உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் படுகொலை

ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் படுகொலை

சென்னை: தமிழகத்தில் இன்று வெவ்வேறு இடங்களில், பாஜ., அதிமுக நிர்வாகிகள் மற்றும் காங்., கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ., பிரமுகர்

சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(53). பா.ஜ., கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலராக உள்ளார். செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று டூவிலரில் இளையான்குடி சாலையில் சென்ற போது மர்ம நபர்கள் செல்வகுமாரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். சிவகங்கை தாலுகா போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்., பிரமுகர்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பாரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். டெம்போ ஓட்டிவந்தார். இவரது மனைவி உஷா ராணி. திருவட்டார் பேரூராட்சி 10வது வார்டு காங்., கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஜாக்சனுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது. தேவாலயம் அருகே சென்ற ஜாக்சனிடம், டூவிலரில் வந்த 6 பேர் கும்பல் தகராறில் ஈடுபட்டு, அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தாக்கி உள்ளனர். ஜாக்சன் கூச்சலிட, அக்கும்பல் தப்பி ஓடியது. அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாக்சன் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் என்ற விலாங்கன் இக்கொலையை செய்ததும், இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அதிமுக பிரமுகர்

கடலூர் நவீநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாதன். 45. அதிமுக வார்டு செயலர். இன்று காலை, புதுச்சேரி மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் டூவிலரில் பயணித்த இவர் மீது மர்ம கும்பல் காரை மோதியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பத்மநாதனை, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் அரிவாலால் வெட்டி கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 02, 2024 23:05

கொத்தடிமைகள் கனோஜ் ஆங்கிரே, வேணுகோபால், இந்தியன் எங்கிருந்தாலும் உடனே முட்டு கொடுக்குக்க வரவும்.


Ramesh Sargam
ஜூலை 28, 2024 21:34

முதல்வரின் இரும்புக்கரம் துருப்பிடித்து பேரீச்சம் பழம் வாங்கபோட்டுவிட்டார். புதிய இரும்புக்கரம் செய்ய சொல்லி இருக்கிறார். புதிய இரும்புக்கரம் கிடைத்தபிறகு சட்டம், ஒழுங்கை சரிப்படுத்துவார்.


S. Narayanan
ஜூலை 28, 2024 20:10

எல்லா ரவுடிகளை யும் பிடித்து சிறையில் அடைத்து விட்டோம் என்றார்கள். இந்த ரவுடிகள் எங்கு இருந்தார்கள். பாவம் முதல்வருக்கு இது பற்றி எதுவும் தெரியாது


Yaro Oruvan
ஜூலை 28, 2024 19:40

விடியல் ஆட்சில சட்டம் ஒழுங்கு ஓஹோன்னு இருக்குது.. அதுக்கு ஒரு ஓ போடுங்க பரம்பரா உப்பிஸ் ..


P.Sekaran
ஜூலை 28, 2024 19:35

கொலை கொள்ளை செயின்பறிப்பு இப்பொழுது சர்வ சாதாரணமாகி விட்டது. இதெல்லாம் இளைஞர்கள் துணிந்து கொலையில் ஈடுபடுகிறார்கள் எளிதில் வெளியில் வந்து விடலாம் சட்டம் அதுமாதிரி இருக்கிறது. எப்பொழுது கொலை ஊர்ஜிதம் ஆனால் தூக்கில் போடுவார்கள் என்று சட்டம் வந்தால் கொலை செய்ய அஞ்சுவார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் வெளியில் வந்து விடுகிறார்கள். ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது.


Raj
ஜூலை 28, 2024 17:43

காவல்துறையகம், சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது தமிழ்நாட்டில்.... விடியல் ஆட்சியில்....


சந்திரசேகர்
ஜூலை 28, 2024 17:21

கொலை செய்தால் எப்படியும் வெளியே வந்து விடலாம் என்கிற சட்டம் உள்ள போது கொலைகள் நடக்கத்தான் செய்யும்


Subramaniam Mathivanan
ஜூலை 28, 2024 20:20

சட்டத்தில் தண்டனை கொடுக்க வாய்ப்பு இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜாமீன் மற்றும் விடுதலை கொடுத்து உத்தரவிடுவார்கள்


D.Ambujavalli
ஜூலை 28, 2024 16:42

எல்லாக் கொலைகளுக்கும் முன் விரோதம்தான் காரணம் என்று ஆனா பிறகு கட்சிகளின் பெயர் ஏன் சேர்க்கப் படுகிறது ? உள்ளூரில் கழகத்துக்கு வித்திடவா?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2024 16:18

கொலைகள் மாநிலம் ஆக்கி விட்டார்களே விடியவே விடியாதா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி