உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

வங்கி மோசடி; 5 பேருக்கு தண்டனை

மதுரை; திருநெல்வேலியில் உள்ள தேசியமய வங்கியில் 2007-09 ல் தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச் சதி செய்து ஒரு தொழில் நிறுவனத்திற்கு விதிகளை மீறி கடன் வழங்கி வங்கிக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 91 ஆயிரத்து 515 இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ.,நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதாவிற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, பாலசுப்பிரமணியனுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 06, 2025 12:15

இத்தகைய நீதியை வழங்க நீதிமன்றங்கள் தேவையா என்று யோசிக்க வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அன்பர்கள் தாங்கள் செய்த குற்றத்தினால் கிடைத்த பணத்தை இந்த இருபது ஆண்டுகளில் குறைந்தது நான்கு மடங்காக அதிகரித்து இருப்பார்கள். அதை வைத்து வீடு பங்களா என்று அசையா சொத்துக்கள் பல கோடிகளில் சேர்த்திருப்பார்கள். இப்போழுது கூட அவர்களுக்கு தண்டனை அபராதம் எல்லாம் வெறும் டீ குடிப்பது போலத்தான். நாளைக்கே சென்று அப்பீல் செய்து இந்த தீர்ப்புக்கு தடையாணை வாங்கி விடுவார்கள்.


VENKATASUBRAMANIAN
பிப் 06, 2025 07:53

வாழ்க நீதி. இத்தனை வருடங்கள் கழித்து தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. அவர்கள் இத்தனை வருடங்களாக சுதந்திரமாக உள்ளார்கள். இதை பார்த்து அடுத்தவனும் திருடுவான். எப்படியும் 20வருடம் ஆகும். நீதிமன்றங்கள் சிந்திக்க வேண்டும்


சமீபத்திய செய்தி