எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்
சென்னை:எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.6 கிலோ கோகைன் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் அதிகாலை, 1:30 மணிக்கு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வருவதாக, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4cng529j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 முரணாக பதில்
இதையடுத்து விமானத்தில் வந்தவர்களில், சந்தேகத்திற்குரிய நபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களை சேர்ந்த, இரு பயணியர் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பியது தெரிய வந்தது. அவர்களை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களின் உ டைமைகளை பிரித்து பார்த்த போது, சாக்லேட்டுக்குள் கோகைன் போதைப்பொருள் வைத்து, கடத்தியது தெரிய வந்தது. அதன் எடை 5.6 கிலோ; மதிப்பு, 56 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்தனர். நாடகமாடினர்
விசாரணையில், இருவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உட்பட மேலும் இருவரை கைது செய்தனர். இது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தங்கம் கடத்தலில், தற்போது அதிக கமிஷன் கிடைப்பதில்லை. இதனால், வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பல், 'சிந்தடிக்' போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட துவங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியாவில், குறிப்பிட்ட சில நாடுகளில், ஆட்களை நிர்ணயித்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும், முதல் முறை கடத்தலில் ஈடுபடுவது போல நாடகமாடினர். தீவிரமாக விசாரித்ததில், அவர்கள் தங்கம் மற்றும் போதைப்பொருட்களை, அடிக்கடி கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இதற்கு உதவியாக இருந்த, மும்பையை சேர்ந்த நபர், டில்லியில் பதுங்கி இருந்த, கடத்தல் கும்பல் தலைவனான, நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் ஆகியோரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.