உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த கலெக்டரின் உத்தரவுக்கு தடை

கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த கலெக்டரின் உத்தரவுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க கட்டுப்பாடு விதித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பாரம்பரிய தோல் பைகளை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டும், உயர் அழுத்த பம்புகளை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்க அனுமதிக்க கூடாது, பெண்கள் மீது தண்ணீர் தெளிக்க கூடாது, முன்பதிவு செய்தவர்களை மட்டுமே இதற்கு அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு செய்ய மதுரை கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தாக்கலான வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கள்ளழகரின் சிலை, ஆபரணங்கள், குருக்கள் மீது தண்ணீரை அதிக அழுத்தத்தில் பீய்ச்சுவதை தடுக்க வேண்டும். ஆனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதை எவ்வாறு தடுப்பது?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன் ஆஜராகி, கள்ளழகரின் ஆசி பெரும் வகையிலேயே தண்ணீர் அனைவரின் மீதும் பீய்ச்சப்படுகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர். இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதாக' கூறி மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Brahamanapalle murthy
ஏப் 18, 2024 20:29

for the past few years, the TN government continues to interfere and meddle with all temples related issues and s an unhealthy atmosphere to the devotees This trend is not good for the state The government is a guardian to protect the culture/heritage and not hate the culture/heritage In the old the Kings never interfered in the temple administration and customs


Cheran Perumal
ஏப் 18, 2024 19:42

அரசு உயரதிகாரிகள் கொத்தடிமையைவிட மோசம்


duruvasar
ஏப் 18, 2024 19:18

பக்தர்கள் மனதை பாதிக்கிறதாம் இதை ஒரு திராவிட மாடல் அரசிடம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் வாதமாக வைக்கிறாராம் நீதிபதிகளும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து விடுகிறார்களாம் கேட்கிறவன் கேன பயலாக இருந்தால்


sundarsvpr
ஏப் 18, 2024 18:37

சாப்பிட்ட பிறகு கைகளை கழுவுவதற்கும் தடை வந்தாலும் வரலாம் கையில் துண்டு அல்லது தாள்கள் வைத்துஇருந்தால் தண்ணீர் வீணாகாது


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 16:47

வைகை நீரைப் பீய்ச்சியடிக்க வேண்டாம்.


seshadri
ஏப் 18, 2024 16:33

நமது ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தடை செய்ய பார்க்கிறது


GANESUN
ஏப் 18, 2024 16:24

கொத்தடிமை கேட்டான், எப்படியெல்லாம் மேலிடத்தை சந்தோஷப்படுத்த வேண்டியிருக்கு


Ram
ஏப் 18, 2024 16:16

கலெக்டர் தி மு க காரராக இருப்பர் போல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை