஜன 19, 2025 14:50

அப்பாடி பிச்சை வாங்கிறதில் எவ்வளவு சந்தோஷம் பாருயா தமிழக வாக்காளர்களுக்கு. 1000 ரூபாயில் என்னவோ நாடு முழுவதும் சொத்தை வாங்கி குவிக்கறா மாதிரி காசு வாங்க வேண்டியது அப்புறம் குய்யோ முய்யோன்னு வருடம் கதற வேண்டியது தமிழம் பொறுத்தவரை மக்கள் எவ்வழி அரசாங்கம் அவ்வழி


Kundalakesi
ஜன 19, 2025 14:36

Same parliament is ruled by freebie parties which also promotes alcohol. What a pathetic state this people lives in


அப்பாவி
ஜன 19, 2025 10:31

ராப்பிச்சைக்காரன் தோத்தான்.


Rajarajan
ஜன 19, 2025 10:12

மத்திய அரசும், மாநில அரசும், நிதிநிலை அறிக்கையை வெள்ளையறிக்கையாக பொதுமக்களிடம் தாக்கல் செய்ய, பொதுநல வழக்கு வேண்டும்.


Kanns
ஜன 19, 2025 10:07

Recover All Freebies/Concessions Vote-Briberies& 90%Not Due As GroypD& C-UnSemiSkilled Jobs are Plentily Available from All Concerned Parties& Leaders-Cadres for ReCredit into Govt Accounts. Let them Go Bankrupt. Abolish All FakeSeperated-ForeignInfiltratirs Family Cards Obtained for Freebies Citizenship etc With Disciplinary Actions Against All those Ruling Ministers& Officials Issuing them. Issue Family Cards to Genuine Native Families Not Having them


Kumar Kumzi
ஜன 19, 2025 08:34

அடேங்கப்பா ஆயிரம் ஓவாவுக்கு அடிமையான கொத்தடிமை கூட்டம்


Kasimani Baskaran
ஜன 19, 2025 07:07

ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்து நேரடியாக வாங்கிக்கணக்குக்கு வரவு வைக்கவில்லை என்றால் பணம் தவறானவர்கள் கைக்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்களின் வரிப்பணம் இப்படி வீணாவது தமிழகத்தின் கடனை அதிகரிக்கும்.


Ethiraj
ஜன 19, 2025 06:09

Tax payers money meant for public infrastructure and governance being misappropriated in the name of women empowerment is not appropriate. Women in distress or in poverty as a welfare measure is accep. An assurance to win election at the cost of public funds has to come toend Court and parliment must enact law to stop this incentive to win elections all over Indua.


சம்பா
ஜன 19, 2025 04:42

ஓசில எதகு குத்தாலும் வாங்குவாளுக


Minimole P C
ஜன 19, 2025 08:42

shameless TN voters.


J.V. Iyer
ஜன 19, 2025 04:20

இந்த இலவசம்தான் ஹிந்துஸ்தானை மற்றொரு போர்கிஸ்தானாகவோ, ஆப்கானிஸ்தானாகவோ சீக்கிரம் மாற்றிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை