உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட இந்திய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: திமுக அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு

வட இந்திய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: திமுக அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு

திமுக அமைச்சர்கள் சர்ச்சையாக பேசி, விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. ஓசி பஸ், ஓசி பயணம் என்பது போல, பல ஏளன கருத்துகளை கூறி வருகின்றனர். திமுக வேலூர் எம்பி கதிர் ஆனந்த், ' எங்கு பார்த்தாலும் பளபள வென்று தெரிகிறது. எல்லோரும் ' பேர் அன்ட் லவ்லி', 'பான்ட்ஸ் பவுடர்' போட்டு 'சிங்கார் கும்கும்' வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். எல்லாம் ஆயிரம் ரூபாய் செய்யும் வேலை ' என்று பேசினார். இத்தகைய பேச்சுக்கு பலரும் எதிர்வினை ஆற்றினாலும் திமுக.,வினரின் அநாகரிக பேச்சு நின்றபாடில்லை. வட இந்தியர்களைப் பற்றி ஏற்கனவே ‛‛பானி பூரி விற்க வந்தவர்கள்'' என்று பேசினார்கள். இப்போது இன்னொரு சர்ச்சை கிளம்பி உள்ளது.சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று (செப்.,25) நடைபெற்ற விழாவில் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், ''தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், மற்ற மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண்களை மனிதர்களாக கூட கருதாமல் இருந்துள்ளனர். இன்றைக்கும் கூட வட இந்தியாவில் அதே நிலை நீடிக்கிறது. வட இந்தியாவில் ஒரு பெண்ணிடம் சென்று, 'உங்கள் கணவர் எங்கு பணியாற்றுகிறார்?' என்ற கேள்வியே கேட்க முடியும். அதுவே, தமிழகத்தில் உள்ள பெண்களிடம், 'நீங்கள் எங்கு பணியாற்றுகிறீர்கள்?' என கேட்கலாம். இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை. தமிழகத்தில் நூறாண்டு காலமாக கொண்டுவரப்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்தது'' எனப் பேசினார்.இவரது பேச்சு, வட இந்திய பெண்கள் இன்னும், கணவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், அங்கு இன்னும் பெண்களை மதிப்பதில்லை என்பது போலவும் வெளிக்காட்டுவதாக பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பாஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனவலா கூறுகையில், ''மீண்டும் ஒருமுறை திமுக தனது எல்லையை கடந்துவிட்டது. மீண்டும் உ.பி., பீஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை அவமானப்படுத்தியுள்ளது'' என்றார்.டி. ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Suppan
செப் 30, 2025 16:01

கேவலம் 200 ரூபாய்க்காக இந்த அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கவேண்டுமா? நாகரீகம் இல்லாத ஜென்மங்கள்


Dv Nanru
செப் 27, 2025 09:32

இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் டிஆர்பி ராஜா சொல்லக்கூடாது


Bharathi
செப் 27, 2025 09:04

Yes all the male are at TASMAC and women's are forced to go for their daily hoods it is totally cos of Dravidian party....Proud of Tamil Nadu


Ramarajan
செப் 27, 2025 07:10

நீங்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம். அதில் உள்ள வயிற்றெரிச்சல் உங்களுக்கு.


Kasimani Baskaran
செப் 27, 2025 06:28

திராவிடத்தனம்.. தானே தமிழகத்துக்கு வந்தேறியாக வந்து தமிழனின் அடையாளத்தை மறைத்து திராவிட லேபல் ஒட்டியது லாவகம் என்ற மமதையில் பேசும் வார்த்தைகள் இவை. கலாச்சாரம் மறந்து பிள்ளைகளை வேறு திசை நோக்கி செல்ல அடிப்படை காரணமே இந்த பகுதி நேர பெற்றோர் கலாச்சாரம். ஒரு பிரிவினர் பொருளாதார சுபிட்சத்துக்காக வேலைக்கு செல்கிறார்கள் - அடுத்த பிரிவோ பொருளாதார சுதந்திரத்துக்காக - வேறு ஒரு பிரிவு கணவனை டாஸ்மாக்குக்கும் திராவிட போதைக்கும் அடிமையாக்கிவிட்டு குடும்ப பாரத்தை சுமக்க செல்கிறாள். நம்மை விட சந்ததி முக்கியம் என்ற நினைவு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.


சணமுகம்
செப் 27, 2025 00:20

வட மாநிலங்களில் பெண்களின் சராசரி வருவாயை தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் சராசரி வருவாயோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை வெளிப்படும்.


V Venkatachalam
செப் 26, 2025 22:08

திருட்டு பணம் இருக்குறதால வந்த திமிர் இவனுக்கு. எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டதுக்கு வேறும் வெள்ளை பேப்பரை காமிச்சு இதான் வெள்ளை அறிக்கை ன்னு சொல்றான். எவ்வளவு திமிர் இருந்தா இந்த மாதிரி செய்வான்? இவன் களிடமிருந்து திருட்டு பணம் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டு நடுத்தெருவில் விடோணும். அப்புடி செஞ்சால்தான் இவனை அடக்க முடியும். இங்கிதம் தெரியாத இடியட் இவன்..


Indian
செப் 26, 2025 21:47

கோடு போட்டா ரோடு போட்டுடுவாங்க பத்திரிகை காரங்க


Venugopal S
செப் 26, 2025 21:32

அமைச்சர் டி ஆர் பி ராஜா கருத்தில் என்ன தவறு உள்ளது? வட இந்தியாவில் இப்போதும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் இல்லை அல்லது குறைவு என்ற உண்மையை தானே சொல்லி இருக்கிறார்!


jaya
செப் 27, 2025 09:45

இங்கு தான் பெண்களுக்கு அரசு 1000 ரூபாய் காசு கொடுக்க வேண்டியிருக்கிறது , வட இந்தியாவில் சுய மரியாதையோடு வாழும் பெண்கள்


Padmasridharan
செப் 26, 2025 21:18

எத்தனை வட இந்தியப் பெண்களை பார்த்திருக்கிறார் இவர். அங்கிருப்பவர்கள்தான் இங்கு தென்னிந்தியாவில் வேலை செய்து வருகின்றனர். ஆண்களும் பெண்களும் வேலைக்கு போய்தான் தற்பொழுது குடும்பத்தில் குழந்தைகளை கவனிக்காமல் போதைக்கு அடிமையாகியுள்ளனர். சாப்பாடு ஆக்க முடியாமல் பள்ளிக்கூடத்தில் கொடுத்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடியவில்லை இம்மாணவர்களால். மதிப்பிற்குரிய பெண்களை இலவச பேருந்து பயணத்திற்கு அடிமையாக்கியுள்ளனர். அரசியல்வாதிகளின் வீட்டு பெண்களை எவ்வளவு பேர் வேலை செய்ய விடுகின்றனர் சாமி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை