உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை: டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீரை திறந்து வைக்கிறார். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஆண்டுதோறும், குறுவை, சம்பா மற்றும் தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர், கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் 2 நாட்கள் தஞ்சையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கல்லணையை திறந்து வைக்க உள்ளார். இதன்மூலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதறை அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள விளைநிலங்கள் பயனடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுலைமான்
ஜூன் 13, 2025 23:35

கரிகாலனோட பேரன்.... திறந்து வைக்க போறார்.....


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 13, 2025 22:06

2021 தேர்தல் நேரத்தில் கொடுத்த 550 வாக்குறுதிகளை முழுமையாக 4 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம். ஐந்தாம் ஆண்டு சும்மாவா இருக்க முடியும்? அதனால் இனி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். அப்படி சொல்லாத வாக்குறுதிகள்தான் மேட்டூர் அணை நீர் திறப்பு, கல்லணை நீர் திறப்பு. இதுபோன்ற சாதனைகளை டொனால்ட் டிரம்ப அவர்களாலும் அமெரிக்க செய்ய முடியாது


Murugesan
ஜூன் 13, 2025 16:59

மேட்டூர் கல்லணையில் தண்ணீர் திறக்கிறது எல்லாம் ஒரு சாதனை,


SUBRAMANIAN P
ஜூன் 13, 2025 13:49

கல்லணையில் இருந்து நீரை திறந்து விடுகிறார் னு தலைப்பு போடுங்க.. என்னமோ இவரே கல்லணையை கட்டி அதை திறந்து வைக்கிறபோல தலைப்பு போட்டிருக்கீங்க. காமராஜருக்கு அப்புறம் எந்த முதலமைச்சர் அணை கட்டி இருக்காரு. எல்லாவனும் அவனவன் வாயிக்கும் வயித்துக்கு போட்டுகரத்துக்கு மட்டுமே முதலமைச்சர் ஆகி இருக்கானுங்க. நீங்களே போதும். தப்பு தப்பா தமிழ் வார்த்தைகளை போடாதீங்க.


சமீபத்திய செய்தி