வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பறக்கும் ரயில் சேவை ரத்து என்று செய்தி போட்டு விட்டு, மெட்ரோ ரயிலின் போட்டோ போட்டிருக்கிறீர்களே.. ஒரே குழப்பமா இருக்கு
2015 மழையிலும் மாடி ரயில் நிறுத்தப்படவில்லை இப்போது ஏன் ? கொஞ்ச நாட்களாக சென்னை புறநகர் ரயில் சேவை தரம் மிகவும் குறைந்து விட்டது உதாரணம் இந்த செய்தி, தாம்பரம்-கடற்கரை ரயில் நிறுத்தங்கள். தீபாவளி முன் வந்த கடைசி ஞாயிறு நிறுத்தி மக்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது
பறக்கும் ரயில் சேவை ரத்து என்று செய்தி போட்டு மெட்ரோ ரயில் படத்தை போட்டால் தினமலர் வாசகர்களுக்கு என்ன தெரிய போகிறது ஒன்றுமில்லை ஒன்றிய அரசு சேவையை ரத்து செய்தால் மாநில அரசின் மேல் பழியை போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்களோ
இதே போல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது என்று கூறி மாடி ரயில் படம் வந்தது இப்போது மாடி ரயிலும் நிறுத்தப்பட்டது என்ற அடுத்த செய்தி அரசு பண்ணும் குழப்பங்கள் போல உள்ளது
சுபார்பன் ரயில்களை இயக்குவதால் லாபமில்லையென்பதால் ரயில்வேக்கு அவற்றை எப்போதெல்லாம் ஏதேதோ காரணங்காட்டி ரத்து செய்யலாம் என்பதிலேயே முனைப்பாக செயல் படுகிறார்கள் இந்த போக்கு சென்னைக்கு மட்டுமே இதுபோல மும்பையில் முடியாது பெருவெள்ளம் சூழ்ந்தபோதும் எப்படியாவது இயக்கவே முயல்வார்கள் கொல்கத்தா நிலைமையே வேறு ராஜதானி போன்ற ரயில்களுக்கும் இல்லாத முக்கியத்துவம் சுபர்பன் ரயில்களுக்கு தருவார்கள் குறித்த நேரத்துக்கு இயக்கப் படும் இல்லையேல் பிழைப்பு நாறிவிடும்
சப்அர்பன் ரயில் கட்டணம் ஏற்றப்பட வேண்டும்.. தாம்பரம் மாம்பலம் ஐந்து ரூபாய்.. ஆனால் அதே தூரத்திற்கு மாநகர பஸ் கட்டணம் 34 ரூபாய்..௩௪ ரூபாய் தர முடிந்த பயணி குறைந்த பட்சம் 10 ரூபாய் ரயில் கட்டணம் தாங்க மாட்டாரா என்ன?..
புயல் , மழைக்கு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சிறப்பாக உள்ளன ..