உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்போதைய கணிப்பு தேர்தல் முடிவாகாது: வைகோ

இப்போதைய கணிப்பு தேர்தல் முடிவாகாது: வைகோ

கலை உலகில் உச்ச நட்சத்திரமான விஜய், த.வெ.க.,வை தொடங்கி நடத்துகிறார். பிரசார சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார். அவர் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் மக்கள், 7 மணி நேரம் காத்திருந்தது குறித்து விஜய்க்கு தகவல் தெரிவித்து இருப்பர். கூட்ட நெரிசலில் விபரீதம் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே யூகித்திருந்தால், சரியான முறையில் நிகழ்ச்சி நடந்திருக்கும். 41 பேர் பலியாகிய அந்த பதற்றத்தில், விஜய் சென்னை சென்று விட்டார். அவர் திருச்சியில் விடுதியில் தங்கியிருந்து ஒரு நாள் கழித்துகூட, பலியானோர் குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்து இருக்கலாம். கரூர் சம்பவத்தால், தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. இப்போது வெளியாகும் யூகங்கள், கணக்கெடுப்பெல்லாம் தேர்தல் முடிவுகளாக இருக்காது. - வைகோ பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை