வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சாதி சண்டை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் சாதி எழுத்து மூலம் ஆதாரத்துடன் வெளிப்படையாக கோர்ட்டுக்கு தெரிவிக்க பட வேண்டிய அவசியம் உள்ளது..அது இன்றி எப்படி வழக்கு நடக்கும்? பிறப்பு முதல் இறப்பு வரை சாதி பிரிக்க முடியாத ஒன்று... அப்படி எவனாவது தனக்கு சாதி இல்லை என்று சொன்னால் அவனது பின்னணியில் ஏதோ மிகப்பெரிய கோளாறு பிரச்சினை இருக்கிறது என்று பொருள்
சமீபகாலம் வரை கூட கிரயப்பத்திரம் உயில் ஆகியவற்றில் மதம் சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவது வழக்கமாக இருந்தது. அவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதியை விட்டுவிட்டு தொடர முடியாது. அதே போல வழக்காடிகளும், சாட்சிகளும் அடையாள அட்டைகளில் ( சாதியுடன்) உள்ளபடியே தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என விரும்பினால் கோர்ட் எதுவும் செய்வதற்கில்லை.
இந்த கட்டுரையில் மனுதாரர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சம்பந்தமான மெமோ குறிப்புகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதி மத தகவல்கள் தவிர்க்க குறிப்பிட்டுள்ளதாக பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார். ஆனால் பின்வரும் பத்தியில் சிவில்/கிரிமினல் வழக்குகளில் நடைமுறை பற்றி சில சரியான தகவல்கள் உள்ளன. மேலும் எல்லா அரசு நடைமுறைகளிலும் தனிநபர் அடையாளமாக ஜாதி மத குடும்ப பிண்ணணி தகவல்கள் கொண்ட ஆதார் வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக உலகின் எல்லா நாடுகளிலும் மத இன பிரிவுகள் குறிப்புகள் கொண்ட தனிநபர் அடையாளம் உபயோகத்தில் உள்ளது. நம் நாட்டிலும் பரவலாக பெருவாரியான மக்களால் மத ஜாதி பிரிவுகள் உள்ளடக்கிய பெயர்கள் வழக்கத்தில் உள்ளது. எனவே குற்ற வழக்குகளில் மட்டும் ஏதோ தனிநபர் இரகசிய தகவல் வெளியாவதாக கருதுவது தவறான கருத்து.
யாரும் கேட்பதில்லை..சாட்சியம் முன்பு...அவரவர்.. மத புத்தகம் வைத்து பிரமாணம் எடுக்கப்படுகிறது...
வேலை அற்ற வழக்கு. அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வட நாட்டில் சர் நேம் ஜாதி பெயர் தான். முஸ்லீம், கிறிஸ்டின் பெயர்களை கொண்டு மதம் தெரியும். என்ன செய்வார்களாம்?