உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார்-பதிவாளராக செயல்படலாம் கூடுதல் அலவன்ஸ் கிடையாது!: பதிவுத்துறை பதிலால் அதிர்ச்சி

சார்-பதிவாளராக செயல்படலாம் கூடுதல் அலவன்ஸ் கிடையாது!: பதிவுத்துறை பதிலால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உதவியாளர்கள், பொறுப்பு சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பில் செயல்படலாம்; ஆனால், அதற்கான படித்தொகை கேட்க தகுதி இல்லை' என, பதிவுத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள, 582 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், முழுநேர சார் - பதிவாளர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்களே, பொறுப்பு சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தற்காலிக அடிப்படையில் தான் நியமிக்க வேண்டும், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், அந்த இடத்தில் முழுநேர சார் - பதிவாளரை நியமிக்க வேண்டும் என, பதிவுத்துறை தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள் துணையுடன், பெரும்பாலான இடங்களில் உதவியாளர்களே, பல ஆண்டுகளாக பணியில் தொடர்கின்றனர். இவர்கள் தங்களை முழுநேர சார் - பதிவாளர் என்றே கூறுவதால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இவர்களில் பணி மூப்பு அடிப்படையில், தகுதி உடையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, முழுநேர சார் - பதிவாளர்களாக நியமிக்க வேண்டும் என, பணியாளர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் காலத்துக்கு, சம்பந்தப்பட்ட உதவியாளர்களுக்கு உரியபடி தொகையை வழங்க வேண்டும் என, தமிழக பதிவுத்துறை அலுவலர் சங்கம் சார்பில், அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதற்கு, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்துள்ள பதில்: இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், 'சி' பிரிவு பணியாளர்களாக வகைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கூடுதல் பொறுப்புக்கான படி வழங்க, அடிப்படை விதிகளில் வழி இல்லை. சார் - பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை கூடுதல் பொறுப்பாக, இவர்கள் கவனித்தாலும் அதற்கான படி பெற தகுதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடிப்படை விதிகளின்படி, உதவியாளர்கள் அவர்கள் நிலையில் உள்ள காலியிடங்களை மட்டுமே கூடுதல் பொறுப்பாக ஏற்க வேண்டும். சார் - பதிவாளர் பணிக்கான கூடுதல் பொறுப்பு படியை பெற தகுதி இல்லை என்றால், அவர்களை ஏன் அதில் நியமிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த விஷயத்தில் அடிப்படை விதிகளை மீறி தான், உதவியாளர்கள் சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர் என்பதை, பதிவுத்துறை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natarajan Ramanathan
அக் 19, 2024 01:18

சார் பதிவாளர்களுக்கு சம்பளமே தேவை இல்லை. தினம் ஒரு லட்ச ரூபாய்க்கு குறையாமல் லஞ்சம் வரும் பதவிக்கு சம்பளம் என்பதே அனாவசியம்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை