உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்மாயில் மூழ்கியோருக்கு இழப்பீடு ரூ. 3 லட்சமா: ராஜா

கண்மாயில் மூழ்கியோருக்கு இழப்பீடு ரூ. 3 லட்சமா: ராஜா

இளையான்குடி, : தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், கண்மாயில் மூழ்கி இறந்த சிறுமியருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் தானா என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ஆவேசத்துடன் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு சென்ற சிறுமியர் ஷோபிதா, 8, கிறிஸ்மிகா, 4, நேற்று சிறுநீர் கழிக்க சென்ற போது கண்மாயில் மூழ்கி பலியாகினர். சிறுமியரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் கூறியதாவது: ஆழிமதுரை அரசு துவக்கப் பள்ளியில் கழிப்பறை வசதி இருந்தும், மாணவியரை அங்கு செல்ல விடாமல் ஆசிரியர்கள் தடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆசிரியர்களே மாணவியரிடம் பிளாஸ்டிக் கப் கொடுத்து கண்மாய்க்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் சிறுமியர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், இச்சிறுமியருக்கு நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், அவர்களது பெற்றோர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

PATTALI
மார் 10, 2025 16:34

கண்மாயில் மூழ்கி இறந்த சிறுமியருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் தானா? என தலைப்பு போடுங்கள்.


என்றும் இந்தியன்
பிப் 21, 2025 16:17

ஆகவே யார் இறந்தாலும் கள்ளச்சாராயத்தினால் தான் இறந்தனர் என்று ஒரு certificate வாங்கி செல்லுங்கள் அவர்களுக்கு ரூ 10 லட்சம் confirmed நிச்சயம் என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே சரி தானே நான் சொல்வது


seshadri
பிப் 21, 2025 09:26

யாரானும் செத்து விட்டால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்பது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒரு வியாதியாக மாறி விட்டது. நிவாரணமாக பணம் கொடுப்பது ஓரளவுக்கு ஏற்று கொள்ள கொட்டியதுதான் ஆனால் அரசு வேலை என்பது நடக்க கூடிய விஷயம் இல்லை. ஏன் ராஜா அவர் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் எத்தனை பேருக்கு அந்த மாதிரி வேலை கொடுத்திருக்கிறார்கள் என்று கட்ட முடியுமா. நானும் ஓர் பி ஜெ பி ஆதரவாளன்தான்.


visu
பிப் 21, 2025 12:13

காசு கொடுத்தா ஒட்டு போடுறீங்க அப்புறம் இலவசம் அறிவித்தால் ஒட்டு அப்புறம் ஜெயிக்க எல்லோரும் அதைத்தான் செய்வார்கள் கேள்வி சரிதான் கள்ள சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் பாட்டாசு தொழிசாலையில் வேலைக்கு சென்று உயிரிழந்தால் 3 லட்சம் ஒரு நீயாயம் வேணமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை