உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

தேனி: தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, இறந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rz9zpxrf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் மரணங்கள் அடிக்கடி நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகிறது.தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேனியில் பொங்கல் பண்டிகையின் போது போதையில் சுற்றிய ஆட்டோ டிரைவரைப் பிடித்த தேவதானப்பட்டி போலீசார், அவரை ஸ்டேஷனில் வைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், ஸ்டேஷனில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் பெறப்பட்டுள்ளன.இது தொடர்பாக, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்., உள்பட 5 பேர் இடமாற்றம்

தாக்குதல் நடந்த வீடியோ வெளியான நிலையில் இன்ஸ்பெக்டர் அபூதுல்யா, போலீசார் மாரிச்சாமி, பாண்டி, வாலி உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh Sargam
ஜூலை 02, 2025 21:41

இனி இதுபோன்ற கொடூரங்கள் நாடு முழுவதும் நடக்காமல் இருக்க, நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா வைத்து, நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். நீதிமன்றத்தில் அதற்கென்று ஒரு தனி துறையை அமைத்து அதில் மூன்று shift முறையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் காவலர்களை உடனே அழைத்து கண்டிக்கவேண்டும்.


Nagarajan D
ஜூலை 03, 2025 09:43

வாய்ப்பே இல்லை ராஜா எந்த அரசு அலுவலகத்தில் எவன் வேலை செய்றான் அந்த cctv கேமரா வேலை செய்ய? அப்படி வேலை செய்தாலும் நம்நாட்டு கேடுகெட்ட சட்டம் இயற்றிய மூன்று பெயரை போலவே எவனாவது ஒரு அயோக்கிய அரசியல்வயாதி அவனோடு எடுப்புகளை அனுப்பி அதை உடைத்துவிட்டு முடிச்சிடுவானுங்க


Senthoora
ஜூலை 04, 2025 11:05

சான்ஸ் இல்லை. அந்த சம்பவம் நடக்கும்போது கமெரா வேலை னகி, னகி.


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2025 19:00

இந்த சம்பவத்தை போலீசார் மீசையை முறுக்கிவிட்டு ஒரு பெருமையாக தான் எடுத்துக்கொள்கிறார்கள். மக்களிடம் பயத்தை உருவாக்கி, மேற்கொண்டு நிறைய பணம் சம்பாரிக்கலாம் என்று தான் திராவிட ஆட்சியில் திட்டம் போடுகிறார்கள்.


swami premadananda
ஜூலை 02, 2025 16:46

"The police are entrusted with upholding the law and ensuring public safety, a responsibility that comes with immense power. This power must always be exercised with restraint, compassion, and a clear understanding that those you serve are fellow human beings, often with families and lives that can be profoundly impacted by your actions. Imagine for a moment if your own family members were subjected to disrespectful or abusive treatment. The pain and distress it would cause are universal. It is this very empathy that must guide every interaction. Respect for higher authorities, and more importantly, respect for the common citizen, forms the bedrock of a just society."


D.Ambujavalli
ஜூலை 02, 2025 16:19

அந்த டாக்டர் தரப்பில் முதலில் 16 பவுன் எனப்பட்டது. பிறகு இப்போது 9.5 பவுன் என வெளியிடப்படுகிறது ஆனால் 5 பவுன்தான் என்றும் கூறுகிறார்கள் காரையே ஒட்ட தெரியாதென்றவரிடம் சாவியைக் கொடுத்தது ஏன்? கைக்குட்டையைக்கூட மறக்காமல் எடுத்துச்செல்லும் பெரிய மனிதர்கள், வெளியே விலையுயர்ந்த செருப்பைப் போட்டால் திருடு போய்விடும் என்று பையில் போட்டு எடுத்துச்செல்லும் குணமுள்ளவர்கள் இவர்கள் இவர்கள் காரில் நகையையும் பணத்தையும் வைத்தார்களாம் அந்த வாலிபர் வேறு எதையோ கண்டுபிடித்துவிட்டதால் அபார மணி அடித்து ஆளைத்தூக்க இந்த போலீஸ் ஸ்டேஷன் நாடகம் நடத்தப்பட்டதோ என்றே தோன்றுகிறது seyvathil செய்வதில் திமுக கட்சியினர் doctorate செய்தவர்களாயிற்றே


Manaimaran
ஜூலை 02, 2025 15:27

எனத்த விசாரிக்க ரானுக இடமாற்றம் இதே நிலை தொடர்ந்தால் பிறகு போலீசு மீது தி...... தல் நடக்கும்.


S.V.Srinivasan
ஜூலை 02, 2025 15:16

மொத்தத்தில் தமிழக அரசு பிரயோஜனம் இல்லை.


Nagarajan D
ஜூலை 02, 2025 15:01

ஒரு பத்து நீதிபதிகளையும் பத்து sp களையும் இப்படி வெளுத்தால் தவறாக ஜாமீன் கொடுக்குறவனுங்களுக்கும் திமிராக நடத்தும் போலீசும் தானாக திருந்துவானுங்க


Karthik Madeshwaran
ஜூலை 02, 2025 14:56

மனித உரிமைகள் ஆணையம் தூங்கி கொண்டுள்ளதா ? காவல் துறையினர் மனித மிருகங்களாக மாறாமல் சட்டப்படி நடக்க வேண்டும், தவறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி.


Padmasridharan
ஜூலை 02, 2025 14:52

கடற்கரை போன்ற பொது இடங்களிலும் இவர்கள் இப்படித்தான் அடித்தும் உதைத்தும் பணம்/பொருள் புடுங்கி அவமதிக்கின்றனர். கறை படிந்த காக்கிச்சட்டை காவலர்கள் அது அவரவர்களுக்கே தெரியும் சாமி


Raja k
ஜூலை 02, 2025 14:11

தினம்தினம் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போடபட்டது என செய்திகள் வருவது எல்லாம் மக்களை எவ்வளவு கேவலமாக நினைத்து பூ சுற்றுகின்றனர் என்பதை தெரிந்து வெட்கபட வேண்டும்


gsafety
ஜூலை 02, 2025 15:34

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் வைத்தால் இது போன்ற காரியங்களில் இருந்து தவிர்க்கலாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரியாக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஆனால் முக்கியமான இடமாக கருதப்படுகின்ற போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் மற்றும் அவுட் சைடு போலீஸ் ஸ்டேஷன் லஞ்சம் வாங்கப்படுகின்ற இடமாக கருதப்படுகின்ற ஸ்டேஷன் உள்ளேயும் வெளியேயும் ஏன் சிசிடிவி கேமரா இதுவரை பொருத்தப்படவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை