உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் மீது கருணை அடிப்படையில் வேலை வழங்காதது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nnxpbvtw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர். விசாரணையில்,இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி இல்லை என்றும் மாறாக தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.மன்னிப்பை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

C KRISHNAN
ஜூலை 23, 2025 08:33

அது சரி. கோர்ட்டை அவமதித்தவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்ததா?


devanathan srinivasan
ஜூலை 22, 2025 16:09

High should have asked them why they did not do it? Simply left the matter.. not correct..


devanathan srinivasan
ஜூலை 22, 2025 16:03

வெரி sad.


koderumanogaran
ஜூலை 22, 2025 15:27

தமிழ் நாட்டின் அனைத்து அரகதுறை செயலர்களும் மன்னிப்பு கோரவேண்டும் ஆனால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் எல்லாராலும் நீதிமன்றம் செல்லமுடியாத நிலை


Elangovan .K
ஜூலை 22, 2025 12:21

மனிதன் மனச்சாட்சியை தொலைத்து விட்டான். மனிதநேயம் மடிந்து விட்டது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மீகம் இவைகளில் இணைந்துள்ள மனிதர்களும் அப்படித்தான் இருப்பார்கள்


Rajendran Arumugam
ஜூலை 22, 2025 10:20

முன்பு ஒருவர் கூறியது நினைவில் வந்து தொலைக்கிறது......


Appandairajan p
ஜூலை 22, 2025 09:51

எந்த அதிகாரியாக இருந்தாலும் அதிகாரம் மீறுவதையே கொள்கையாக கடைபிடிக்கிறார்கள் நீதிமன்றம் சரியானமுறையில் அறிவுறுத்தவேண்டும்


sangarapandi
ஜூலை 22, 2025 07:39

உயர் நீதி மன்றம் தமிழக ஐ .ஏ .ஸ் உயர் அதிகாரிகள் கேட்டு கொண்ட மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்திருப்பதற்கு மிக்க நன்றி . அதே நேத்தில் வரும் காலங்களில் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பை காலதாமதம் இன்றி நிறை வேற்றிட நல்ல தீர்ப்பையும் வழங்கிட வேண்டுகிறேன் .


VSMani
ஜூலை 22, 2025 10:44

உயர் நீதி மன்றம் தமிழக ஐ .ஏ .ஸ் உயர் அதிகாரிகள் கேட்டு கொண்ட மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்திருக்கிறது. அதே நேத்தில் ஒரு சாதாரன மனிதரின் மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்யுமா?


spr
ஜூலை 22, 2025 01:55

கருணை அடிப்படையில் எல்லோருக்கும் வேலை தரவேண்டுமென்ற அவசியமில்லை என்றாலும் விண்ணப்பித்தவர்களுக்குத் தகுதியிருந்ததா? யாருக்கு வேலை தரவில்லை? அதற்கு என்ன காரணம் என்ன? என்றெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.என்பதனால் மட்டுமே உயர் நீதி மன்றம் வேதனைப்படுகிறதோ? இத்தோடு வழக்கும் முடிவடைந்ததா?


Natarajan Ramanathan
ஜூலை 22, 2025 01:54

முதலில் கருணை அடிப்படையில் அரசு வேலை என்னும் கொடுமையை ஒழித்துகட்டுங்கள்....


Satish Chandran
ஜூலை 22, 2025 05:46

உனக்கு நோவு வந்தால் தெரியும்.கருணை அடிப்படையில் வேலை என்பது ஒரு குடும்பத்தை காக்க தரப்படும் இழப்பீடு ஆகும்.