உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு; வருவாய் துறையினருக்கு சம்பளம் பிடிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு; வருவாய் துறையினருக்கு சம்பளம் பிடிப்பு

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, வருவாய் துறை அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க, கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில், பணி நெருக்கடி தருவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், கடந்த 3 மற்றும் 4 ம்தேதிகளில் 48 மணிநேர தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், 25ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், போராட்ட காலங்களில் பணிக்கு வராதவர்களுக்கு, 'நோ ஒர்க் நோ பே' என்ற அடிப்படையில், சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். முன் அனுமதியின்றி பணிக்கு வராதவர்களிடம், அதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என, துறை செயலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு, வருவாய்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

raja
செப் 27, 2025 11:34

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டாதவரை இந்த கோமாளி தனங்கள் அதிகமாக வே நடக்கும்...


Balaa
செப் 27, 2025 10:14

ராதாகிருஷ்ணன் அடுத்த தலைமை செயலர் உறுதி. விளம்பர கல்வி விழாவில் அமுதா எழுந்து நின்று கைதட்டியபோதே இந்த ஜால்ரா அப்பட்டம்.


KOVAIKARAN
செப் 27, 2025 09:09

உங்களுடன் ஸ்டாலின், என்பது அரசு திட்டமா அல்லது திமுக கட்சியின் சதித் திட்டமா? வரும் 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஓட்டுக்களை குறிவைத்துத்தான் இந்த வீணான திட்டமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 08:05

மன்னருக்குத் தெரியலை ...... மரியாதையைக் கேட்டு வாங்குனா தனக்குத்தான் அசிங்கம் ....


Svs Yaadum oore
செப் 27, 2025 07:25

திராவிட மாடலில் பெயர் இல்லாததால் இந்த புறக்கணிப்பு .....பெயர் மாற்றம் செய்து பிரியாணியுடன் .......என்று பெயர் வைத்தால் முகாமில் கூட்டம் பிச்சிக்கும் ...


Kalyanaraman
செப் 27, 2025 07:11

வருவாய்த்துறை மட்டுமல்ல, அந்தந்த துறை அலுவலர்கள் வாங்கும் லஞ்சப் பணத்தில் ஒரு பகுதி அந்தந்த துறை அமைச்சருக்கு கப்பமாக கட்ட வேண்டும். இந்த லஞ்சப் பணம் முதலமைச்சருக்கும் போகும் . ஆதலால், இதெல்லாம் ஒரு கண் துடைப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை