வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உயர் அதிகாரிகளுக்கு ஆணவம் அதிகம் இப்படி தண்டனை தந்தால்தான் பார்த்து அடுத்தவன் திருந்துவான்
திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தில் ஒரு விஷயம் கூட தவறோ, குழப்பமோ இல்லாமல் நடந்தேறுவது இல்லை .....
இந்த நீதிமன்ற அவமதிப்பு, தாமதம் போன்ற அவலங்களுக்கெல்லாம் காரணம் நம் சட்டங்களுக்கு முதுகெலும்பு இல்லை. பல வருடங்கள் வழக்குகள் விசாரணை என்ற பெயரில் இழுத்துக் கொண்டே போகும். கடும் தண்டனை இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
ஒரு வாரம் சிறை : அப்போ வேலை காலி. எனவே இவரை காப்பாற்ற மேல் முறையீடு செய்வார்கள். இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். அதனையும் ஆராய்ந்து அவர்களுக்கும் தண்டனை தர வேண்டும்.
இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசு அதிகாரிகளின் அறியாமையும் அவர்களது அலட்சியப்போக்கும் தான் காரணம் என்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் அரசிடம் சம்பளம் பெரும் நாம், பதில் கூறவேண்டும் என்ற பொறுப்பும் கடமை ஆற்றவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமலேயே பலர் பெரிய அரசு பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் தான் துணை ஆனால் எத்தனை சாதாரண மக்களுக்கு உயர் நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்த முடியும்?
அதிகாரிக்கு சிறை தண்டனையா? அது ஆளும் கட்சிஅதிகாரிக்குமா? போய்யா போ! பகல் கனவு காணாதே. அப்புறம் நீதிபதியையே உள்ளே தள்ளி விடுவார்கள. ஜாக்கிரதை.
இதற்கு வக்காளத்து வாங்க திராவிட மாடல் அரசு மேல் கோர்ட்டுக்கு செல்லுமே?
பொதுவாக அரசியல்வாதிகள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். ஏனென்றால், உடனடி பணியிட மாற்றம், பதவி உயர்வு நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகளை பதவியில் உள்ள அரசியல்வாதிகளால்தான் உடனடியாக செய்ய முடியும் கோர்ட்டால் பல வருடங்கள் கழித்து, வாய்தா மேல் வாய்தா, தீர்ப்பு வழங்கி, தாமதமாகத்தான் செய்ய முடியும். எனவே கோர்ட் தீர்ப்பின்படி நடக்க அதிகாரிகள் தாமதமாகத்தான் செயல்படுவார்கள். இந்த விஷயத்தை நீதிமன்றங்கள் கடுமையாக அணுக கேட்டு கொள்கிறேன்.
பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
இதே மாதிரி விரிவாக, சரியான தீர்ப்பு சொல்லாத நீதிபதிகளும் சிறையில் தள்ள வேண்டும். இந்திய நீதி துறை புரையோடி போய் இருக்கிறது