உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி ஏற்றி கொல்ல முயற்சி; தப்பிய அரசு அதிகாரிகள்

லாரி ஏற்றி கொல்ல முயற்சி; தப்பிய அரசு அதிகாரிகள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராராமுத்திரைக்கோட்டையில், நேற்று முன்தினம், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் பிரபு, வருவாய் அலுவலர் கமலி, வி.ஏ.ஓ., சுரேஷ் ஆகியோர், ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். ஜீப்பை டிரைவர் கணேஷ் ஒட்டி கொண்டிருந்தார்.அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, ஜீப் மீது மோதுவது போல வந்தது; அதிகாரிகள் சிதறி ஓடினர். லாரி, அரசு ஜீப்பை சேதப்படுத்தி, வேகமாக சென்றது. அதிகாரிகள், 26 கி.மீ., பின்தொடர்ந்து, குளிச்சப்பட்டு என்ற கிராமத்தில் மடக்கி பிடித்து, அம்மாப்பேட்டை போலீசில், இரவு, 10:00 மணிக்கு மேல் ஒப்படைத்தனர்.

வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை பிடிக்கவே நாங்கள் வந்தோம் என எண்ணி, எங்கள் மீது மோதி விட்டு, லாரியுடன் தப்பினர். இதில், ஜீப்பின் ஒருபுறம் சேதமடைந்துள்ளது. லாரியை பின் தொடர்ந்து சென்ற போது, முன்னேறி செல்ல விடாமல், அந்த வாகனத்தை ஓட்டி சென்றனர். எனினும், லாரியை விடாமல் துரத்தி சென்றோம்.குளிச்சப்பட்டில் சாலையின் குறுக்கே மாடுகள் படுத்து இருந்தால், லாரி ஓடிக்கொண்டு இருக்கும் போதே, டிரைவர் அதிலிருந்து குதித்து, பின்னால், டூ - வீலரில் வந்தவர்களுடன் தப்பித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

manivannan
டிச 05, 2024 15:44

தமிழகத்தில் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது அதிக ஊழலும் லஞ்சமும் பெரிய அளவில் மலிந்து கிடக்கின்ற ஒரு மிகப்பெரிய துறை எதுவென்றால் அது வருவாய் துறை தான் தமிழக மக்களின் மிகப்பெரிய புற்றுநோயாகவும் கரையானாகவும் இருப்பது வருவாய்த்துறை லாரி ஓட்டுநர் இறங்கி பணம் கொடுத்திருந்தால் வண்டியை பாதுகாப்பாக அனுப்பியிருப்பார்கள். விவரம் தெரியாத ஓட்டுநர் மாட்டிக்கொண்டார்.... இதுல சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு வெள்ளைக்காரன் கம்பெனி போல ஒரு பெருமை ஒரு விளம்பரம்....


Barakat Ali
டிச 05, 2024 10:38

மக்களே விரும்பி தேர்ந்தெடுத்த அரசு இது ....... குறை சொல்லக்கூடாது .....


கத்தரிக்காய் வியாபாரி
டிச 05, 2024 10:23

இவனுக லஞ்சத்துக்காக விரட்டிருப்பானுக. கலர் காலரா கம்பி சுத்துறானுக.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 05, 2024 10:16

சபாஷ். திருட்டு திராவிடத்தின் காட்டாற்றிக்கு மற்றொரு சாட்சி. சட்டம் ஒழுங்கு இல்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை. அரசியல்வியாதிகள் கொடுக்கிற தைரியத்தில் அதிகாரிகளையே கொல்லப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய தப்பு. அதை சாதாரணமாக செய்கின்றனர். அப்படி என்றால் எப்படியாவது தப்பி விடலாம் என்ற எண்ணம்தான். இந்த மாதிரி ஆட்சி நடத்துபவன்தான் பயங்கரவாதி. அவன் நடத்தும் கட்சிதான் பயங்கரவாத கட்சி. அதை விடுத்து நாம் தமிழர் பயங்கரவாத இயக்கம் என்று ஒரு கூமுட்டை பேசியிருப்பதை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. ஆளும்கட்சியின் இந்த மணல் திருட்டை நிறுத்த முயற்சிக்க வேண்டியதுதானே அந்த கூமுட்டை. பயந்தான்கொள்ளி.


Sathyanarayanan Sathyasekaren
டிச 05, 2024 08:23

சரியாக விசாரித்து பாருங்கள், லஞ்சம் கொடுக்காமல் தப்பி சென்றதால் விரட்டி பிடித்து இருப்பார்கள். அரசு அதிகாரிகளின் யோகித்தை நமக்கு தெரியாதா ?


karthik
டிச 05, 2024 08:56

அதான் அவரே சொல்கிறாரே திருட்டு மணலை பிடிக்க வந்தோம் என்று நினைத்து இடிக்க வந்தனர் என்று..


Kalyanaraman
டிச 05, 2024 08:15

திரு எச் ராஜா சொல்வது போல் இந்த சாதாரண டிரைவருக்கு அரசு அதிகாரிகளை கொலை செய்யும் அளவுக்கு துணிச்சலும் தைரியமும் வந்தது எப்படி? மணல் கடத்தலில் ஆளும் கட்சியினர் பின்புறத்தில் இருப்பது இதன் மூலம் மீண்டும் தெரிகிறது.


Palanisamy T
டிச 05, 2024 07:08

அட கடவுளே, சினிமா சூட்டிங் நடக்கின்ற இடத்தில் தெரியாமல் போய் சோதனைப் போட்டால் இப்படித்தான் நடக்கும். அடுத்த தடவை கொஞ்சம் பாதுகாப்பா இருங்க


Kasimani Baskaran
டிச 05, 2024 06:30

கேவலமாக இருக்கிறது. ஓரிரு அதிகாரிகள் யோக்கியமாக நடந்துகொண்டால் அவர்களை லாரியை வைத்து கொல்வது சுத்த காட்டுமிராண்டித்தனம். 200 300? ஓவாவுக்காக மாநிலத்தையே தியாகம் செய்யும் உடன்பிறப்புக்கள் இருக்கும் வரை தீர்வு கிடையாது.


Mani . V
டிச 05, 2024 05:58

மிஸ்டர் இரும்புக்கை கோப்பால் என்ன இது?


Kumar Kumzi
டிச 05, 2024 10:07

இரும்புக்கை இப்போ துருபிடிச்சி போச்சு


Sudalai
டிச 05, 2024 03:38

This is Dravida model Aachi


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை