வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாரிசு அரசியல் என்று திமுகவை குறை கூறியவர்கள் எல்லாம் அவரவர் கட்சிகளை எப்படி நடத்துகிறார்கள். பி ஜே பி யை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பிரைவேட் லிமிடெட் கட்சிகள்தான்.
ஆத்தா தீம்க்காவா அல்லது தாத்தா தீம்க்காவா அல்லது ஓட்டைப்பிரிக்க தனி அணியா அல்லது விசை அண்ணாவுடன் கூட்டா... தீம்க்கா ஜெயிக்க பலர் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் தீம்க்காவே சுக்குநூறாக உடைந்து ஊழல் கூட செய்ய முடியாத நிலை வந்தால் உடன் பிறப்புக்களுக்குக் கூட ஒரு பயனும் இல்லை.
தேமுதிக-வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அந்த கட்சி அவ்வளவு ஒர்த் இல்லை... மக்களில் பெரும்பாலோர் விஜயகாந்த் அனுதாபிகள் தானே தவிர, இனிமேலும் தேமுதிக-விற்கு ஓட்டு போடக் கூடியவர்கள் அல்ல... ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் இந்த கட்சிக்கு அதிகபட்சம் 500 முதல் 600 ஓட்டுகள் மட்டுமே இருக்கும். அதுவே அதிகம்... அதனால் மற்ற கட்சிகள் இனிமேலும் அதனை தூக்கி விட வேண்டியதோ, தூக்கி சுமக்க வேண்டியதோ இல்லை... அது ஒரு தேய்பிறை... அவ்வளவே... கட்சி ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கத்திலிருந்து என்றோ அது தடம் மாறிச் சென்று விட்டது... பலகாலமாக அரசியலுக்கு "இந்தா வர்றேன்... இந்தா வர்றேன்" என்று கூறிக்கொண்டிருந்த ரஜினி எவ்வாறு டீசென்ட்டாக ஒதுங்கிக் கொண்டது போல, தன் வாழ்நாளில் என்றைக்குமே அரசியலுக்கு வரப்போவதில்லை என தெளிவாக அறிக்கை விட்டு ஒதுங்கிக் கொண்ட அஜித் போல நீங்களும் கட்சியைக் கலைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியான வாழ்க்கை வாழுங்கள்... அதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் உண்மையான தொண்டு... இனிமேலும் நீங்கள் அரசியலில் இருந்து சாம்பாதித்து தான் உங்கள் வாழ்க்கையைத் தள்ள வேண்டும் என்பதில்லை... தற்போது உங்களிடம் இருக்கும் சொத்துகளே உங்களின் பல தலைமுறைகளுக்கு வரும்... எந்த காலத்திலும் ஆட்சி அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரப் போவதில்லை... இனி எந்த தேர்தலிலும் நீங்கள் ஜெயிக்கப் போவதுமில்லை... கள நிலவரம் உணருங்கள்... உங்களைச் சுற்றி இருக்கும் துதி பாடும் கும்பலின் புகழ் போதை வார்த்தைகளிலிருந்து வெளியே வாருங்கள்... ஒதுங்கி நின்று மக்களுக்கு சேவை செய்யுங்கள்... அதுவே போதும்...
மக்கள் கேப்டனை மட்டும் தான் நம்பினார்கள்... உங்களை அல்ல... கேப்டன் நல்ல உடல்நலத்துடன் இப்போது உயிரோடிருந்திருந்தால் அரசியல் களமே வேறாக இருந்திருக்கும்... மக்கள் மனதில் கேப்டனுக்கான இடத்தில் பிரேமலதாவுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ என்றைக்குமே இடமில்லை... இனிமேலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க நீங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்... யோசித்து முடிவெடுங்கள்...
பட்டி தொட்டி எங்கும் சென்று மக்களை சந்தியுங்க. பெட்டி பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டு கடைசியில் பெரிய பெட்டி தரும் கட்சியுடன் இணைந்து கொள்ளுங்க. மற்றக் கட்சிகளுக்கு காலை வாரி விடுங்கள். இது உங்க ஜாதகம்.
இந்தம்மாக்கு என்ன நினைப்பு ?? தன்னை பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்கவேண்டும் என்று. அ .தி.மு.க.வும், ம.தி.மு.க. வும் ஒன்றா ?? கடைசியில், இவராகவே ஒரு கட்டு கதையை அவிழ்த்துவிட்டு, பா.ஜ.க. கட்சியில் கூட்டணி வைப்பார் இவரது ஆசை என்ன ?? மகனுக்கு மத்திய அமைச்சை பதவி. எப்படி ? நோகாமல் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கி, அதன்மூலம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர, வீடு தேடி பா.ஜ.க. வரும் என்று வீராப்பு.
அது வரைக்கும் கட்சி கரைந்து விஜய் கட்சியிலோ திமுகவிலோ சங்கமம் ஆகாம இருக்கணுமே