உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்; முதல்வர் ஸ்டாலின்

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்களின் புகார்களை அதிகாரிகள் எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை பற்றியும் கேட்டறிந்தார்.மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். மழை பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். அதேபோல, அதிக மழைப்பொழிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பேசியதாவது; விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி (கோத்தகிரி) மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அக்.,21 மற்றும் 22ம் தேதிகளில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புயலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் முகாம்களில் தங்க வைப்பதோ, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவோ இல்லை. இருப்பினும், தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, எனக் கூறினார். அப்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழையினால் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு; அது யாரு சொன்னா, எதிர்க்கட்சி தலைவர் தான் சொல்லிக் கொண்டு வருகிறார். தவறான செய்தி. அதற்கு எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் இரு வாரங்களில் பணிகள் முடிக்கப்படும், எனக் கூறினார். சென்னையில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

N S
அக் 23, 2025 11:08

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு தயாராக நாங்கள் எங்கள் ஊடகங்களை தயார் படுத்தி இருப்பதாக அப்பா தெரிவிக்கிறார். மக்கள் தண்ணீர் பற்றாக்குறை இன்றி மகிழ்ச்சியாக தெருவில் குதிக்கிறார்கள், மன்னிக்கவும், குளிக்கிறார்கள். இதுவே தமிழகத்தின் விடியல் ஆட்சி சாதனை.


Venugopal S
அக் 20, 2025 14:03

தமிழக அரசு மழை வெள்ளத்தை சமாளிப்பதை மத்திய பாஜக அரசு கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள், கவலைப் பட வேண்டாம். அப்புறம் எல்லாம் முடிந்த பிறகு இது நொட்டை,அது நொள்ளை என்று குறை சொல்ல வந்து விடுவார்கள்!


vbs manian
அக் 20, 2025 11:30

வழக்கமான மெஷின் language


சுந்தர்
அக் 20, 2025 06:21

பண மழையால் பிறகு சமாளிப்போம்.


நரேந்திர பாரதி
அக் 20, 2025 03:44

இயற்கை சீற்றங்களையும் பணத்தால் அடிக்கலாம்...இதுதான் திராவிடிய மாடல்...இயற்கை திருப்பி அடிக்கும்போது நீங்களெல்லாம் உருத்தெரியாமல் அழிந்துபோவீர்கள்


சிட்டுக்குருவி
அக் 20, 2025 03:10

ஐயா ,நீங்கள் தயார் நிலையில் இருப்பதாக வந்த செய்தித்தாளில் தான் இந்த செய்தியும் வந்திருக்கின்றதேஇன்னும் எவ்வளவுகாலம்தான் தயார்நிலையிலேயே இருப்பிங்க " இந்த வருஷம் தீபாவளி இல்ல சாக்கடையில் வாழும் மக்கள் அதிர வைக்கும் காட்சி சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி பகுதி கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் கழிவுநீர் அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் செயல்படுகிறது. இங்கே அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பழுதுதாவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. புளியந்தோப்பு, பட்டாளம், கே.எம் கார்டன் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கழிவு நீர் தேங்கி உள்ளது. பொதுவாக சென்னையில் மழை பெய்தால் தான் ரோட்டில் தண்ணீர் தேங்கும். ஆனால் இங்கே மழை பெய்யாமலேயே தெருக்களில் 3 அடி உயரத்துக்கு கழிவு நீர் மட்டுமே தேங்கி இருக்கிறது. வீட்டு கதவை திறந்தால் நாற்றம் தாங்க முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது."


Murthy
அக் 20, 2025 02:24

இவருக்கு என்னப்பா வாயால் வடை சுடுவார் ....அவதிப்பட போவது என்னவோ மக்கள்தானே ....


senthil
அக் 20, 2025 01:56

this message only for his family not for TN people.


சிட்டுக்குருவி
அக் 20, 2025 00:54

முதல்வரே நீங்கள் தினமலர் செய்தித்தாள் பார்ப்பதில்லையா ? இதுவரைப்பார்ப்பதில்லையென்றால் இப்போது 18,19 தேதிகளில் வந்த செய்தித்தாளை பாருங்கள் .உங்கள் தயார் லக்ஷணம் உங்களுக்கே புரியும் .வேலூர் மாவட்டத்தில் எரிகுத்தி கிராமவாசிகள் தெருவில் சேறும்சகதியில் நாற்று நடுகின்றார்கள் .20 வருடங்களாக சாலை வசதிக்கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றோமே என்று கூறுவதை .அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 50000 மக்கள் வசிக்கும் பகுதி முழுவதுமாக முழங்கால் தண்ணீரில் முழுகி இருப்பதை .அடுத்து கோவை அருகில் அன்னூர் முழுவதும் தண்ணீரில் மிதந்துகொண்டிருப்பதை .இந்தனை பகுதிகளும் தமிழ்நாட்டில்தானே இருக்கின்றது .நீங்கள் தயார் நிலையிலேயே இருங்கள் இன்னும் 6மாதகாலம் அப்புறம் கோடைகாலம் வந்துவிடும் .அடுத்துவரும் மழைக்காலத்திற்கு மறுபடியும் தயராவீர்கள் .இவையெல்லாமே தினமலரில் வீடியோவாக வந்திருக்கின்றதே .உங்கள் ஆட்சியில் பொறுப்பானவர்கள் யாரும் இல்லையா உங்கள் பார்வைக்கு கொண்டுவர .உங்களுடைய ஆட்சி ஒரு பழைக்கால கதையை நினைவு படுத்துகின்றது .இது வெறும் கதைதான் இதை நான் உங்கள் ஆட்சியை ஒப்பிடவில்லை . நீங்கள் நன்றாகவே ஆட்சி செயகிண்றீர்கள் .ஆனால் இதில் ஒருசிறு பிழை உள்ளது .பழையகாலத்தில் ஒரு மன்னன் அடிக்கடிவேட்டைக்குப்போவதுண்டு .ஒருநாள் வேட்டைக்குப்போகும்போது வழியில் ஒரு சலவை தொழிலாளி எதிரில் வந்துகொண்டிருந்தான் .அவன் அரசனை பார்த்து வணங்கி அரசே நீங்கள் எங்கே சென்றுகொண்டிருக்கின்ரீர்கள் .இன்னும் சிறிதுநேரத்தில் மழைவரப்போகின்றது என்று கூறினாள் .அதைக்கேட்ட அரசன் உனக்கு எப்படித்தெரியும் என்று கேட்ட்டு கொண்டிருக்கும்போதே மழையும் வருகிறது .அப்போது சலவைதொழிலாளி சொன்னான் கழுதை ஒருமாதிரி பிளிறும் ,அது மழைவருவதற்காண அறிகுறி என்று .அதைக்கேட்ட அரசன் தனது மந்திரியை பதவிநீக்கம் செய்துவிட்டு அந்த கழுதை யை தனது மந்திரிசபயில் வைத்துக்கொண்டான் .


r.thiyagarajan
அக் 20, 2025 00:45

இயற்கைக்கு சவால் கொடுக்கும் நமது தமிழக முதல்வர் என்ன… துணிச்சல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை