உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவரையும் வரும், 19ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2ம் தேதி இரவு, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, துாரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, என்பது தெரியவந்தது. கடந்த 3ம் தேதி இரவு, மூவரும் துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்தபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும் இதே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், இன்று( நவ.,11) இரவு மருத்துவமனைக்கு வந்த ஜே.எம்., 2 நீதிபதி அப்துல் ரகுமான், மாணவியை சந்தித்து உடல்நிலையை கேட்டறிந்தார். அதன் பின், மூன்று குற்றவாளிகளை சந்தித்து, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். மூவரையும் வரும், 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kannan
நவ 11, 2025 17:59

...சாதியினர் தவறு செய்திருக்கிறார்கள். எந்த தலைவனும் கண்டிக்கவில்லை. ... சாதிக்காரன் பாதிக்கப்பட்டால் மட்டும் வாய்கிழிய பேசி சாலையை மறித்து ரவுடித்தனம் செய்வார்கள் குற்றவாளிகளை கண்டித்து திருத்தனும்


Tamilselvan Radhakrishnan
நவ 10, 2025 09:21

மூன்று வெறிநாய்களை கொடூரமாக கொல்ல வேண்டும்.


Subramanian Arumugam
நவ 09, 2025 16:30

இந்த காமுகர்களுக்கெல்லாம் என்ன விசாரனை வேண்டி இருக்கு மூன்று சாகும் வரை பட்டினி போட்டு துடிதுடிக்க தானாகவே சாக வேண்டும் அப்போதுதான் அடுத்த காமவெறியர்களுக்கு பயம் வரும் இதைச் செய்தால் நியாயமான தண்டனையாக இருக்கும்.


Muthusamy 888
நவ 09, 2025 15:52

குற்றவாளி 3 மொன்று பேருக்கு துக்கு தண்டனை நிறைவேற்றுங்கள் இனிமேல் இந்தமாதிரி குற்றம் நடக்காது பயம் வரும் இல்லையென்றால் ஜெயில் பெயில் வெளிய வந்து திரும்ப இதைத்தான் செய்வார்கள் பயம் இருக்காது


Raj
நவ 06, 2025 10:24

இந்த கயவர்களை நமது நீதிமன்றம் பெயில் கொடுத்து வெளியே அனுப்பிவிடும். மீண்டும் இதை தான் செய்வார்கள் தைரியத்துடன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் அல்லது கொலை குற்றவாளிகளுக்கு சிறையை பாதாள குழியில் வைத்து கடுமையான தண்டனை கொடுங்கள். இது போல குற்றவாளிகள் பூமியில் இருந்து ஒரு பயனும் இல்லை.


Thirumal Kumaresan
நவ 06, 2025 09:36

ஒரு சட்டமும் பாய வேண்டாம். நடுவெளியில் தண்டனை வழங்கப்பட வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாம். அவர்கள் வாழ்ந்து நாட்டுக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை. எவனுகளுக்கு தண்டனை வழங்கினால் மரண தண்டனை மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள்


Barakat Ali
நவ 06, 2025 07:55

குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லிவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ....


மொட்டை தாசன்...
நவ 06, 2025 07:37

வழக்கம் போல் வாய்தா மேல் வாய்தா மற்றும் மேல்முறையிடு என்று நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆதரவாக இல்லாமல் விரைவில் விசாரித்து கடுமையான தண்டனை வழங்கும் என நம்புவோமாக .


Mani . V
நவ 06, 2025 06:21

தம்பிகளா அடித்துக் கூடக் கேட்பார்கள். மாவுக்கட்டு போட்டுக் கூடக் கேட்பார்கள். இருந்தாலும் இதற்குப் பின்னால் "சார்" போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2025 05:18

வேதனையடைந்துள்ள அந்த மாணவியை மீண்டும் மீண்டும் துன்புறுத்தாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை