உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவல்; அண்ணாமலை கடும் கண்டனம்

பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவல்; அண்ணாமலை கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், இன்று (ஜன.,03) மதுரையில் இருந்து நீதி கேட்பு பேரணி துவங்க உள்ளது. இந்நிலையில், பா.ஜ., மகளிரணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zoz1o03d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க., நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, பா.ஜ.,மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது தி.மு.க., அரசு.இந்த தி.மு.க., ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பா.ஜ., மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? தி.மு.க., அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா? இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Yes your honor
ஜன 03, 2025 21:14

சபாஷ், இந்த அரசு சுடுகாட்டிற்கான சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளது, ஒரு 48 மணிநேரம் பொறுங்கள் குடியாத்தத்திற்கும் ராணிப்பேட்டைக்கும் நடுவிலிருந்து குய்யோ முய்யோ என்று ஏதாவது அலறல் சத்தம் வந்தாலும் வரலாம். பிறகுதான் பூரா சீனும். ஒருவர் காதை மற்றொருவர் பிடித்துக் கொண்டு உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் 1136, 1137 என்று ஏதாவது கேட்டாலும் கேட்கலாம்.


பேசும் தமிழன்
ஜன 03, 2025 19:19

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை...... மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று குறிப்பு எழுதி... கவர்னர் அவர்கள் 356 பயன்படுத்த ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம்.


pmsamy
ஜன 03, 2025 17:18

சவுக்கால் அடிச்சுக்கோ சும்மா கண்டனம் சொன்னா பத்தாது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 14:50

அனைத்து கட்சியினரும் போராட்ட களத்தில் தான் தடுத்திருக்கிறார்கள். ஆனால் பாஜக மட்டுமே வீட்டிலேயே தடுத்திருக்கிறார்கள். இதுவே காட்டுகிறது பாஜக மீது திமுக எவ்வளவு பயம் கொண்டுள்ளது என்று. இதை இதைத் தான் தமிழகம் எதிர்பார்த்தது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 13:53

இந்த துயர சம்பவத்தை இவ்வளவு தூரம் அரசியல் ஆக்குவதை, தமிழ்நாட்டில் மக்கள் யாரும் ரசிக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. ஒரு குற்றம் நிகந்திருக்கிறது. 36 மணிநேரத்தில் குற்றவாளி கைது. FIR போட்டு விசாரணை நடக்கிறது?? அப்புறம் எதுக்கு பேரணி, புண்ணாக்கு? ஏன் இப்படி எதிர்க்கட்சிகள் கூப்பாடு போடுகின்றன?? The victim girl might be suffering heavy mental stress, because of these political shows. These may be driven to dire consequences and the bjp wants the death of the victim. Thats why they are exaggerating this.


பேசும் தமிழன்
ஜன 03, 2025 19:23

அரசியல் செய்யயாமல் அவியலா செய்வார்கள் என்று விடியல் தலைவர் கூறியதையும்..... பொள்ளாச்சி.....பொள்ளாச்சி .....என்று கூவியதையும் ....வைகுண்டம் மறந்து விட்டார் போல் தெரிகிறது.... ஆனால் தமிழக மக்கள் மறக்கவில்லை !!!


Kasimani Baskaran
ஜன 03, 2025 13:22

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இந்த அளவுக்கு தீம்க்கா போராடுகிறது - ஆனால் நலத்திட்டத்துக்கு கொள்ளைக்காரனை வைத்து வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட திருட்டுப் பொருள்களை பயன்படுத்துவது ரொம்பவே ஓவரானது.


Raja
ஜன 03, 2025 13:17

டாஸ்மாக் சர்வாதிகாரி ஆட்சியில் போராட்டம் நடத்தவே மக்கள் போராட வேண்டியுள்ளது. இங்கு பெண்களுக்கு நீதி கிடைக்காது.


Dharmavaan
ஜன 03, 2025 12:56

கட்டுமரம் காலத்திலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதில் 200 ,பிரியாணி குவார்ட்டர் எல்லாம் கொடுக்க அண்ணாமலையிடம் பணமில்லை.


Barakat Ali
ஜன 03, 2025 12:56

இதில் போலீசார் அதிக எண்ணிக்கையில் ஈடுபத்தப்பட்டால் அவர்கள் பிற இடங்களில் சட்டம் ஒழுங்கைக் காக்கப்போவது எங்கனம் ????


Dharmavaan
ஜன 03, 2025 12:46

செய்தி பரவக்கூடாது என்று செய்வது மேலும் விளம்பரத்தை கொடுக்கிறது .தடுப்பவன் மடையன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை