உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அமைச்சர் மூர்த்தி தொகுதியில் ஒரே வீட்டில் 211 ஓட்டுகள்; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

 அமைச்சர் மூர்த்தி தொகுதியில் ஒரே வீட்டில் 211 ஓட்டுகள்; கலெக்டரிடம் பா.ஜ., புகார்

மதுரை: ''அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்'' என பா.ஜ., வினர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர். மதுரை கிழக்குத் தொகுதி பொறுப்பாளரும், பா.ஜ., கூட்டுறவு பிரிவு தலைவர் மகாசுசீந்திரன், இணை அமைப்பாளர் ராஜா, ஊடக பிரிவு மாநில பொறுப்பாளர் வேல்பாண்டியன் உட்பட கட்சியினர் கூறியதாவது: மதுரை கிழக்கு தொகுதி தமிழகத்தில் 2வது பெரிய தொகுதி. 3.70 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் உள்ளது. இத்தொகுதியில் 328 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது 395 ஓட்டுச் சாவடிகள் உள்ளன.

ஒரே வீட்டில் நுாறு ஓட்டுகள்

முதல்வர் ஸ்டாலின் வென்ற கொளத்துார் தொகுதி சிறிய தொகுதியாக இருந்தாலும் அங்கு எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்குப் பின், இறந்தோர், தொகுதி மாறியோர், விடுபட்டவை என 70 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுகளே நீக்கப்பட்டுள்ளன. இங்கு முறையாக ஆய்வு நடத்தினால் 90 ஆயிரம் ஓட்டுகளாவது நீக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் நாங்கள் ஆய்வு செய்த சில வார்டுகளில் ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கானேர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். மதுரை மாநகராட்சி 38 வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு என்ற பகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 337ல் 115 பேரும் 1 இ என்ற ஒரே கதவு எண்ணில் உள்ளனர். அதேபோல பாகம் எண் 338 லும் 96 பேர் அதே 1 இ வீட்டு எண்ணில் உள்ளனர். இது எப்படி சாத்தியம்.

பட்டியலில் முறைகேடு

பி.எல்.ஓ.,க்களாக சாதாரண அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றினர். அவர்களால் அதிகாரிகள், ஆளும்கட்சியினரை எதிர்த்து பணியாற்ற முடியாது. அமைச்சர் மூர்த்தி முதல்வர் போல செயல்படுகிறார். இதனால் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் பல ஆயிரம் பேர் உள்ளனர். எனவே தொகுதி முழுவதும் ஆய்வு செய்து தகுதியற்றோரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தோம். விசாரிப்பதாக தெரிவித்தார். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Arjun
டிச 30, 2025 10:59

நாங்க இப்படிதான் ,நேர்மைக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம்.தமிழக தேர்தல் அதிகாரி இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


Madras Madra
டிச 30, 2025 10:49

தேர்தல் ஆணையின் இணைய பக்கத்தில் புகார் பதிவு செய்யும் வசதி உள்ளது


KR india
டிச 30, 2025 08:41

இந்த செய்தியில் உள்ள படி ...... சில வார்டுகளில் ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கானேர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். மதுரை மாநகராட்சி 38 வது வார்டு வண்டியூர் தீர்த்தக்காடு என்ற பகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 337ல் 115 பேரும் 1 இ என்ற ஒரே கதவு எண்ணில் உள்ளனர். அதேபோல பாகம் எண் 338 லும் 96 பேர் அதே 1 இ வீட்டு எண்ணில் உள்ளனர். இது எப்படி சாத்தியம். பி.எல்.ஓ.,க்களாக சாதாரண அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றினர். அவர்களால் அதிகாரிகள், ஆளும் கட்சியினரை எதிர்த்து பணியாற்ற முடியாது... மேற்கண்ட செய்தியில் உள்ளதை எல்லாம், தேர்தல் ஆணையம் கவனிக்குமா? தேர்தல் ஆணையம் ஒன்று செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. எதை எதையோ ஆதாருடன் கண்டிப்பாக லிங்க் செய்ய வேண்டும் என்று கூறிய மத்திய அரசு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் கண்டிப்பாக லிங்க் செய்ய உத்தரவிட்டால் அத்தனை போலி வாக்காளர்களும் எளிதாக நீக்கப் பட்டு விடுவார்களே. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து தானே இதை செயல்படுத்த முடியும். போலி வாக்காளர் தி.மு.க அமைச்சரின் தொகுதியில் இருந்தாலும் குற்றமே, பாரதீய ஜனதா தலைவர்கள், மத்திய அமைச்சர் தொகுதியில் இருந்தாலும் குற்றமே ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் போலி வாக்காளர் போன்றவற்றை நீக்கி, நியாயமான தேர்தல் நடைபெற கை ரேகை bio-metric மற்றும் கண் விழி முக அங்கீகாரம் Face ID இரண்டும் உறுதிப்படுத்தப்பட உதவும் ஆதார் மட்டுமே, ஒரே அடையாள சான்றாக அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் உண்மையான, நியாயமான தேர்தல் நடைபெறும் அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பொதுநலன் கருதி, மாண்புமிகு உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்ற வேண்டுமா ?


J.V. Iyer
டிச 30, 2025 07:32

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே. தவறாக பதிவுசெய்தால், அவர்களை சும்மா விடக்கூடாது.


G Mahalingam
டிச 30, 2025 06:43

கலெக்டரை திமுக கும்பல் மிரட்டும்.


அரவழகன்
டிச 30, 2025 06:04

தி.மு.க.சாதனைகளில் இதுவும் ஒன்று


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை