உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தியாளர்கள் மீது தாக்குதல்; தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

செய்தியாளர்கள் மீது தாக்குதல்; தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குளித்தலை: குளித்தலை அருகே கல்குவாரி தொடர்பாக நடந்த மோதலில், ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உட்பட, இரு தரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். திருச்சி மாவட்டம், லால்குடி, தாளக்குடியை சேர்ந்தவர் கதிரவன், 45; தனியார் 'டிவி' நிருபர். கேமராமேன் செபாஸ்டியன், 47. திருநெல்வேலியை சேர்ந்த, காவிரி மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்க நிர்வாகி சுடலை கண்ணன், 50, திருச்சி முசிறியை சேர்ந்த வழக்கறிஞர் திருமலைராஜன், 50, இவரது குமாஸ்தா ராஜமாணிக்கம், 48, ஆகியோர், திருச்சி மாவட்டத்திற்கு காரில் வந்தனர். அங்கு, ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகன் விமலாதித்தன் பெயரில் இயங்கி வரும் கல்குவாரியை, ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றார். இதில், எம்.எல்.ஏ., பழனியாண்டி தலைமையில், ஒரு கும்பல், அவர்களை அடித்து உதைத்ததாக கதிரவன், போலீசில் புகார் செய்தார். அதேபோல, விமலாதித்தன், 32, அரசு உரிமம் பெற்ற கல் குவாரியை, சட்ட விரோதமாக, சுடலை கண்ணு உள்ளிட்ட, ஐந்து பேர் பணம் கேட்டு மிரட்டி, வீடியோ எடுத்ததாகவும், தட்டி கேட்ட குவாரி ஊழியர்களை அடித்ததாகவும் புகார் செய்தார். குளித்தலை போலீசார் விசாரித்தனர்.நேற்று முன்தினம் இரவு, பழனியாண்டி, விமலாதித்தன் உட்பட, 22 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். அதன், வழக்கு விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். விமலாதித்தன் புகாரில், சுடலை கண்ணு, கதிரவன், செபாஸ்டியன், திருமலைராஜன், ராஜ மாணிக்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காயம் ஏற்படுத்துதல், மிரட்டி அச்சுறுத்துதல், சட்ட விரோதமாக கூடி வன்முறையில் ஈடுபடுதல், அத்துமீறி நுழைதல் ஆகிய, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில் குமார் கூறுகையில், ''இரு தரப்பு மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Anantharaman Srinivasan
பிப் 08, 2026 15:08

தில் இல்லாத சொரணை கெட்ட போலீஸ். ஆட்சி மாறினால் தாங்களும் கட்சி மாறிவிடுவார்கள்.


rasaa
பிப் 08, 2026 14:07

நிச்சயம், சட்டப்படி, நேர்மையாக சிறிதும் அரசியல் கலப்பில்லாத நடவடிக்கை காவல்துறை எடுக்கும்.... எம்.எல்.ஏ. அடித்த நபர்கள் மீது.


Raghavan
பிப் 08, 2026 13:12

வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் மக்களைத்தான் சொல்லவேண்டும். இந்த முறையாவது செய்த தவறையே செய்யாதீர்கள்.


Indhuindian
பிப் 08, 2026 12:01

தி மு க எம் எல் ஏ மீது வஷக்கு பதிவா நம்பமுடிய வில்லை இல்லை இல்லை.


kamal 00
பிப் 08, 2026 10:02

பழனியாண்டி கோமணத்த உருவுங்க


Svs Yaadum oore
பிப் 08, 2026 10:00

சமூக நீதி சமத்துவ திராவிட மாடலை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ......அடி கொடுத்தவன் மேல் வழக்கு பதிவு ....அடி வாங்கியவன் மேலும் வழக்கு பதிவு .....இதுதான் பாரபட்சமற்ற சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ திராவிட மாடல் .......


Natarajan Ramanathan
பிப் 08, 2026 09:38

அடி வாங்கியவன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ் அடித்தவன்மீது பதிந்த வழக்கு விபரங்களைக்கூட தெரிவிக்க மறுக்கிறது. கேவலமான திராவிட மாடல் அரச ஒழிய வேண்டும்....


bharathi
பிப் 08, 2026 09:37

People stop voting goons ...almost all dravidians become goon once they get power and money...be a human in spite of any language you speak...really pathetic on people reaction these days especially in a normal road traffic people are fighting and engage in clash


Nathansamwi
பிப் 08, 2026 09:29

பத்து ரூபாய் திமுக


Haja Kuthubdeen
பிப் 08, 2026 09:16

அடிப்பவன் பின்புலம் செல்வாக்குடன் இருந்தால் பேருக்கு நடவடிக்கை அடிபட்டவனுவ மீது கடுமையான நடவடிக்கை....இது ஒரு முறை அல்ல பல முறை...விடிவு எப்பொழுதோ!!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை