உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1.15 கோடி கையாடல்: தம்பதிக்கு சிறை

ரூ.1.15 கோடி கையாடல்: தம்பதிக்கு சிறை

சென்னை:நீதிமன்ற பணத்தை கையாடல் செய்த, முன்னாள் ஊழியர், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் உறவினருக்கு, அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தினகராஜா, 64. இவர், பட்டுக்கோட்டையில் உள்ள, மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த, 2018 - 19ம் ஆண்டில், மோட்டார் வாகன விபத்து வழக்கில் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க, நீதிமன்ற கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டு இருந்த, 1.15 கோடி ரூபாயை கையாடல் செய்துள்ளார்.இதற்கு, தினகராஜா மனைவி மணிமொழி,60, உறவினர் பரமராசு,55 ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மீது தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, மதுரையில் உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தினகராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம்; மணிமொழிக்கு ஐந்து ஆண்டு சிறை, 80 லட்சம் ரூபாய் அபராதம்; பரமராசுக்கு நான்கு ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை