உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இன்ஜி., கல்லுாரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

 இன்ஜி., கல்லுாரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொறியியல் கல்லுாரி களுக்கு விதிகளை மீறி முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் 10 பேர், பேராசிரியர்கள் மூன்று பேர் மற்றும் நான்கு கல்லுாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ், 480 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 224 தனியார் பொறியியல் கல்லுாரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணிபுரிவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அத்துடன், விதி முறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்று, பொறியியல் கல்லுாரிகளுக்கு, பல்கலை அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகள் உடந்தை இது தொடர்பாக விசாரணை நடத்த அண்ணா பல்கலை தரப்பில், மூன்று பேர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு பொறியியல் கல்லுாரிகளில் ஆய்வு செய்த போது, எஸ்.மாரிச்சாமி என்ற பேராசிரியர், 11 கல்லுாரிகளில் பணிபுரிவதாக ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பது தெரியவந்தது. அத்துடன் விசாரணை குழு, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு கல்லுாரிகளை ஆய்வு செய்த போது, ரவிகுமார் என்ற பேராசிரியர், இரு கல்லுாரிகளிலும் பணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும், உரிய ஆய்வு நடைமுறைகளை பின்பற்றாததே காரணம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பொறியியல் கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்ட விசாரணை குழு, அவர்களிடம் விசாரணையும் நடத்தியது. இந்நிலையில், விதி முறைகளை பின்பற்றாமல், லஞ்சம் பெற்று, பொறியியல் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் 10 பேர் மீதும், முறைகேட்டில் ஈடுபட்டதாக மூன்று பேராசிரியர்கள் மற்றும் நான்கு கல்லுாரிகள் மீதும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், அண்ணா பல்கலையில் அங்கீகாரம் வழங்கும் பிரிவின் முன்னாள் இயக்குநரும், தற்போது நாகாலாந்து என்.ஐ.டி. இயக்குநராக பணியாற்றுபவரான ஏ.இளையபெருமாள், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நான்கு கல்லுாரிகள் மேலும், அண்ணா பல்கலை அங்கீகார பிரி வின் துணை இயக்குநர்கள் எம்.சித்ரா, ஷைலோ எலிசபெத், முன்னாள் பதிவாளர் ஜி.ரவிகுமார், தற்போதைய பொறுப்பு பதிவாளர் ஜெ.பிரகாஷ், தற்போதைய அங்கீகார பிரிவு இயக்குநர் வி.ஆர்.கிரிதேவ்... பல்கலையின் கோவை இயக்குநர் எஸ்.மார்ஷல் அந்தோணி, மதுரை துணை இயக்குநர் வி.மாலதி, திருச்சி துணை இயக்குநர் எஸ்.பிரகதீஸ்வரன், திருநெல்வேலி துணை இயக்குநர் சிலஸ் சர்குணம் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரிந்து மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் எஸ்.மாரிச்சாமி, எஸ்.கண்ணன், ஒய்.ரவிகுமார் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட திருவள்ளூர் பிரதியுஷா பொறியியல் கல்லுாரி... திருவள்ளூர் ஸ்ரீ வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லுாரி, காஞ்சிபுரம் மாதா பொறியியல் கல்லுாரி, கோவை கதிர் பொறியியல் கல்லுாரி மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களுடன் பெயர் குறிப்பிடாத அரசு அதிகாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் மீது குற்றச்சதி, அரசு ஊழியரால் நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் வாயிலாக, அங்கீகாரம் பெற தகுதி இல்லாத கல்லுாரிகளுக்கு அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கி உள்ளனர். இது, மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தை நேரடியாக பாதித்துள்ளது, மொத்தமுள்ள பொறியியல் கல்லுாரிகளில், 47 சதவீத கல்லுாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மணிமுருகன்
நவ 16, 2025 23:12

அயர்லாந்து வாரிசு வொளம்பர மோக ஊழல கட்சி திமுக கூட்டணி வேந்தர் துணை வேந்தர் பதவிக்கு வழக்க போட்டதே ஒருவர் பல பதவியில் இருக்க வைக்கத்தானே


VSMani
நவ 16, 2025 09:38

அந்த நான்கு கல்லுாரிகள் எவை ?


vbs manian
நவ 16, 2025 09:33

இந்தியாவிலேயே உயர் கல்வி துறையில் முதல் இடம் என்று கழகம் பீற்றி கொள்கிறது.


Varadarajan Nagarajan
நவ 16, 2025 07:23

லஞ்சம் கொடுத்தும் மற்றும் ஆளும்கட்சிக்கு விசுவாசமானவர்கள் பதவிக்கு வந்தால் நேர்மை எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம். இதுபோன்ற ஆசான்கள்தான் நேர்மையைப்பற்றி மாணவர்களுக்கு எப்படி நல்வழி காட்டுவார்கள்? அரசியல்வியாதிகளின் பல கல்லூரிகளுக்கு இப்படித்தான் அங்கீகாரம் பெற்றிருகின்றார்கள் என தெரியும்போது அங்கு திறமையான போதிய ஆசான்கள் இல்லாமல் அந்த கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் வேதனையாகவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும்போது ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகாததால் ஆளுனருடன் ஏன் மோதல்போக்கு ஏற்படுகின்றது என இந்த நிலையில் மக்கள் சிந்திக்கவேண்டும். முழு அதிகாரத்தையும் தங்கள்வசம் எடுத்துக்கொள்ள துடிக்கின்றனர்.


Kasimani Baskaran
நவ 16, 2025 06:47

துணை வேந்தர் இல்லை என்றால் நம்மைக்கென்ன பிரச்சினை அவர்கள் செய்யும் ஊழலை நாம் செய்யலாமே என்று திராவிட மாடலில் அதிகாரிகள் முன்னின்று செய்திருக்கிறார்கள். ஆள்பவர்களுக்கு இதைவிட பெரிய வேட்டை சிக்கியிருப்பதால் இதெல்லாம் சின்னது என்று விட்டு விட்டார்கள் போல தெரிகிறது. திராவிடம் தமிழகத்துக்கு நீண்ட கால அடிப்படையில் செய்யும் சேதங்கள் தீவிரமானவை - மாற்ற முடியாதவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை