உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோயிலில் மேளதாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

பழநி கோயிலில் மேளதாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி : பழநி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மேளதாளம் இசைக்க தடை விதித்ததால் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த கரூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்கள் பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, கிரிவலப் பாதையில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மேளதாளங்களுடன் முருகன் கோயில் செல்வர். நேற்று முன்தினம் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட மேளதாளங்களுடன் பாதயாத்திரையாக வந்த கரூர் பக்தர்கள் முருகன் கோயில் சென்றனர். காவடிகளுடன் வந்த அவர்களிடம் மேளதாளம் அடித்து வர அனுமதி இல்லை என கோயில் பாதுகாவலர்கள் கூறி வாக்குவாதம் செய்தனர். இதை தொடர்ந்து கோயில் உதவி கமிஷனர் லட்சுமியிடம் மேள தாளங்கள் இசைக்க அனுமதி கோரினர். அவரும் மறுத்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.ஹிந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் உயர் அதிகாரிகள் சிலர் பக்தர்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர். அவர்கள் முருகன் கோயிலில் மேளதாளம் இசைக்க தடை விதித்து பக்தர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இது போன்ற அதிகாரிகளை பழநி கோயிலில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். மன அமைதியுடன் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வழி வகுக்க வேண்டும் என்றார்.இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது: மேளதாளம் மங்கல இசைக்கு முறையாக பயின்றவர்களைக் கொண்டு கோயில் பூஜை நேரத்தில் இறைவனுக்கு உகந்த இசை இசைக்கப்படுகிறது. ஆனால் தைப்பூச கூட்ட நேரத்தில் குழுவாக வரும் பக்தர்கள் மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இசைக்கின்றனர். இவர்கள் முறையாக இசை பயின்றவர்கள் அல்ல. இதனால் கோயிலில் கூட்ட நேரத்தில் மேளதாளங்கள் இசைக்க அனுமதிக்க இயலாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 23:26

இந்த திருட்டு குடும்பத்தின் இந்து விரோத போக்கு தெரிந்தும், முட்டால் தனமாக வோட்டை போட்டது இந்துக்களின் தப்பு.


sridhar
ஜன 06, 2024 13:23

கோவிலுக்கு உள்ளே நடத்தணும் என்று கேளுங்க


Anand
ஜன 06, 2024 13:18

கோவில் விவகாரத்தில் அத்து மீறி நடந்துக்கொண்ட அறநிலையத்துறை ஆட்களை கைதுசெய்யவேண்டும்.....


சந்திரன்,போத்தனூர்
ஜன 06, 2024 12:44

புதுசு புதுசா ரூல்சை கொண்டு வந்து இந்துக்களின் கடவுள் மத நம்பிக்கையை குலைப்பதே இந்த விடியா திராவிடமாடல் அரசின் அறநிலையத்துறை கிரிப்டோ அதிகாரிகளுக்கு முழுநேர பணியாக ஆகிவிட்டது.


AMSA
ஜன 06, 2024 12:57

உதயநிதி அதாவது முதல்வரின் மகன் கிறிஸ்துவர் .. அப்படிதான் செய்வார் .


அசோகன்
ஜன 06, 2024 11:41

கோவிலை ஆறு மாதங்கள் மூடி பிறகு 6 மாதம் திறக்கலாம்


Krishna Gurumoorthy
ஜன 06, 2024 10:47

அரசின் கண்ணசைவுக்கு ஆடும் இந்த அதிகாரிகள் எதையுமே முழுவதும் கல்லாத அவமதிக்கும் இவர்களுக்கு


பேசும் தமிழன்
ஜன 06, 2024 10:36

விடியல் வரும் என்று அவர்கள் கூறிய பொய்யை கேட்டு...ஓட்டு போட்டு விட்டு...இப்போது புலம்பி என்ன ஆகப்போகிறது ??? அவர்கள் எப்போதும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்து வந்து இருக்கிறார்கள் ....அதனால் திருந்த வேண்டியது மக்களாகிய நாம் தான் !!!


Ramesh Sargam
ஜன 06, 2024 10:31

ஹிந்து எதிரி திமுக ஆட்சியில் மேலும் என்னவெல்லாம் அக்கிரமங்களை நாம் பார்க்கப்போகிறோமோ..? முதல்வரின் மனைவி, இதுபோன்ற அக்கிரமங்களை ஏன் தன்னுடைய முதல்வர் கணவரிடம் கூறி தடுத்து நிறுத்த கூடாது? உண்மையிலேயே அவர் கோவிலுக்கு பக்தியுடன் செல்கிறாரா, அல்லது மக்களை திசைதிருப்ப நாடகம் போடுகிறாரா என்கிற சந்தேகம் வலுவாக எழுகிறது.


தமிழ்வேள்
ஜன 06, 2024 10:25

எல்லா வகையான புகழும் கிறிஸ்டினா (கிருத்திகா) உதவாத நிதி க்கும், இயக்குகிற திருட்டு சபை பெட்டி கோட்டுகளுக்குமே. ஆப்ரஹாமிய நலன்களுக்காக துவக்கப்பட்ட திராவிட பொறுக்கி இயக்கங்கள் அவர்களாலேயே அழிந்து விடும்..


GMM
ஜன 06, 2024 10:04

முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றால், கிரி வலத்தில் இத்தனை ஆண்டுகள் குழுவாக, மேளா தாள முழக்கம் எப்படி? ஒழுங்கு படுத்தாமல், தடுக்க வேண்டிய அவசியம்? இசை அறியாத அதிகாரிகள் முறையை எப்படி அறிவர்? நாத்திக குழுக்கள் இந்து அறநிலைய துறை பணியில் கூடாது. கிரிவல பாதை கடைகள், ஆக்கிரமிப்பு அகற்றல் எப்போது? புகார் கூற அரசு அலுவலகம் அல்ல கோவில். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் வரும் இடம். அமைதி விரும்பும் பக்தர்கள் வழிபடும் இடம். முதியவர், பெண்கள், குழந்தைகளுக்கு வசதி செய்து தருக. (கோவிலில் வழிபட சில மணி நேரம். செல் அனுமதி இல்லை. புகைப்படம் எடுக்க முடியாத செல் அனுமதிக்கலாம். அல்லது கோவில் உள் போன் வைத்து தொடர்பு கொள்ள வசதி செய்யலாம்).


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை