உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சி: உதயநிதி கண்டுபிடிப்பு

ஹிந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சி: உதயநிதி கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.இது குறித்து உதயநிதி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழகத்தை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழகம் எங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஹிந்தி திணிப்பும், அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன. இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழகத்தை நெருங்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

netrikan
ஜன 26, 2024 18:50

ஒரு மொழி அதிகமாக தெரிந்து கொள்வதால் நுண்ணறிவு பத்து சதவிகிதம் அதிகரிக்கும் என்பது ஆய்வு


Nagar
ஜன 26, 2024 17:32

ஹிந்தியும் தமிழும் சகோதரி மொழிகள். ஹிந்திக்கும் தமிழுக்கும் சுமார் நாற்பது சதவிகிதம் பொது சொற்கள் உள்ளன. அதேபோல் ஹிந்திக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் பொது சொற்கள் ஐம்பது சதவிகிதம் உள்ளன. ஆகையால் நாம் ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு ஹிந்தி மற்றும் மற்றும் தாய்மொழிகளை கற்க கவனம் செலுத்தவேண்டும்


naveen
ஜன 26, 2024 14:39

தமிழ் சினிமாவுல எப்ப ஹன்சிகா, நயன்தாரா இல்லாம தமிழக ஹீரோயின்கள் மட்டும் நடிப்பாங்க???


karupanasamy
ஜன 26, 2024 12:38

ஆமாம் உன் பாட்டன் மொழிப்போராளின்னு சொல்லிக்கிட்டு தான்மட்டும் ரயிலே வராத தண்டவாளத்துல தலையை வச்சிட்டு கடைநிலை தொண்டர்களை காவு கொடுத்தான், ஏன் அழகிரியோ, ஸ்டாலினோ, தமிழரசோ, செல்வியோ, கனிமொழியோ, நீயோ, செந்தாமரையோ, இன்பநிதியோ மொழிக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவில்லை? ஏன் உன் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட உயிர்த் தியாகம் செய்யவில்லை?


Suppan
ஜன 26, 2024 16:09

அந்த செந்தாமரையோ தன்னுடைய பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார். தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார். அவரைக் கண்டிக்கத் துப்பு இருக்கிறதா?


rajan_subramanian manian
ஜன 26, 2024 11:04

நானும் இவர் தனது தந்தையைவிட கொஞ்சம் விவரமான ஆள் என்று நினைத்தேன்.இப்போதுதான் தெரிகிறது கொஞ்சம் கூட சபை நாகரீகம்,உலக அறிவு,பொது அறிவு சுத்தமாக இல்லை என்று. இன்று ஆட்சியில் இருப்பார் நாளை இல்லை என்ற ஒரு சின்ன உண்மைகூட தெரியவில்லை.ஆட்சி மாறினால் எங்கு இருப்பார்,எப்படி இருப்பார் என்று நாம் பார்க்கத்தானே போகிறோம்.கண்ணன் சிசுபாலனுக்கு சொன்னது போல் தவறு மேல் தவறு செய்யட்டும்,கணக்கு தீர்க்கும் நாள் வரும்.


ngopalsami
ஜன 26, 2024 14:00

அன்பரே, இது ஒரு அரை வேக்காடுகூட இல்லை. ஏதோ புருடா விட்டு ஜனங்க காதுல பூ சுத்தலாமுன்னு பாக்குது. யாரும் ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டார்கள். இது லயோலா காலேஜில் படித்ததா வேற சொல்லுது.


spr
ஜன 26, 2024 09:52

"இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்" பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இருக்கும் நிலையில் "தொன்மையான வாழ்வியல் நெறிகள்" என்று சொல்லாமல் "சனாதனம்" என்று கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அரசியல்வியாதிகளைப் பார்க்கும் பொழுது இவர் சொன்னது உண்மையோ என்று எண்ணத்தோன்றும் ஆனால் தங்கள் குடும்பப் பெயர் (கனிமொழி) நீங்கலாக அனைத்துமே பிறமொழிச் சொல்லாக இருக்கையில், இவர் இது குறித்துப்போ பேசாத தகுதியற்றவர் உரைத்த திருத்து முன்பாக தன்னைத் திருத்திக் கொள்பவனே பிறருக்கு அறிவுரை சொல்ல அறுகதையுள்ளவன் இன்னமும் "தமிழக உயர் நீதிமன்றம்" என்று பெயரிடப்படாமல் "மெட்றாஸ் ஹை கோர்ட் "என்ற பெயர்ப்பு பலகையைப் பார்த்தும் இவருக்கு இப்படிப் பேச எப்படி மனம் வருகிறது


Mani . V
ஜன 26, 2024 06:15

நீ என்ன வேணுமின்னாலும் சொல்லு ராசா. நீ சொல்வதை எல்லாம் நம்ம எட்டுக் கோடி தமிழர்கள் காதில் பூ வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதுபோல் நீ என்ன பேசினாலும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசே பயப்படுகிறது. அதுனால நீ எப்படி வேண்டுமானாலும் உருட்டு ராசா.


Raj
ஜன 26, 2024 05:26

தவளை தன் வாயால் கெடும்.... கேடும் விளைவிக்கும்..... அதை தான் உ நி செய்கிறார்....


Sathyasekaren Sathyanarayanana
ஜன 26, 2024 05:23

தமிழக மக்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்தால் இந்த திருட்டு திராவிட மனு நீதி பொய்கள் வெளியே வந்துவிடும் என்ற பயம்.


நரேந்திர பாரதி
ஜன 26, 2024 03:21

இவனுங்க பரம்பரை இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹிந்தி, சமஸ்கிருதம்னு பஜனை செஞ்சு ரயில் போகாத தண்டவாளத்தில் தலைவைத்து படுப்பானுங்களோ தெரியவில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை