உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜோதிடம் பலிக்கும்; ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., பதில்!

ஜோதிடம் பலிக்கும்; ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., பதில்!

சேலம்: தி.மு.க.,வுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருந்தும், அவர்கள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், உயர் பதவிக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இ.பி.எஸ்., பேசியதாவது:எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி, எங்கள் கூட்டணியில் பிளவு என்பதே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தான் சொல்லிக் கொள்கிறார். நாங்களா சொன்னோம். எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல, தி.மு.க., கூட்டணியில் பிளவு இல்லை என்று ஸ்டாலின் தான் கூறி வருகிறார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள், தி.மு.க., அரசின் ஆட்சியை விமர்சிக்கிறார்கள். 41 மாத தி.மு.க., ஆட்சியை விமர்சிக்காத கூட்டணி கட்சிகள், தற்போது விமர்சிக்கிறார்கள் என்றால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தானே அர்த்தம். அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சி அ.தி.மு.க., தான். இளைஞர்களை கட்சியின் அதிகம் சேர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும் போது, 40 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். 2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட லோக்சபா தேர்தலில் சற்று குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளோம். 2021ல் பெற்ற வாக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற அனைவரும் உழைக்க வேண்டும். லோக் சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, தி.மு.க., கூட்டணி நம்மை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. 41 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைதூக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக லஞ்சம் பெறப்படுகிறது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் அவர்களே ஜோதிடம் பலிக்கும். 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். தி.மு.க., என்றால் குடும்பம், குடும்பம் என்றால் தி.மு.க.,தான். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி, கனிமொழி, சபரீசன், ஸ்டாலினின் மனைவி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும். தி.மு.க.,வின் மூலம் மீண்டும் மன்னராட்சி வருகிறது. கருணாநிதி மன்னராக இருந்த போது ஸ்டாலின் இளவரசராக இருந்தார். தற்போது, ஸ்டாலின் மன்னராக இருக்கும் போது, உதயநிதி இளவரசராகியுள்ளார். அவருக்கு முடிசூட ஸ்டாலின் துடிக்கிறார். அ.தி.மு.க., இருக்கும் வரை உங்களின் பாச்சா பலிக்காது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டசபை தேர்தல் இருக்கும். எப்போது பார்த்தாலும் நான் மிசாவில் சிறைக்கு சென்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆங்காங்கே கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், ஸ்டாலின் சிறையில் இருப்பது போன்ற போட்டோக்கள் இருந்தன. நீங்கள் மட்டும் தான் மிசாவில் சிறைக்கு சென்றீர்களா? எத்தனையோ தி.மு.க., தலைவர்கள் சிறைக்கு சென்ற போதும், அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லையே. அவர்கள் எல்லாம் தி.மு.க.,வுக்கு உழைக்கவில்லை. அவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கல. அதனால் வாய்ப்பு கிடைக்கல. உதயநிதி கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அந்தஸ்து இருக்கிறது. இதன் காரணமாக துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
அக் 25, 2024 20:38

ஜோதிடம் பாதி பலிக்கும்... திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.... பாதி பலிக்காது... நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் என்பது.....தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி தான் அமையும்.


Appan
அக் 25, 2024 18:29

கையாலாகாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள் . எம்ஜியாருக்கு பின் இந்த கட்சி திசை தெரியாமல் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கட்சி இருக்க வேண்டும் என்றால் திறமை உள்ளவர் அதிமுகவை தலைமை ஏற்று கட்சியை நடத்த வேண்டும் .காலம் தான் பதில் சொல்லும்


Ms Mahadevan Mahadevan
அக் 25, 2024 18:13

இருக்கிற கட்சிகள் எதுவும் யோக்கியமான கட்சிகள் கிடையாது. அரசியல் தொழிலாகிவிட்டது. புதிதாக வருகிற கட்சியும் யோக்கியம் கிடையாது


பாலா
அக் 25, 2024 17:03

திராவிடியா ரயில் மஞ்சள் துண்டு ஏன்? சோதிடம் பலிக்கும். சுடலைக்கும் இழவுவரசனுக்கும் ஏழரைச் சனி உச்சத்தில் மண்டையைக் கூடப் போடலாம் விரைவில்


INDIAN
அக் 25, 2024 15:26

உங்களின் பழைய ஜோதிடம் பொய்த்துவிட்டது . ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னது நீங்கள் . ஆகவே இப்போதாவது ஜோதிடம் பலிக்குதா என்று பார்ப்போம் . கருணாநிதி குடும்பத்தில் வாரிசு ட்டுமே பதவிக்கு வர முடியும், அனுபவம் மிக்க சீனியர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை , வாரிசு அரசியல் நடக்கிறது, உண்மைதான் . உங்கள் கட்சியில் என்ன நடக்கிறது . MGR இறந்த பிறகு ஜானகியா , ஜெயலலிதாவைவா, யார் வாரிசு என்றுதானே அடித்துக்கொண்டீர்கள் , உண்மையில் MGR க்கு வாரிசு இருந்தால் அவர்தான் வரவேண்ண்டும் ன்பதுதானே அதன் பொருள், ஜெயலலிதா சிறைசென்றபோது எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது முதல்முறை MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர் எப்படி முதல்வராக வந்தார் சசிகலா சிபாரிசு , சசிகலா யார் ? . ஜெயலலிதா மறைந்தபிறகு ,சசிகலாதான் முதல்வர் என சின்னம்மா கோசம் போட்டீர்களே அதென்ன சீனியரிட்டி அடிப்படையிலா? சசிகலாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அவர் முதலமைச்சர் ஆகா முடியாது என்றவுடன் நீங்கள் அந்த பதவிக்கு தேர்வானீர்களே அது சீனியரிட்டி அடிப்படையிலா. துர்கா ஸ்டாலின் , சபரீசன் பற்றி பேசுகிறீர்களே , சசிகலா கட்சியில் ஆட்சியில் என்ன பதவியில் இருந்தார் உங்கள் கட்சிக்காரர்கள் சசிகலாவிடம் கப்பம் கட்டி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றீர்கள் , ஆகவே அவர்கள் ஆட்சியைபற்றி விமர்சனம் செய்யுங்கள் , நீங்கள் வந்து என்ன செய்வீர்கள் என்று விளம்பரம் செய்யுங்கள் , நீங்கள் ஒன்றும் யோக்கியர்கள் அல்ல , அவர்கள்மீது குற்றம் மட்டும் சுமத்தி வெற்றிபெற .


raja
அக் 25, 2024 14:42

இம்முறை திருட்டு திராவிடம் பேசும் ஒன்கொள் கோவால் புற தெலுங்கன் மட்டுமல்ல அவன் குடும்பமே அடித்து விரட்டபடும் தமிழர்களால்


குமரி குருவி
அக் 25, 2024 14:32

ஜோதிடம் பலிக்கட்டும் ஆனால் எட்டாத பழத்துக்கு ஆசைப்படுவது போல் தெரியுதே...


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2024 14:13

என்ன திடீர்னு ? இந்த மாசம் கப்பம் சரியா கட்டவில்லையா மன்னா


SUBRAMANIAN P
அக் 25, 2024 13:59

என்னமோ இவங்க ஊழலுக்கு எதிரி போல பேசுறாரு. திமுக போட்ட குட்டி தானே அதிமுக. காமராஜருக்கு பிறகு தமிழகம்தான் ஊழலில் முதலிடம் இன்றுவரை.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
அக் 25, 2024 13:55

குடுகுடுப்பைகாரனுக்கும் ராப்பிச்சைக்காரனுக்கும் நடக்கும் சண்டையைப் போல் உள்ளது இன்னாளுக்கும், முன்னாளுக்கும் நடக்கும் குழாயடி சண்டை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை