உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசு போக்குவரத்து கழகத்தில் ‛இன்டர்வியூ முடிந்தும் கண்டக்டர், டிரைவர் பணி இழுபறி

 அரசு போக்குவரத்து கழகத்தில் ‛இன்டர்வியூ முடிந்தும் கண்டக்டர், டிரைவர் பணி இழுபறி

சிவகங்கை: நகராட்சி, கூட்டுறவு துறையில் ஊழியர் நியமனத்தில் லஞ்ச புகார் எதிரொலியால் அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வாகியுள்ள கண்டக்டர், டிரைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் சென்னை, கும்பகோணம், திருச்சி, மதுரை உட்பட 8 மண்டலங்களின் கீழ் 23,500 பஸ்கள் ஓடுகின்றன. இதில், அலுவலர், டெக்னீஷியன், டிரைவர், கண்டக்டர் என 1.4 லட்சம் பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது 25 ஆயிரம் காலிப்பணியிடம் உள்ளது. டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் தான் அதிகளவில் காலியாக உள்ளன. நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் தினக்கூலி அடிப்படையில் கண்டக்டர், டிரைவர்களுக்கு ரூ.700 தினசரி சம்பளத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் அரசு போக்குவரத்து கழகம் நியமித்து வருகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படும் கண்டக்டர், டிரைவர் பணிக்கு ரூ.50 ஆயிரம் வரை ஒப்பந்த நிறுவனம் டெபாசிட் பெற்று, வேலை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். தகுதி இருந்தும் பண நெருக்கடியால் ஏராளமானவர்கள் கண்டக்டர், டிரைவர் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். தற்காலிக டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை ஓட்டுவதால் விபத்துக்கள் நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அளவில் 8 மண்டலங்களிலும் முதற்கட்டமாக டிரைவர், கண்டக்டர் ஆகிய இரண்டு லைசென்ஸ்களையும் வைத்துள்ளோருக்கு நிரந்தர பணியிடம் வழங்கும் நோக்கில் எழுத்து, நேர்முக தேர்வு நடத்தி 1,598 பேரை கண்டக்டர், டிரைவராக நியமிக்க அக்., ல் பெயர் பட்டியலை தயாரித்து விட்டனர். ஆனால், இது வரை நியமன உத்தரவு வழங்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகராட்சி மற்றும் கூட்டுறவு துறையில் ஊழியர் பணியிடங்களை நிரப்பியதில் லஞ்ச புகார் எழுந்தது. இதனால் அரசு போக்குவரத்து கழகத்திலும் நியமனம் வழங்க அரசு யோசித்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி