உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி ஆட்சி ஆசை; காங்கிரசுக்கும் உண்டு: கார்த்தி

கூட்டணி ஆட்சி ஆசை; காங்கிரசுக்கும் உண்டு: கார்த்தி

சிங்கம்புணரி : ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான ஆசை காங்கிரசிற்கும் உண்டு'' என அக்கட்சி எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அவர் அளித்த பேட்டி:

'இண்டி' கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியது, கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் பா.ஜ., உடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்று விடுவர். இதனால் சாதாரண மக்கள் ஓட்டுகள் கூட அ.தி.மு.க.,வுக்கு கிடைக்காது. தி.மு.க., போல காங்கிரசும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, எல்லா கட்சிகளையும் போல, காங்கிரசுக்கும் இருக்கிறது. அதற்கு, தொகுதிகள் பரிவர்த்தனை சுமூகமாக நடக்க வேண்டும். தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எண்ணிக்கை அடிப்படையில் அந்த முடிவு எடுக்கலாம். இப்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. காமராஜர் குறித்த கருத்துக்கு திருச்சி சிவா விளக்கம் கொடுத்து விட்டார். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. எனவே, தி.மு.க., -- காங்., உறவு குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் கொலைகளுக்கும்; சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. அவற்றை எந்த அரசாலும் தடுக்க முடியாது. கூலிப்படை மூலமாக நடக்கும் சம்பவங்களை, போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதன் வாயிலாக தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 05:45

அப்போ முதலில் கூட்டணி கட்சிகாரண திருச்சி சிவா சொன்னது சரியா என்று அறிக்கை விடுங்க


சமீபத்திய செய்தி