ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு
சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை தையூரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டிற்குள் ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த ராஜேஸ்தாஸ், காவலாளியை தாக்கியதாக பீலா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிந்துள்ளனர்.