உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளை காட்டிலும் 2024ம் ஆண்டில் குறைந்துள்ளது. 2022ல் 1,597 கொலைகளும், 2023ல் 1,958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் 1,488ஆக குறைந்துள்ளது. குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன.அதேவேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் 3,084 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 2024ல் 3,243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் 1,885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023ல் 406ஆக பதிவாகிய நிலையில், 2024ல் 471ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024ம் ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. 2022ல் 4,968 போக்சோ வழக்குகளும், 2023ல் 4,581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. இது கடந்த 2024ம் ஆண்டில், 6,929 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sridhar
ஏப் 28, 2025 21:03

எல்லா பிரச்சனைக்கும் ப்ராஹ்மணர்கள் தான் கரணம் என்று சொல்லிட்டா போச்சு, சிம்பிள்.


sridhar
ஏப் 28, 2025 21:01

ஆண் பெண் உறவில் எதுவும் தவறில்லை என்ற காட்டுமிராண்டி சித்தாந்தம் தானே இங்கே ஆட்சி புரிகிறது .


Brahamanapalle murthy
ஏப் 28, 2025 18:42

For the past 2 years, there have been lot of arrests made for drug peddling and there is rampant drug abuse happening right from the children stage. Also people have been alcoholic and their senses are lost. Added to that is the Mobiles / porno materials being freely viewed. These are the main reasons for crimes happening against women and children. It is shudder to think even aged ladies are being molested and children under 5 years are also molested. Unless Government tackles the drug / alcoholic menace, these will continue to happen.


sing venky
ஏப் 28, 2025 16:48

தமிழ்நாட்டில் தோராயமாக ஒருகோடி பெண் குழந்தைகள் இருப்பதாக கொண்டால் இரண்டாயிரம் பெண்குழந்தைகளில் ஒருவர் போக்ஸோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார் என்று தெரிகிறது. இந்த அளவில் பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன. அரசுகள், அரசு அதிகாரிகள் காவல் துறையினர், நீதி துறையினர் என்ன செய்கின்றனர் ? ?? பாலிசி மேக்கர்ஸ் என்ன செய்கின்றனர்??? இது நாடா அல்லது சுடுகாடா?? உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கூட இப்படி நடக்குமா என்பது சந்தேகம் தான் வல்லரசு நாடாக ஆகும் முன் மக்களுக்கு நல்லரசு நாடாக இருப்பது அவசியமல்லவா ?


Yes your honor
ஏப் 28, 2025 15:25

இல்லவே இல்லை, சிறிது நேரத்திற்கு முன்பு கூட முதலமைச்சர் தமிழகத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினாரே, அப்போ அது என்ன பொய்யா?


K V Ramadoss
ஏப் 28, 2025 13:52

தமிழ் நாடே வெட்கி தலை குனிய வேண்டும்...


nagendhiran
ஏப் 28, 2025 13:51

விடியலை நம்பி புரோஜனம் இல்லை? நம்ம பிள்ளைகளை நாம்தான் இனி பார்த்துக்கனும்?


Rajah
ஏப் 28, 2025 13:46

அபாயத்தின் நிறம் சிவப்பு, மரணத்தின் நிறம் கருப்பு. இந்த இரண்டு நிறங்களும் ஒன்று சேர்ந்தால் எப்படியிருக்கும்?


Marai Nayagan
ஏப் 28, 2025 13:45

டாஸ்மாக் மாடல் கஞ்சா அரசு...திமுக. தமிழகத்தின் தலைவிதி...


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 28, 2025 13:41

திராவிட மாடல் விடியல் ஆட்சியில் தினசரி கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்குகள் என எது நடந்தாலும் கம்யூனிஸ்ட்கள், திருமாவளவன், வை.கோ போன்ற யோகியர்கள் வாயை திறக்க கூடாது கமிஷன் கட்டாகி விடும் ஆதலால் விடியல் ஆட்சியை பட்டும் படாமல் ஒப்புக் இரண்டு அறிக்கை விட்டுவிட்டு கம்முன்னு கமிஷன் வாங்கிக் கொண்டு மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையான எதிர்த்து விட்டு காலத்தை ஓட்டுவது தான் அழகு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை