உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசு கெடு முடிகிறது; தமிழகம் மவுனம்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசு கெடு முடிகிறது; தமிழகம் மவுனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான, மத்திய அரசின் கெடு, வரும் 30ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு, 2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்தனர். இதனால், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஐந்தாண்டு கால ஆட்சி முடிய, இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் சிறந்ததை தேர்வு செய்து செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு, வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. சங்கங்கள் அளித்த கோரிக்கைகளை தொகுத்து, அதில் எதற்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை பட்டியலிடும் பணிகள், நிதித் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு கால அவகாசம் தேவைப்படலாம் என தெரிகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள், மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடுவும், அதே 30ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல், மாநில அரசு மவுனம் காத்து வருகிறது.

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது குறித்து முடிவெடுத்து, இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், பல்வேறு வரிசலுகைகள் கிடைக்கும். எனவே, அதில் சேர்வதற்கு சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலக்கெடு முடிந்து விட்டால், அதில் சேர இயலாது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் என்ற, இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். இதில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே, பல சங்கங்களின் கோரிக்கை. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை தான், தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். இதனால், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rathna
செப் 24, 2025 11:33

7.50 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் 5 லக்ஷம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50% அரசு வருமானத்திற்கு மேல் செலவு செய்தால் தமிழ்நாடு அரசு நிதி நிலை காலி. இது தவிர 7 லக்ஷம் அரசாங்க பென்ஷனேர்ஸ். இதை தான் கேரளாவும் செய்தது. இதனால் அரசாங்க நிறுவங்களுக்கு கடன் குடுத்த அரசாங்க நிறுவனங்கள் காலி. கேரளா டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கார்பொரேஷன் என்ற நிதி நிறுவனம் கேரளா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வழங்கிய கடனை திரும்ப குடுக்க முடியாமல் பைனான்ஸ் நிறுவனம் மூழ்கும் நிலையில் உள்ளது.


venkatesan k
செப் 24, 2025 11:01

அரசு திட்டங்களை, அரசு பணியாளர்கள், அரசு பணி காலத்தில் சிரமம் பார்க்காமல் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை மரியாதை செய்யும் விதத்தில் அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் தனது பணி ஓய்வுக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் வாழ அவர்களது பணியை சேவைகளை போற்றும் வகையில் அரசானது ஓய்வுதிய திட்டம் செயல்படுத்துவதால் அரசுக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் நன்றாக இருக்கும் .இதனை அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


Indian
செப் 24, 2025 09:36

மத்தியில் பா ஜ ஆட்சியில் இருக்கும் வரை, தமிழ் நாட்டிற்கு எந்த நல்லதும் நடக்க போவதில்லை.. பா ஜ தமிழகத்துக்கு எதுவும் செய்ய போவதில்லை , இதை மக்கள் உணர்ந்தால் நல்லது ..


Svs Yaadum oore
செப் 24, 2025 10:10

உண்மைதான்.. இத்தாலி காங்கிரஸ் இப்போது கர்நாடகத்தில் ஆட்சி ....அங்கிருந்து காவேரி தண்ணீர் திறந்து விட்டு இங்கே தமிழ் நாடு வெள்ளக்காடாக மாறி விட்டது ..அதனால் விடியல் இத்தாலியுடன் கூட்டணி ...


GMM
செப் 24, 2025 08:34

ஒருங்கிணைந்த மத்திய அரசின் ஓய்வு ஊதியம் நடைமுறை படுத்த முடியும். பழைய ஓய்வு ஊதியம் வழங்க சாத்தியம் இருக்காது. செயல் படுத்த முடியாது. நிதி வருவாய் போதாது? முன்பு பொதுப்பணி, வருவாய், நீதி மன்றம், போலீஸ் போன்ற முக்கிய துறைகள் மட்டும். தற்போது ஏராளமான துறைகள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆக்க பட்டு வருகின்றனர். தமிழக மௌனம் அரசு ஊழியர்கள் எதிர்காலம் பாதிக்கும்? திமுக மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் படுகிறது.


Svs Yaadum oore
செப் 24, 2025 08:03

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் என்ற, இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்குமாம் ...இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தான், தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்குமாம்.. பழைய ஓய்வூதிய திட்டதிற்கு விடியல் அவனுங்க அப்பன் வீட்டிலிருந்து பணம் கொண்டு வந்து கொடுப்பானுங்க ...


SULLAN
செப் 24, 2025 07:35

பிரகாஷ் ராஜ், சத்யராஜ் காசாவில் அவதிப்படும் மக்களுக்காக குரல் கொடுத்து பேரணி நடத்தினால் உனக்கு இங்கே ஏன் எரியுது? அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக நீயும் பேரணி நடத்து யார் தடுத்தா?? யார்? யாருக்கு குரல் கொடுக்கணும்னு நீங்க என்ன முடிவு பண்றீங்க?


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 24, 2025 08:02

கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 24, 2025 08:14

அங்க 1700 பேரை கொன்னதை கண்டிச்சி பேரணி நடத்தி இருந்தா ...


Indian
செப் 24, 2025 07:15

ஓரவஞ்சையும், துரோகமும் செய்தால் மௌனம் தான் காக்க முடியும் ..


R SRINIVASAN
செப் 24, 2025 06:54

அரசு ஊழியர்கள் லஞ்சத்தை தவிர்த்து இருந்தால் மக்கள் ஆதரவு இருக்கும் .இவ்வளவு பிரச்னைகள் தமிழ் நாட்டில் இருக்கையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், போன்ற நடிகர்கள் காசாவில் அவதிப்படும் மக்களுக்காக பேரணி நடத்தினார்களாம். விஜய், சீமான் போன்றவர்களும் இம்மாதிரி பிரச்னைகளை பற்றி பேசாமல் ஜாதி மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். தமிழ் நாட்டில் கட்சிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது மக்கள் கீழ்கண்ட பிரச்னைகளை எடுத்து சொல்ல வேண்டும். 1. தரமற்ற சாலைகள். 2. டாஸ்மாக் மூடுவிழா 3. போதை மருந்துகளை விற்பவர்களுக்கும், பெண்களை சீரழிப்பவர்களுக்கும், u-tube -இல் நடிகைகளை கேவலமாக பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனை. 4. அரசு பள்ளிகள், பாலங்கள் கட்டப்படுவதற்கு முன்பு சிறந்த கட்டட வல்லுநர்களையைக் கொண்டு ஆய்வு செய்து தரமுள்ள பள்ளிகள், பாலங்கள் கட்டப்படுவதில் உறுதி மொழிகள் . 5. ஏழைகளுக்கு கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு நவோதய பள்ளிகள் தொடங்குதல்.


Ram
செப் 24, 2025 06:06

இல்லாத திராவிடம் மற்றும் திருட்டு திராவிடர்களை நம்பி மோசம் போவதே இவர்களின் வேலை


Kanns
செப் 24, 2025 06:00

Reduce All OverFattened Salaries to 95% Useless /Wasteful Govt Officials by 33% Level. Those who dont Like Must Leave for Giving Jobs to Huge UnEmployeds Strictly on Appropriate Minm Wages


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை