மேலும் செய்திகள்
காவிரி கூட்டு குடிநீர் புனரமைப்பு பணி தொய்வு
19-Mar-2025
சென்னை:''ராமநாதபுரம் மாவட்டத்தில், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மினி டைடல் பூங்கா அமைத்து தரப்படும்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்: ராமநாதபுரம் - துாத்துக்குடி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், ராமநாதபுரத்தில் வேளாண் மரபு பூங்கா அமைந்துள்ளது. அதன் அருகில், 100 ஏக்கர் அரசு தரிசு நிலம் உள்ளது. அங்கு தொழில் பூங்கா அமைத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.* அமைச்சர் ராஜா: ராமநாதபுரம் மாவட்டத்தில், சக்கரகோட்டை, பட்டினம்காத்தான் கிராமங்களில் உள்ள அரசு நிலங்களை, 'சிப்காட்' நிறுவனம் கண்டறிந்துள்ளது. மற்ற நிலங்களை, துறை ஆராய்ந்து வருகிறது. இந்த ஆட்சியில்,அனைத்து மாவட்டங்களுக்கும் தொழில் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என, முதல்வர் செயல்பட்டு வருகிறார்.எனவே தான், ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தொழில் வளர்ச்சியை உருவாக்கும் அனைத்து வேலைகளும் நடக்கின்றன. தென் மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ., குறிப்பிட்டுள்ள இடத்தில், சிப்காட் அமைப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்: ராமநாதபுரத்தில் பொறியியல் படித்த இளைஞர்கள், வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு வேலைக்காக செல்கின்றனர்.இந்நிலை மாறி, கல்வியில் வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் காரணத்தால், ராமநாதபுரத்தில், 'டைடல் பூங்கா' அமைக்க வேண்டும்.* அமைச்சர் ராஜா: ராமநாதபுரத்திற்கு மினி டைடல் பூங்காதான் சரியாக இருக்கும். மாநிலத்தில், 10 டைடல் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டன. அதில், நான்கு கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மூன்று கட்டப்பட்டு வருகின்றன. மூன்று டைடல் பூங்கா அமைக்க, முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.மதுரையில் மிகப்பெரிய டைடல் பூங்கா அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதல் நிலையில் உள்ளது. இது குறித்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிடுகிறேன்.2021ம் ஆண்டு மின்னணு சாதனங்கள், 1.86 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, தற்போது, 12.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. விரைவில், 13 பில்லியன் டாலரை எட்டும்.இந்திய அளவில் தமிழகம், 37 சதவீதம் மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.
19-Mar-2025