உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என கெத்து

செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என கெத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தலையீட்டால் பிரச்னை ஓய்ந்த நிலையில் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்த 'மதநல்லிணக்க வழிபாட்டிற்கு' அனுமதி கிடையாது என காங்கிரசாருக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.சென்னையில் பேட்டியளித்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை 'திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு பிப்.,7 ல் நடத்தப்படும். அனைத்து கட்சியினரும் பங்கேற்பர்' என அறிவித்தார். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதிய போலீசார், உடனடியாக உள்ளூர் காங்., நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். 'டிவி பார்த்துதான் நாங்களே தெரிந்துகொண்டோம்' என தெரிவித்துள்ளனர்.வழிபாடு நடத்த முறைப்படி அனுமதி கேட்டு காங்., சார்பில் நேற்றுமுன்தினம் இரவு வரை மனு அளிக்காததால், செல்வப்பெருந்தகை தரப்பை மதுரை போலீசார் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். சரிவர பதில் சொல்லவில்லை.இதனால் மீண்டும் உள்ளூர் நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போலீசார், 'தனித்தனியாக வந்து தரிசனம் செய்ய தடை இல்லை. கூட்டமாக வந்தால் கைது நிச்சயம்; இதை மேலிடத்தில் சொல்லி விடுங்கள்' என எச்சரித்தனர்.இப்படிதான் நடக்கும் என முன்கூட்டியே கணித்த செல்வப்பெருந்தகை, மதுரை வருவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. விமானம் மற்றும் ரயில் வாயிலாக மதுரை வருவாரா என விசாரித்த போலீசார், எங்கும் அவர் பெயர் இல்லை என்றதும், செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெற்று அறிவிப்பு என முடிவெடுத்து, வேறு பணிகளுக்கு சென்று விட்டனர்.இதையடுத்து, போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத காங்கிரஸ் தரப்பு, போலீசார் அனுமதி தராததால் 'மதநல்லிணக்க வழிபாடு' ரத்து என 'கெத்தாக' அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

கண்ணன்
பிப் 08, 2025 09:18

வெறும் பியூன்


sridhar
பிப் 07, 2025 18:37

ஹிந்து கோவிலில் இந்த ஆளுக்கு என்ன வேலை . ஒரு போதும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசியதில்லை.


sankaranarayanan
பிப் 07, 2025 18:27

நானும் ஒரு அரசுயல்வாதி என்று கூறுவதற்கு ஓர் அவகாசமே கிடைக்க மாட்டேங்கிறதே என்று இவர் ஏங்கி இருக்கிறார்? பாவம், இவர் எந்த கட்சி பிரமுகர் என்று யாராவது சொல்ல முடியுமா!


M Ramachandran
பிப் 07, 2025 17:31

பெரியலேயாயென பெருந்தோகை இருப்பதால் ஸ் டாலினிடம் அது கிடைய்க்கும் மென்று சும்மா ஜால்ரா ஊடகங்களுக்கு உதார் போஸ் கொடுத்திருக்கிறார்


M Ramachandran
பிப் 07, 2025 17:21

ராகுல் போல கட்சியின் தமிழ்நாட்டு தம்பட்டம்+ ஸ்டாலின் ஜிங் ஜா பெருந்தொகை.


Rengaraj
பிப் 07, 2025 17:09

தனித்தனியா வந்து சாமிகும்பிட்டு போகலாம். கூட்டமா வந்தா கைது பண்ணுவோம் என்று சொன்னவுடனே ஜகா வாங்கிட்டாங்க


Sampath Kumar
பிப் 07, 2025 16:51

ஆட்டுக்குட்டிகள் எல்லாம் கெத்து காட்டும் பொது இவரு கெத்து காட்டுவதில் தப்பு இல்லை


krishna
பிப் 07, 2025 21:27

EERA VENGAAYAM SAMPATBKUMAR 200 ROOVAA KOTHADIMAI NEE SOLLUM AATUKUTTI CAT TOUGH THERVIL 99.8%.IPS UNNAL CAT EXAMIL ORU MARK KOODA EDUKKA MUDIYAADHU MURASOLI THUDAITHA MOOLAYODU. AATUKUTTI VALARTHAAL ENNA THAVARU.200 ROOVAA OSI QUARTER PICHAI EDUPPADHU ULAGA MAHA KEVALAM.


Kumar Kumzi
பிப் 07, 2025 15:33

இவன் ஓங்கோல் திருட்டு திராவிஷ விடியலின் கொத்தடிமை மக்களை ஏமாற்றுவதற்காக நாடகமாடுவான்


Raa
பிப் 07, 2025 15:17

அந்த கொசு பேட் எங்கப்பா?


Rajarajan
பிப் 07, 2025 15:11

இவரோட பழைய கதையை கிண்டி கிளறினா தான் சரிப்பட்டு வரும். எங்கே சிபிஐ மற்றும் அமலாக்க துறை ? இன்னுமா தூங்குது.


சமீபத்திய செய்தி