உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும்: பழனிசாமி

கோவை மாஸ்டர் பிளான் தயாரிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும்: பழனிசாமி

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள, கோவை மாஸ்டர் பிளான் 2041ல், நிலப்பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியுடன், நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய, 1,531 சதுர கிலோ மீட்டருக்கு, புதிய கோவை மாஸ்டர் பிளானை, நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், முழுமையாக நடத்தப்படவில்லை. இச்சூழ்நிலையில் பல்வேறு குளறுபடிகளை கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலங்களை, விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே வளர்ந்த தொழில் நகரமான கோவை நகரப் பகுதியில், நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவது, ஊழலுக்கு வழிவகுக்கும். நில வகைப்பாடு மாற்றத்தில், தி.மு.க.,வின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனம் மற்றும் தி.மு.க., குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலங்கள் என, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், 'கோவை மாஸ்டர் பிளான் 2041' உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, தற்போது வெளியிட்டுள்ள, 'கோவை மாஸ்டர் பிளான் 2041'ன்படி, நகர ஊரமைப்பு திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில், நில வகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். முறையான திருத்தங்கள் செய்து, புதிய கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N PALANISAMY
ஆக 29, 2025 08:41

அய்யய்யோ, மக்களே, யோக்கியன் வந்துவிட்டான்.... சொம்பை எடுத்து பத்திரமா ஒளித்துவையுங்கள்.... ஜாக்கிரதை.


bharathi
ஆக 27, 2025 13:16

EPS resembles M K Alagiri


T.sthivinayagam
ஆக 27, 2025 10:37

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி அமைத்திர்களே அதிலும் இதே மேட்டர் தானா


Kadaparai Mani
ஆக 27, 2025 10:02

Excellent sir. Welcome for your pro active report. Arrange agitation by senior leaders of aiadmk. You are getting Excellent reception at your recent meetings in Trichy which is considered as dmk bastion. MGR tharmam and your faith on god will give you Excellent support in next year election


N DHANDAPANI
ஆக 27, 2025 09:34

அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தோம் என்றால் இது மிக சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து. முதற்கண் இந்த செய்தியை பிரசரித்துள்ள தினமலருக்கு விவசாயிகள் சார்பாக மிக்க நன்றி. பொதுமக்கள் கருத்து கேட்பு நடைபெறவில்லை. தங்களுடைய நிலங்களை இழக்கப் போகிற விவசாயிகளுடைய கருத்து கேட்பும் நடைபெறவில்லை. ஆனால் இதில் பலன் பெற போகிற நிறுவனங்களின் கருத்து மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஆமாம் அடுத்தவர்களுடைய நிலத்தை குறைந்த விலையில் பெறக்கூடிய முதலாளிகள் அமைதியாக தான் கலந்து கொண்டாக வேண்டும்... இதில் என்ன வியப்பு? ஆனால் எந்த விலைக்கு எந்த இடத்தை நாம் எப்போது இழந்து விடுவோம் என அறியாத நிலையில், பயத்தில் உழலும் விவசாயிகள் எவ்வாறு நிம்மதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலும்? எனவே கருத்து கேட்பு கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அணுகுமுறை தான் காரணம். இதற்கு முன்மொழிவாக தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடமும் நகர அமைப்பு இயக்குனர் அவர்களிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சென்று கடிதங்கள் அளித்த பின்னர், மாற்றத்தை அளிக்க இயலாத அளவில் பதில்கள் கொடுக்கப்பட்டன. எனவே எங்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்த கருத்து: எதிர்கால திட்டங்களுக்கு விவசாயிகளிடமிருந்து அதிருப்தியும் எதிர்ப்பும் வரும் என்பது உண்மை என்றும் அதற்கு காரணம் மேற்கண்ட குறைபாடுகள் தான் என்றும் தெரிவித்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நகரமைப்பு துறை இதிலிருந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற ஒரு நியாயமான கருத்து கேட்பை நடத்த வேண்டும். அரசுக்கு கனிவுடன் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டம்


அப்பாவி
ஆக 27, 2025 07:05

அனுபவம் பேசுது...


chanakyan
ஆக 27, 2025 08:23

இப்பிடி அப்பாவியாவே இருந்தா எப்படி? அவங்க ஆட்சியிலேயும் இவங்க ஆட்சியிலேயும் நில விலையை ஒப்பிட்டுப் பாருங்க. இன்றைய ரியல் எஸ்டேட் கார்பரேட்கள் யாரோட ஆளுன்னு பாருங்க.


V Venkatachalam
ஆக 27, 2025 15:47

ஆமா ஏற்கனவே சந்தி சிரிக்கும் திருட்டு தீயமுக வைப்பத்தி தெரிஞ்சுக்க புது அனுபவம் தேவையில்லைதான்.பழைய அனுபவமே போதுமே. அனுபவம் இல்லாதவன் பணத்துக்காக அனுபவத்தை பத்தி பேசும் போது திருட்டு தீயமுக வைப்பத்தி தெரிஞ்சவன் பேசுறதுல என்னா தப்பங்குறேன்.


Chanakyan
ஆக 27, 2025 06:55

தாமதமானாலும் இந்த விஷயத்தில் குரல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அய்யா. இதன் பின் விளைவாக சாதரண மக்கள் வீடு வாங்குவது என்பது இன்று எட்டாக்கனி ஆகிவிட்டது. நில மாஃபியாக்கள் செய்யும் அராஜகத்திற்கு எதிராகவும் இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் இன்னும் பலமாக குரல் எழுப்புங்கள். உங்கள் ஆட்சியில் ஆவன செய்து இவற்றை சரி செய்யுங்கள்.


rama adhavan
ஆக 27, 2025 06:03

நீங்கள் 2026இல் ஆட்சிக்கு வந்தபின் இந்த மாஸ்டர் பிளான்ஐ ரத்து செய்து விடவும்.


rama adhavan
ஆக 27, 2025 06:02

நீங்கள் 2026இல் ஆட்சிக்கு வந்தபின் இந்த மாஸ்டர் பிளான்ஐ ரத்து செய்து விடவும்.


சமீபத்திய செய்தி